திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை ரினும் வருதல்காண்க. இன்னருளால் என்ற ஆற்றலால் எளிதாக ஞானாசாரியனாக வலிய வந்து என்பது வருவிக்கப்பட்டது. கொண்டதனால் பிறவிக்கு ஏதுவாகிய மூலம் அழிந்தமையின் பிறவாமே காத்து" என்றார். சதசத்தாகிய உயிரின் கண்ணும், சட சத்தாகிய சுத்தமாயையின் கண்ணும், இறைவன் வெளிப்பாடு உள தாதல் பற்றி "மெய்ப்பொருட் கண் தோற்றமாய்'" என்றார். மெய்யே நிலைபேறாய் என்பது இறைவன் சுத்த சத்தாகலின் அத்தன் மையே அவனுக்கு நிலைக்களனாய் என்றவாறு. மெய்ப்பொருட்கண் தோற்றுதலும் மெய்யின் கண் நிலைபெறுத் லும் உடையனாயினும் நிலையுடைய பொருளும் நிலையில் பொருளு மாகிய எல்லாப் பொருள்களும் இறைவனையே ஆதாரமாகக்கொண்டு நிற்றலின் '"எப்பொருட்குந் தானேயாய்" என்றார். எல்லாவுயிர்களும் பக்குவ நிலையடைந்தபொழுது பெறும் வீடுபேறாயுள்ளவன் இறைவ னாதல் பற்றி ''யாவைக்கும் வீடாகும் சிவனை" என்றார். மண்பொருந்தி வாழ்பவர்க்கு மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை' (12 - 5) 99 எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியமையுங் காண்க. 603 ஆட் 'இனிப் 187 கையார் வளை சிலம்பக் காதார் குழையாட அப்பொருள் என்பதில் அ என்னும் பண்டறி சுட்டு இறைவனது மேன்மையையுணர்த்தியது. "பற்றலாவதோர் நிலையிலாப் பரம் பொருள் அப்பொருள் பாராதே" (அதிசயப் 9) என வருதலுங் காண்க. இதன் கண், "எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடா கும் அப்பொருளா நஞ்சிவனை" என்பதனால் ஆனந்தக்களிப்பு என் னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 12 மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை யெங்குஞ் செறிந்தானை யன்பர்க்கு மெய்யானை யல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்கா ணம்மானாய். ப-ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, கை ஆர் வளை சிலம்ப - கையிற் பொருந்திய வளைகள் ஒலிக்கவும், காது ஆர் குழை ஆட - காதிற் பொருந்திய மகரக் குழை அசையவும், மை ஆர் குழல் புரள - கருமை பொருந்திய கூந்தல் அவிழ்ந்து புரளவும், தேன் பாய -
திருவம்மானை ரினும் வருதல்காண்க . இன்னருளால் என்ற ஆற்றலால் எளிதாக ஞானாசாரியனாக வலிய வந்து என்பது வருவிக்கப்பட்டது . கொண்டதனால் பிறவிக்கு ஏதுவாகிய மூலம் அழிந்தமையின் பிறவாமே காத்து என்றார் . சதசத்தாகிய உயிரின் கண்ணும் சட சத்தாகிய சுத்தமாயையின் கண்ணும் இறைவன் வெளிப்பாடு உள தாதல் பற்றி மெய்ப்பொருட் கண் தோற்றமாய் ' என்றார் . மெய்யே நிலைபேறாய் என்பது இறைவன் சுத்த சத்தாகலின் அத்தன் மையே அவனுக்கு நிலைக்களனாய் என்றவாறு . மெய்ப்பொருட்கண் தோற்றுதலும் மெய்யின் கண் நிலைபெறுத் லும் உடையனாயினும் நிலையுடைய பொருளும் நிலையில் பொருளு மாகிய எல்லாப் பொருள்களும் இறைவனையே ஆதாரமாகக்கொண்டு நிற்றலின் ' எப்பொருட்குந் தானேயாய் என்றார் . எல்லாவுயிர்களும் பக்குவ நிலையடைந்தபொழுது பெறும் வீடுபேறாயுள்ளவன் இறைவ னாதல் பற்றி ' ' யாவைக்கும் வீடாகும் சிவனை என்றார் . மண்பொருந்தி வாழ்பவர்க்கு மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை ' ( 12 - 5 ) 99 எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியமையுங் காண்க . 603 ஆட் ' இனிப் 187 கையார் வளை சிலம்பக் காதார் குழையாட அப்பொருள் என்பதில் என்னும் பண்டறி சுட்டு இறைவனது மேன்மையையுணர்த்தியது . பற்றலாவதோர் நிலையிலாப் பரம் பொருள் அப்பொருள் பாராதே ( அதிசயப் 9 ) என வருதலுங் காண்க . இதன் கண் எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடா கும் அப்பொருளா நஞ்சிவனை என்பதனால் ஆனந்தக்களிப்பு என் னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 12 மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை யெங்குஞ் செறிந்தானை யன்பர்க்கு மெய்யானை யல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்கா ணம்மானாய் . - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே கை ஆர் வளை சிலம்ப - கையிற் பொருந்திய வளைகள் ஒலிக்கவும் காது ஆர் குழை ஆட - காதிற் பொருந்திய மகரக் குழை அசையவும் மை ஆர் குழல் புரள - கருமை பொருந்திய கூந்தல் அவிழ்ந்து புரளவும் தேன் பாய -