திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை களிலும் தமது அறிவாற் தன்னைத்தேடவும் அவர்களுக்கு அரியனாகி, என்னையும் தன் இன் அருளால் இப்பிறவி ஆட்கொண்டு - ஒன்றும் போதா நாயேனையும் தனது இனிய அருளால் எளிதாக ஞானாசாரிய னாக வலிய எழுந்தருளி வந்து இம் மானுடப்பிறவியிலேயே அடிமை கொண்டு, இனி பிறவாமே காத்து - அதனால் இனி யான் பிறப்பு அடையாமல் பாதுகாத்தருளி, மெய்ப்பொருட்கண் தோற்றமாய் - உண்மைப் பொருள்களிடத்துத் தோன்றுதலுடையவனாய், மெய்யே நிலை பேறாய் - உண்மையே நிலைக்களமாக உடையவனாய், எப்பொருட் சார்பாய், கும் தானேயாய் - எல்லாப் பொருள்களுக்கும் தானே யாவைக்கும் வீடாகும் - எல்லா வுயிர்களுக்கும் வீடு பேறாகும், அப் பொருளாம் நம் சிவனை பாடுதும் - அப்பரம்பொருளாயுள்ள நம் சிவ பெருமானைப் புகழ்ந்து பாடிக்கொண்டு விளையாடுவோமாக. 602 அம்மானாய், மைப்பொலியுங் கண்ணிகேள்; திருமாலும் பிரம னும் இந்திரனும் எல்லாப் பிறவிகளிலும் தேடவும் அவர்க்கு அரிய னாகி, என்னையும் தனது இனிய அருளால் ஞானாசாரியனாக வலிய எழுந் தருளி வந்து, இம்மானுடப் பிறவியில் அடிமைகொண்டருளி, அதனால் இனியான் பிறப்பு அடையாமற் பாதுகாத்தருளி, உண்மைப் பொருள் களிடத்துத் தோன்றுதலுடையவனாய், உண்மையே நிலைக்களமாக வுடையவனாய், எல்லாப் பொருட்கும் தானே சார்பாய், யாவைக் கும் வீடு பேறாகும், அப் பரம்பொருளாயுள்ள நம் சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக்கொண்டு விளையாடுவோமாக. மை - அஞ்சனம். மைப்பொலியுங் கண் என்பதற்கு, பொலிவு பெற்று விளங்குதற்கேதுவாகிய அழகிய கண் எனினுமமை யும். கண்ணி என்றது தம்மொடு அம்மனையாடும் பெண்ணொருத்தியை நோக்கி விளித்தவாறு. அம்மானாய் என விளித்தவளையே மைப்பொலி யுங் கண்ணி என மற்றொருவாற்றானும் விளித்தவாறு. கண்ணி - அண் மைவிளி. மை மாலய னோடிந்திரனும் எப்பிறவியுந்தேட என்றது தேவத் தலை வர்களாகிய திருமால் முதலியோர் தமது அறிவாலும் முயற்சியாலும் இறைவனைத்தேட என்றவாறு. தேட என்றதன் ஆற்றலால் அவர்க ளுக்கு அரியனாகி என்பது வருவிக்கப்பட்டது. "அருமந்த தேவர் அயன்றிருமாற் கரிய சிவம்" (தெள் 5) எனவும், "திசைமுகன் மாற் கரியோன்" (திருக்கோவை 300) எனவும் வருவன காண்க. என்னையும் என்பதில் உம்மை இழிவு சிறப்பு. இறைவன் திருவ ருள் இனிமைபயத்தலின் "இன்னருள்" என்றார். 'மண்ணுழை யாவு மறிதில்லை மன்னன தின்னருள்போல்” (347) எனத் திருக்கோவையா
திருவாசக ஆராய்ச்சியுரை களிலும் தமது அறிவாற் தன்னைத்தேடவும் அவர்களுக்கு அரியனாகி என்னையும் தன் இன் அருளால் இப்பிறவி ஆட்கொண்டு - ஒன்றும் போதா நாயேனையும் தனது இனிய அருளால் எளிதாக ஞானாசாரிய னாக வலிய எழுந்தருளி வந்து இம் மானுடப்பிறவியிலேயே அடிமை கொண்டு இனி பிறவாமே காத்து - அதனால் இனி யான் பிறப்பு அடையாமல் பாதுகாத்தருளி மெய்ப்பொருட்கண் தோற்றமாய் - உண்மைப் பொருள்களிடத்துத் தோன்றுதலுடையவனாய் மெய்யே நிலை பேறாய் - உண்மையே நிலைக்களமாக உடையவனாய் எப்பொருட் சார்பாய் கும் தானேயாய் - எல்லாப் பொருள்களுக்கும் தானே யாவைக்கும் வீடாகும் - எல்லா வுயிர்களுக்கும் வீடு பேறாகும் அப் பொருளாம் நம் சிவனை பாடுதும் - அப்பரம்பொருளாயுள்ள நம் சிவ பெருமானைப் புகழ்ந்து பாடிக்கொண்டு விளையாடுவோமாக . 602 அம்மானாய் மைப்பொலியுங் கண்ணிகேள் ; திருமாலும் பிரம னும் இந்திரனும் எல்லாப் பிறவிகளிலும் தேடவும் அவர்க்கு அரிய னாகி என்னையும் தனது இனிய அருளால் ஞானாசாரியனாக வலிய எழுந் தருளி வந்து இம்மானுடப் பிறவியில் அடிமைகொண்டருளி அதனால் இனியான் பிறப்பு அடையாமற் பாதுகாத்தருளி உண்மைப் பொருள் களிடத்துத் தோன்றுதலுடையவனாய் உண்மையே நிலைக்களமாக வுடையவனாய் எல்லாப் பொருட்கும் தானே சார்பாய் யாவைக் கும் வீடு பேறாகும் அப் பரம்பொருளாயுள்ள நம் சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக்கொண்டு விளையாடுவோமாக . மை - அஞ்சனம் . மைப்பொலியுங் கண் என்பதற்கு பொலிவு பெற்று விளங்குதற்கேதுவாகிய அழகிய கண் எனினுமமை யும் . கண்ணி என்றது தம்மொடு அம்மனையாடும் பெண்ணொருத்தியை நோக்கி விளித்தவாறு . அம்மானாய் என விளித்தவளையே மைப்பொலி யுங் கண்ணி என மற்றொருவாற்றானும் விளித்தவாறு . கண்ணி - அண் மைவிளி . மை மாலய னோடிந்திரனும் எப்பிறவியுந்தேட என்றது தேவத் தலை வர்களாகிய திருமால் முதலியோர் தமது அறிவாலும் முயற்சியாலும் இறைவனைத்தேட என்றவாறு . தேட என்றதன் ஆற்றலால் அவர்க ளுக்கு அரியனாகி என்பது வருவிக்கப்பட்டது . அருமந்த தேவர் அயன்றிருமாற் கரிய சிவம் ( தெள் 5 ) எனவும் திசைமுகன் மாற் கரியோன் ( திருக்கோவை 300 ) எனவும் வருவன காண்க . என்னையும் என்பதில் உம்மை இழிவு சிறப்பு . இறைவன் திருவ ருள் இனிமைபயத்தலின் இன்னருள் என்றார் . ' மண்ணுழை யாவு மறிதில்லை மன்னன தின்னருள்போல் ( 347 ) எனத் திருக்கோவையா