திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

வெய்டின திருவாசக ஆராய்ச்சியுரை 596 பப்ளன்? தந்த அந்தமிலா ஆனந்தம்" (அம்மானை 3) என அடிகள் அருளியமை யுங் காண்க. அவ்வானந்தத்தினை ஈந்தருளும் தன்மை என்றும் ஒரே படித்தாயிருத்தலின் 'பண்டைப் பரிசே ஈந்தருளும்" என்றார். பழ வடியார் என்றது அணுக்கன் தொண்டர்களை. ஈந்தருளும் ஆறு என முடிக்க. அண்டம் வியப்புறுமா என்பதில் அண்டம் உயிர்களுக்கு ஆகு பெயர். வியப்புறுதல் - அதிசயத்தால் புகழ்தல், ஆறு என்பது ஈறு கெட்டு நின்றது. ஆற்றைப் பாடுதும் என இரண்டாவது விரிக்க. பிறையான் பெருந்துறையான் புரிநூலான் மாவூர்தியான் கண் டங்கரியான் செம்மேனியான் வெண்ணீற்றான் அண்டமுதலாயினான் அந்தமிலா ஆனந்தம் பழவடியார்க் கீந்தருளும் ஆற்றினைப் பாடுதும் என முடிபு செய்க. இதன் கண், அந்தமிலா ஆனந்தம், பண்டைப் பரிசே. பழவடி யார்க் கீந்தருளும் ஆறு பாடுதும் என்பதனால் ஆனந்தக் களிப்பு என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க, 9 184 Fureter விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளு மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்கா ணம்மானாய். (SNI) ப - ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனை - விண்ணுலகங்களை அரசாளுகின்ற தேவர்களுக்கும் மேலாகிய அறிவு நூற்பொருள்களை உபதேசிக்கும் அந்தணனை, மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பு ஆகி நின்றானை - மண் ணுலகத்தை ஆட்சிபுரியும் அரசர்களுக்கும் உயர்வினைத்தரும் பொரு ளாக நின்றவனை, தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட் டானை - குளிர்ச்சி பொருந்திய தமிழ் மொழியினைப் பாதுகாக்கும் அருளையுடைய பாண்டிநாட்டையுடையவனை, பெண் ஆளும் பாகனை- உமையம்மையால் ஆளப்படும் இடப்பாகத்தையுடையவனை, பேணு பெருந்துறையில் கண் ஆர் கழல் காட்டி - யாவரும் விரும்புகின்ற திருப்பெருந்துறையில் கண்களுக்கு அழகு நிறைந்த தன் திருவடி களைக் காட்டி யருளி, நாயேனை ஆண்டுகொண்ட - இழிவுடையேனை யும் ஆட்கொண்டருளிய, அண்ணாமலையானைப் பாடுதும் - திருவண் ணாமலையின் கண்ணுள்ள அண்ணலைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக. விண்ணுலகங்களை ஆளும் தேவர்க்கும் மேலாய வேதியனாயுள்ளவ னும், மண்ணுலகங்களை ஆளும் மன்னவர்களுக்கு மாண்பாய் நின்ற
வெய்டின திருவாசக ஆராய்ச்சியுரை 596 பப்ளன் ? தந்த அந்தமிலா ஆனந்தம் ( அம்மானை 3 ) என அடிகள் அருளியமை யுங் காண்க . அவ்வானந்தத்தினை ஈந்தருளும் தன்மை என்றும் ஒரே படித்தாயிருத்தலின் ' பண்டைப் பரிசே ஈந்தருளும் என்றார் . பழ வடியார் என்றது அணுக்கன் தொண்டர்களை . ஈந்தருளும் ஆறு என முடிக்க . அண்டம் வியப்புறுமா என்பதில் அண்டம் உயிர்களுக்கு ஆகு பெயர் . வியப்புறுதல் - அதிசயத்தால் புகழ்தல் ஆறு என்பது ஈறு கெட்டு நின்றது . ஆற்றைப் பாடுதும் என இரண்டாவது விரிக்க . பிறையான் பெருந்துறையான் புரிநூலான் மாவூர்தியான் கண் டங்கரியான் செம்மேனியான் வெண்ணீற்றான் அண்டமுதலாயினான் அந்தமிலா ஆனந்தம் பழவடியார்க் கீந்தருளும் ஆற்றினைப் பாடுதும் என முடிபு செய்க . இதன் கண் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே . பழவடி யார்க் கீந்தருளும் ஆறு பாடுதும் என்பதனால் ஆனந்தக் களிப்பு என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க 9 184 Fureter விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளு மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்கா ணம்மானாய் . ( SNI ) - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனை - விண்ணுலகங்களை அரசாளுகின்ற தேவர்களுக்கும் மேலாகிய அறிவு நூற்பொருள்களை உபதேசிக்கும் அந்தணனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பு ஆகி நின்றானை - மண் ணுலகத்தை ஆட்சிபுரியும் அரசர்களுக்கும் உயர்வினைத்தரும் பொரு ளாக நின்றவனை தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட் டானை - குளிர்ச்சி பொருந்திய தமிழ் மொழியினைப் பாதுகாக்கும் அருளையுடைய பாண்டிநாட்டையுடையவனை பெண் ஆளும் பாகனை உமையம்மையால் ஆளப்படும் இடப்பாகத்தையுடையவனை பேணு பெருந்துறையில் கண் ஆர் கழல் காட்டி - யாவரும் விரும்புகின்ற திருப்பெருந்துறையில் கண்களுக்கு அழகு நிறைந்த தன் திருவடி களைக் காட்டி யருளி நாயேனை ஆண்டுகொண்ட - இழிவுடையேனை யும் ஆட்கொண்டருளிய அண்ணாமலையானைப் பாடுதும் - திருவண் ணாமலையின் கண்ணுள்ள அண்ணலைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக . விண்ணுலகங்களை ஆளும் தேவர்க்கும் மேலாய வேதியனாயுள்ளவ னும் மண்ணுலகங்களை ஆளும் மன்னவர்களுக்கு மாண்பாய் நின்ற