திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

185 திருவம்மானை செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த வுள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 599 = . தப் ப-ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, செப்பு ஆர் முலைபங்கன் - செப்புப் போலும் இளைய தனங்களையுடைய உமையம் மையினது கூற்றையுடையவனும், தென்னன் - தென்னாடுடையவ னும், பெருந்துறையான் திருப்பெருந்துறையுடையவனும், பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான் - தவறாமல் தன் திருவடியை அடைந்தவரது மனத்தை உருகச்செய்யும் தன்மை யையுடையவனும், அ பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த- அந்தப் பாண்டிநாட்டினைச் சிவலோகமாகச் செய்த, அப்பு ஆர் சடை அப்பன் - கங்கைநதி பொருந்திய சடையையுடைய எந்தையும், ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தர் இருக்கும்- பேரின்பத்தினைத் தருகின்ற நீண்ட வீரக்கழலணிந்த திருவடிகளையே ஈடாக ஏற்றுக்கொண்டு தம்முடையதென எண்ணியிருந்த உடல் பொருள் ஆவி மூன்றினையும் அதற்குப் பொருளாக ஒப்புவித்த மனத் தினையுடைய மெய்யடியார் களது உள்ளத்தே குடிகொண்டிருக்கும், அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் - எல்லாவற்றிற்கும் அப்பாலாயுள்ள சுத்த மாயா புவனங்களுக்கும் அப்பாலாய் நின்றவனுமாகிய இறைவ னைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக. உமையம்மை பங்கனும், தென்னனும், திருப்பெருந்துறையா னும், தனது திருவடியை யடைந்தவரது மனத்தினை உருக்கும் தன் மையையுடையவனும். பாண்டிநாட்டைச் சிவலோகமாக்குவித்த சடையப்பனும், தனது ஆனந்தத்தைத் தருகின்ற திருவடிகளை ஈடாக ஏற்றுக்கொண்டு தம்முடைய உடல் பொருள் ஆவி மூன்றினையும் அதற்குப் பொருளாக ஒப்புவித்த மெய்யடியார்களது உள்ளத்தே குடிகொண்டிருக்கும் அப்பாலைக்கு அப்பாலாய் நின்றவனுமாகிய இறைவனைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம். செப்பு ஆர் முலை - செப்புப்போலும் இளைய முலை. "செப்பு நேர் முலை மடவரலியர்'” (அதிசயப் 1) எனவும் "செப்புற்ற கொங்கையர்" (திருக்கோவை 354) எனவும் அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. ஆர் - உவமவுருவு. முலைபங்கன் என்றது செப்புப் போலும் முலைகளை யுடைய உமையம்மையது கூற்றையுடையான் என்றவாறு.
185 திருவம்மானை செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த வுள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய் . 599 = . தப் - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே செப்பு ஆர் முலைபங்கன் - செப்புப் போலும் இளைய தனங்களையுடைய உமையம் மையினது கூற்றையுடையவனும் தென்னன் - தென்னாடுடையவ னும் பெருந்துறையான் திருப்பெருந்துறையுடையவனும் பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான் - தவறாமல் தன் திருவடியை அடைந்தவரது மனத்தை உருகச்செய்யும் தன்மை யையுடையவனும் பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த அந்தப் பாண்டிநாட்டினைச் சிவலோகமாகச் செய்த அப்பு ஆர் சடை அப்பன் - கங்கைநதி பொருந்திய சடையையுடைய எந்தையும் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தர் இருக்கும் பேரின்பத்தினைத் தருகின்ற நீண்ட வீரக்கழலணிந்த திருவடிகளையே ஈடாக ஏற்றுக்கொண்டு தம்முடையதென எண்ணியிருந்த உடல் பொருள் ஆவி மூன்றினையும் அதற்குப் பொருளாக ஒப்புவித்த மனத் தினையுடைய மெய்யடியார் களது உள்ளத்தே குடிகொண்டிருக்கும் அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் - எல்லாவற்றிற்கும் அப்பாலாயுள்ள சுத்த மாயா புவனங்களுக்கும் அப்பாலாய் நின்றவனுமாகிய இறைவ னைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக . உமையம்மை பங்கனும் தென்னனும் திருப்பெருந்துறையா னும் தனது திருவடியை யடைந்தவரது மனத்தினை உருக்கும் தன் மையையுடையவனும் . பாண்டிநாட்டைச் சிவலோகமாக்குவித்த சடையப்பனும் தனது ஆனந்தத்தைத் தருகின்ற திருவடிகளை ஈடாக ஏற்றுக்கொண்டு தம்முடைய உடல் பொருள் ஆவி மூன்றினையும் அதற்குப் பொருளாக ஒப்புவித்த மெய்யடியார்களது உள்ளத்தே குடிகொண்டிருக்கும் அப்பாலைக்கு அப்பாலாய் நின்றவனுமாகிய இறைவனைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம் . செப்பு ஆர் முலை - செப்புப்போலும் இளைய முலை . செப்பு நேர் முலை மடவரலியர் ' ( அதிசயப் 1 ) எனவும் செப்புற்ற கொங்கையர் ( திருக்கோவை 354 ) எனவும் அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . ஆர் - உவமவுருவு . முலைபங்கன் என்றது செப்புப் போலும் முலைகளை யுடைய உமையம்மையது கூற்றையுடையான் என்றவாறு .