திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பேணுதல் விரும்புதல் " பெருங்கொடையான் பேணான் வெகுளி" (குறள் - 526) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. வழிபடுதலு மாம். கண்ணார் கழல் - கண்ணுக்கு அழகு நிறைந்த கழல். "கண்ணார் கழல் பரவு பாடல் பத்தும்" (ஞான - 59 - 11) கண்ணார் கழல் காலற் செற்ற துண்டோ" (நாவு. 310 -4) எனத் தேவாரத்தும் வருவன காண்க. கண்ணார் என்பதற்கு இதுவே பொருளாதல், 'கண்ணார் கண்ணி " (பொருந. -148) என்பதற்கு கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்திமாலை என நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமை யானும் தெளியப்படும். பெருந்துறையிற் கழல்காட்டி ஆட்கொண்ட என இயையும். 598 "நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி* (பொற்.8) ''பாரிடைப் பாதங்கள்காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட" (குயிற். 9) "அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி ...ஆட்கொண்டருளும் (குயிற் 10) மென்மலர்க் கழல் காட்டி ஆடுவித்தென தகம் புகுந்தாண்டதோர்" (அற்புதப்.5) (அற்புத.7) Hri "மலரடி யிணைகாட்டி அப்பன் என்னை வந்தாண்டுகொண்டருளிய அற்புதம்" "இணைமலர்க் சுழல்காட்டி அறிவு தந்தெனை யாண்டுகொண்டருளிய'' (அற்.10) "தன்கழல்காட்டிக் கசிந்துருகக், கேதங் கெடுத்தென்னையாண்டருளும் கிடப்பறிவார்' (வார்த்தை.9) *இணைமல ரடிகாட்டி, முன்பே யென்னை யாட்கொண்டமுனிவர்" (எண்ணப்.3) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. வீடு பேற்றிற்கு இடம் திருவடியாகலின் "கழல் காட்டி" என்றார். இத் திருஅம்மானை திரு வண்ணாமலையில் அருளிச்செய்யப்பட்டமையின் அண்ணாமலையானை" என்றார். வேதியனை, மாண்பாகி நின்றானை, பாண்டிநாட்டானை, பெண்ணா ளும் பாகனை, அண்ணாமலையானைப் பாடுதும் என முடிக்க. இதன் கண் “கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட” என் பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க. 10
திருவாசக ஆராய்ச்சியுரை பேணுதல் விரும்புதல் பெருங்கொடையான் பேணான் வெகுளி ( குறள் - 526 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . வழிபடுதலு மாம் . கண்ணார் கழல் - கண்ணுக்கு அழகு நிறைந்த கழல் . கண்ணார் கழல் பரவு பாடல் பத்தும் ( ஞான - 59 - 11 ) கண்ணார் கழல் காலற் செற்ற துண்டோ ( நாவு . 310 -4 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . கண்ணார் என்பதற்கு இதுவே பொருளாதல் ' கண்ணார் கண்ணி ( பொருந . -148 ) என்பதற்கு கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்திமாலை என நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமை யானும் தெளியப்படும் . பெருந்துறையிற் கழல்காட்டி ஆட்கொண்ட என இயையும் . 598 நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி * ( பொற் .8 ) ' ' பாரிடைப் பாதங்கள்காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட ( குயிற் . 9 ) அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி ... ஆட்கொண்டருளும் ( குயிற் 10 ) மென்மலர்க் கழல் காட்டி ஆடுவித்தென தகம் புகுந்தாண்டதோர் ( அற்புதப் .5 ) ( அற்புத .7 ) Hri மலரடி யிணைகாட்டி அப்பன் என்னை வந்தாண்டுகொண்டருளிய அற்புதம் இணைமலர்க் சுழல்காட்டி அறிவு தந்தெனை யாண்டுகொண்டருளிய ' ' ( அற் .10 ) தன்கழல்காட்டிக் கசிந்துருகக் கேதங் கெடுத்தென்னையாண்டருளும் கிடப்பறிவார் ' ( வார்த்தை .9 ) * இணைமல ரடிகாட்டி முன்பே யென்னை யாட்கொண்டமுனிவர் ( எண்ணப் .3 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . வீடு பேற்றிற்கு இடம் திருவடியாகலின் கழல் காட்டி என்றார் . இத் திருஅம்மானை திரு வண்ணாமலையில் அருளிச்செய்யப்பட்டமையின் அண்ணாமலையானை என்றார் . வேதியனை மாண்பாகி நின்றானை பாண்டிநாட்டானை பெண்ணா ளும் பாகனை அண்ணாமலையானைப் பாடுதும் என முடிக்க . இதன் கண் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட என் பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க . 10