திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கூந்தலில் அணிந்த மலர் மாலையிலுள்ள தேன் சொரியவும், வண்டு ஒலிப்ப - அத்தேனை உண்ட வண்டுகள் ஒலிக்கவும், செய்யானை - சிவந்த திருமேனியையுடையவனை, வெண்நீறு அணிந்தானை - அத்திரு மேனியில் திருவெண்ணீற்றை அணிந்தவனை, சேர்ந்து அறியா கையானை - தன்னின் மிக்காரின்மையின் வணங்கும் பொருட்டு ஒன் றோடொன்று சேர்ந்து அறியாத திருக்கரங்களை உடையவனை, எங் கும் செறிந்தானை - சர்வ வியாபகமாய் உள்ளானை, அன்பர்க்கு மெய் யானை - தன் அன்பர்கட்கு மெய்ப்பொருளாயுள்ளவனை, அல்லா தார்க்கு அல்லாத வேதியனை - அன்பரல்லாதார்க்குப் பொய்யாய் இருப்பவனாகிய அறிவுநூலை யுடையவனை, ஐயாறு அமர்ந்தானை - திருவையாற்றில் எழுந்தருளியிருப்பவனை, பாடுதும் - யாம் புகழ்ந்து பாடிக்கொண்டு ஆடுவோமாக. 604 அம்மானாய்,வளை சிலம்பவும், குழை அசையவும், குழல் புரளவும், வண்டுகள் ஒலிப்பவும், செய்ய திருமேனியையுடையவனை, அத்திரு மேனியில் திருவெண்ணீறு அணிந்தவனை, சேர்ந்து அறியாக் கையை யுடையவனை, எங்கும் செறிந்தானை, அன்பர்கட்கு மெய்ப்பொருளா யுள்ளவனை, அல்லாதார்க்குப் பொய்யாய் இருப்பவனாகிய அறிவுநூலை யுடையவனை, திருவையாற்றில் அமர்ந்தவனை யாம் புகழ்ந்து பாடிக் கொண்டு ஆடுவோமாக என்பதாம். வளை - முன்கையில் அணியப்படுவது. "நிரைவளை முன்கையென் றோழியை " (கலி 50-8) எனவருதல் காண்க. குழை-காதணி. மையார் குழல் - கருமை பொருந்திய கூந்தல்.'மையுக் கன்ன மொய்யிருங் கூந் தல்" (மது. 417) என்றார் பிறரும். தேன்பாய என்றது கூந்தல்அவிழ்ந்து புரளுதலால் அதனில் அணிந்த மலர்மாலை அசைந்து தேன்பரவ என்ற வாறு. வண்டொலிப்ப என்றது கூந்தலிலணிந்தமாலையிலே தேனுண்ண மொய்த்த வண்டுகள் கூந்தல் அவிழ்ந்து புரளுதலால் தேன் சொரிய அதனை உண்டு ஒலிக்க என்றவாறு. "சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட"; "பங்கய மதுவுண்டு வண்டிசைபாட" (ஞான. 83 - 9: 186-7) எனத் தேவாரத்தும் வருவன காண்க. சிலம்ப, ஆட, புரள, பாய, ஒலிப்ப என்னும் செயவெனெச்சங்களை, பாடுதும் என்பதற்கு பாடிக்கொண்டு ஆடுதும் என ஒருசொல் வருவித்துரைத்து அதனொடு முடிக்க. செய்யான் - செந்நிறமுடையவன். ''செய்யமேனியனே" (நீத்.31) எனவும், 'செய்ய திருமேனியினான்" (தே. ஞான. 181 - 5) எனவும் வருவன காண்க. வெண்ணீறணிந்தானை அச்செய்ய திருமேனியில் திருவெண்ணீற்றை அணிந்தவனை. 'செய்ய திருமேனி மிசை வெண் பொடி யணிந்து” (ஞான. 336-6) "செய்ய திருமேனி வெண்ணீற்றான் காண்" (நாவு 265 - 5) எனத் தேவாரத்தும் வருவன காண்க.
