திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை வனும், பாண்டி நாட்டையுடையவனும், பெண்ணாளும் பாகத்தையு டையவனும், திருப்பெருந்துறையில் தன் திருவடிகளைக் காட்டியருளி, நாயேனை ஆண்டுகொண்ட திருவண்ணாமலையின் கண்ணுள்ளவனுமாகிய இறைவனைப்பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம். விண்ணாளும் தேவர் என விண்ணிலுள்ள உலகங்களுக்கு அதி பர்களான இந்திரன் பிரமன், விண்டு முதலான தேவர்களை எடுத் துக் கூறினார், எழுவகைப் பிறப்பினுள் உயர்ந்தோராகலின். வேதி யன் -வேதத்தையுடையவன்; வேதம் - அறிவு நூல். அவை மறை ஆகமங்கள். மண்ணாளு மன்னவர்க்கு மாண்பாகி நிற்றல் குரிய இறையென்னும் பெயர் நீதிநெறி தவறாத *அரசர்க்கும் உளதாகும் வண்ணம் அவர்கள் ஒழுகலாற்றினை அறிவுறுத்தி நிற்றல். அன்றியும், தானே பாண்டிய மன்னனாகி மன்னர்க்கு மாண்பாகுந் தன்மையைக் காட்டியருளின தன்மையும் கருதத்தக்கது. தனக் 597 தண்ணார் தமிழ் அளிக்கும் தண்என்பதிலுள்ள பெயரெச்சம் பாண்டி நாட்டான் என்பதில் ஆன் விகுதியால் உணர்த்தப்படும் பெயரோடு முடியும். எனவே இறைவன் தண்ணார் தமிழளிக்கும் அருளுடைய னாதலும் பாண்டி நாட்டையுடையனாதலும் பெறப்படும். இறைவனே தமிழ் வளர்த்தான் என்பது, சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளு முறைவா னுயர் மதிற்கூடலி னாய்ந்த வொண் தீந்தமிழின்" (20) என்னும் திருக்கோவையாரானுமறிக. மதுரைத்தொகையாக்கினா னும் பெற்றொன்றுயர்த்த பெருமான்" (சம்பந்தர்) என்னும் தமிழ் மறையுங் காண்க. அவன் அருள்வழியே ஏனைய பாண்டிய மன்னர் களும் தமிழை வளர்ப்பாராயினர். பெண்ணாளும் பாகன் என்றதனால் இறைவனது அர்த்த நாரீசுவர வடிவங் கூறினார். 66 *பெண்பாவு பாகத்தான்" பெண்ணொர் கூறினர்” பெண்ணொர் பாகம் ஈரெழிற் கோலமாகி" 'பாதித் தன் திருவுருவிற் பெண்கொண்டானை" "பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்" (ஞான.182-7) (ஞான். 224-6) (ஞான.316-9) (நாவு.239-1) (நாவு. 42-7) எனத் தேவாரத்தும் வருவன காண்க. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறை யென்று வைக்கப்படும்' குறள்: 388
திருவம்மானை வனும் பாண்டி நாட்டையுடையவனும் பெண்ணாளும் பாகத்தையு டையவனும் திருப்பெருந்துறையில் தன் திருவடிகளைக் காட்டியருளி நாயேனை ஆண்டுகொண்ட திருவண்ணாமலையின் கண்ணுள்ளவனுமாகிய இறைவனைப்பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம் . விண்ணாளும் தேவர் என விண்ணிலுள்ள உலகங்களுக்கு அதி பர்களான இந்திரன் பிரமன் விண்டு முதலான தேவர்களை எடுத் துக் கூறினார் எழுவகைப் பிறப்பினுள் உயர்ந்தோராகலின் . வேதி யன் -வேதத்தையுடையவன் ; வேதம் - அறிவு நூல் . அவை மறை ஆகமங்கள் . மண்ணாளு மன்னவர்க்கு மாண்பாகி நிற்றல் குரிய இறையென்னும் பெயர் நீதிநெறி தவறாத * அரசர்க்கும் உளதாகும் வண்ணம் அவர்கள் ஒழுகலாற்றினை அறிவுறுத்தி நிற்றல் . அன்றியும் தானே பாண்டிய மன்னனாகி மன்னர்க்கு மாண்பாகுந் தன்மையைக் காட்டியருளின தன்மையும் கருதத்தக்கது . தனக் 597 தண்ணார் தமிழ் அளிக்கும் தண்என்பதிலுள்ள பெயரெச்சம் பாண்டி நாட்டான் என்பதில் ஆன் விகுதியால் உணர்த்தப்படும் பெயரோடு முடியும் . எனவே இறைவன் தண்ணார் தமிழளிக்கும் அருளுடைய னாதலும் பாண்டி நாட்டையுடையனாதலும் பெறப்படும் . இறைவனே தமிழ் வளர்த்தான் என்பது சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளு முறைவா னுயர் மதிற்கூடலி னாய்ந்த வொண் தீந்தமிழின் ( 20 ) என்னும் திருக்கோவையாரானுமறிக . மதுரைத்தொகையாக்கினா னும் பெற்றொன்றுயர்த்த பெருமான் ( சம்பந்தர் ) என்னும் தமிழ் மறையுங் காண்க . அவன் அருள்வழியே ஏனைய பாண்டிய மன்னர் களும் தமிழை வளர்ப்பாராயினர் . பெண்ணாளும் பாகன் என்றதனால் இறைவனது அர்த்த நாரீசுவர வடிவங் கூறினார் . 66 * பெண்பாவு பாகத்தான் பெண்ணொர் கூறினர் பெண்ணொர் பாகம் ஈரெழிற் கோலமாகி ' பாதித் தன் திருவுருவிற் பெண்கொண்டானை பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன் ( ஞான.182-7 ) ( ஞான் . 224-6 ) ( ஞான.316-9 ) ( நாவு.239-1 ) ( நாவு . 42-7 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறை யென்று வைக்கப்படும் ' குறள் : 388