திருவாசக ஆராய்ச்சியுரை கூந்தலில் அணிந்த மலர் மாலையிலுள்ள தேன் சொரியவும் வண்டு ஒலிப்ப - அத்தேனை உண்ட வண்டுகள் ஒலிக்கவும் செய்யானை - சிவந்த திருமேனியையுடையவனை வெண்நீறு அணிந்தானை - அத்திரு மேனியில் திருவெண்ணீற்றை அணிந்தவனை சேர்ந்து அறியா கையானை - தன்னின் மிக்காரின்மையின் வணங்கும் பொருட்டு ஒன் றோடொன்று சேர்ந்து அறியாத திருக்கரங்களை உடையவனை எங் கும் செறிந்தானை - சர்வ வியாபகமாய் உள்ளானை அன்பர்க்கு மெய் யானை - தன் அன்பர்கட்கு மெய்ப்பொருளாயுள்ளவனை அல்லா தார்க்கு அல்லாத வேதியனை - அன்பரல்லாதார்க்குப் பொய்யாய் இருப்பவனாகிய அறிவுநூலை யுடையவனை ஐயாறு அமர்ந்தானை - திருவையாற்றில் எழுந்தருளியிருப்பவனை பாடுதும் - யாம் புகழ்ந்து பாடிக்கொண்டு ஆடுவோமாக . 604 அம்மானாய் வளை சிலம்பவும் குழை அசையவும் குழல் புரளவும் வண்டுகள் ஒலிப்பவும் செய்ய திருமேனியையுடையவனை அத்திரு மேனியில் திருவெண்ணீறு அணிந்தவனை சேர்ந்து அறியாக் கையை யுடையவனை எங்கும் செறிந்தானை அன்பர்கட்கு மெய்ப்பொருளா யுள்ளவனை அல்லாதார்க்குப் பொய்யாய் இருப்பவனாகிய அறிவுநூலை யுடையவனை திருவையாற்றில் அமர்ந்தவனை யாம் புகழ்ந்து பாடிக் கொண்டு ஆடுவோமாக என்பதாம் . வளை - முன்கையில் அணியப்படுவது . நிரைவளை முன்கையென் றோழியை ( கலி 50-8 ) எனவருதல் காண்க . குழை - காதணி . மையார் குழல் - கருமை பொருந்திய கூந்தல்.'மையுக் கன்ன மொய்யிருங் கூந் தல் ( மது . 417 ) என்றார் பிறரும் . தேன்பாய என்றது கூந்தல்அவிழ்ந்து புரளுதலால் அதனில் அணிந்த மலர்மாலை அசைந்து தேன்பரவ என்ற வாறு . வண்டொலிப்ப என்றது கூந்தலிலணிந்தமாலையிலே தேனுண்ண மொய்த்த வண்டுகள் கூந்தல் அவிழ்ந்து புரளுதலால் தேன் சொரிய அதனை உண்டு ஒலிக்க என்றவாறு . சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட ; பங்கய மதுவுண்டு வண்டிசைபாட ( ஞான . 83 - 9 : 186-7 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . சிலம்ப ஆட புரள பாய ஒலிப்ப என்னும் செயவெனெச்சங்களை பாடுதும் என்பதற்கு பாடிக்கொண்டு ஆடுதும் என ஒருசொல் வருவித்துரைத்து அதனொடு முடிக்க . செய்யான் - செந்நிறமுடையவன் . ' ' செய்யமேனியனே ( நீத் .31 ) எனவும் ' செய்ய திருமேனியினான் ( தே . ஞான . 181 - 5 ) எனவும் வருவன காண்க . வெண்ணீறணிந்தானை அச்செய்ய திருமேனியில் திருவெண்ணீற்றை அணிந்தவனை . ' செய்ய திருமேனி மிசை வெண் பொடி யணிந்து ( ஞான . 336-6 ) செய்ய திருமேனி வெண்ணீற்றான் காண் ( நாவு 265 - 5 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க .