திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 605 சேர்ந்தறியாக் கையானை என்றது தன்னின் மிக்கார் பிறர் எவரு மின்மையின் வணங்குதற் பொருட்டு ஒன்றோடொன்று சேர்ந்து குவி தலை அறியாத திகுக்கையையுடையானை என்றவாறு. "தன்னானைத் தன்னொப்பாரில்லாதானை," "தன்னொப்பார் இல்லாதான் காண்' "நின்னாவார் பிறரன்றி நீயே யானாய்" (நாவு.242-2; 265-7; 308-7) எனத் தேவாரத்தும் வருவன காண்க. இறைவன் சர்வவியாபகனாதலின் "எங்குஞ் செறிந்தானை" என் றார். "எங்குமாகி நின்றானும்"; "எல்லாமாம் எம்பெருமான்"; "ஒன் றோடொன்று மொருநான் கொடைந்துமிரு மூன்றோ டேழுமுடனாய் ... நின்றவர்" (ஞான. 142-6; 152-9; 224-4) எனவும், ''எவ்விடத்தும் உள்ளான் தன்னை" "உலகெல்லாம் நீயேயாகி யமைந்தவனே" "தானே எங்கும் ஆயவன் காண்" ''இயல்பாகி யுலகெல்லாம் நிறைந்து மிக்க சீரானை" (நாவு. 224-3; 257-6; 2613; 279-3) எனவும் தேவா ரத்து வருவன காண்க. அன்பர்க்கு மெய்யானை-அன்பர்க்கு மெய்ப்பொருளாயுள்ளவனை. "மெய்யானைத் தன் பக்கல் விரும்புவார்க்கு" (நாவு. 279-5) "போற் றிசைத் தென்றும் பணிவாரை மெய்ய நின்றபெருமான்"(ஞான.2-5) என வருவன காண்க. அல்லாதார்க்கு அல்லாத வேதியனை என்றது அன்பரல்லாதார்க்கு மெய்ப்பொருளல்லாத வேதியனை என்றவாறு. "பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யை" (பொற்.12) விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும் பொய்த்தவன் காண்" (நாவு.265-8) "விரும்பாதவரும் பாவியர்கட் கென்றும் பொய்யானை" (நாவு.297-5} என வருவன காண்க. வேதியன் -அறிவுநூலுடையவன். அறிவு நூல் - மறையாகமங் கள். ஐயாறமர்ந்தானை - திருவையாற்றில் எழுந்தருளியிருப்பவனை, "ஐயாறமர்ந்த ஐயனை'' 'திருவைய றமர்ந்த தேனை" திருவை யாறகலாத செம்பொற்தீ" (நாவு 15-3; 39-6; 251-1) எனத் தேவா ரத்தும் வருவன காண்க. " சிலம்பு ஆட புரள பாய ஒலிப்ப பாடுதும் என வினைமுடிபு செய்க. இதன் கண்"அன்பர்க்கு மெய்யானை" என்பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 13
திருவம்மானை 605 சேர்ந்தறியாக் கையானை என்றது தன்னின் மிக்கார் பிறர் எவரு மின்மையின் வணங்குதற் பொருட்டு ஒன்றோடொன்று சேர்ந்து குவி தலை அறியாத திகுக்கையையுடையானை என்றவாறு . தன்னானைத் தன்னொப்பாரில்லாதானை தன்னொப்பார் இல்லாதான் காண் ' நின்னாவார் பிறரன்றி நீயே யானாய் ( நாவு.242-2 ; 265-7 ; 308-7 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . இறைவன் சர்வவியாபகனாதலின் எங்குஞ் செறிந்தானை என் றார் . எங்குமாகி நின்றானும் ; எல்லாமாம் எம்பெருமான் ; ஒன் றோடொன்று மொருநான் கொடைந்துமிரு மூன்றோ டேழுமுடனாய் ... நின்றவர் ( ஞான . 142-6 ; 152-9 ; 224-4 ) எனவும் ' ' எவ்விடத்தும் உள்ளான் தன்னை உலகெல்லாம் நீயேயாகி யமைந்தவனே தானே எங்கும் ஆயவன் காண் ' ' இயல்பாகி யுலகெல்லாம் நிறைந்து மிக்க சீரானை ( நாவு . 224-3 ; 257-6 ; 2613 ; 279-3 ) எனவும் தேவா ரத்து வருவன காண்க . அன்பர்க்கு மெய்யானை - அன்பர்க்கு மெய்ப்பொருளாயுள்ளவனை . மெய்யானைத் தன் பக்கல் விரும்புவார்க்கு ( நாவு . 279-5 ) போற் றிசைத் தென்றும் பணிவாரை மெய்ய நின்றபெருமான் ( ஞான.2-5 ) என வருவன காண்க . அல்லாதார்க்கு அல்லாத வேதியனை என்றது அன்பரல்லாதார்க்கு மெய்ப்பொருளல்லாத வேதியனை என்றவாறு . பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யை ( பொற் .12 ) விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும் பொய்த்தவன் காண் ( நாவு.265-8 ) விரும்பாதவரும் பாவியர்கட் கென்றும் பொய்யானை ( நாவு.297-5 } என வருவன காண்க . வேதியன் -அறிவுநூலுடையவன் . அறிவு நூல் - மறையாகமங் கள் . ஐயாறமர்ந்தானை - திருவையாற்றில் எழுந்தருளியிருப்பவனை ஐயாறமர்ந்த ஐயனை ' ' ' திருவைய றமர்ந்த தேனை திருவை யாறகலாத செம்பொற்தீ ( நாவு 15-3 ; 39-6 ; 251-1 ) எனத் தேவா ரத்தும் வருவன காண்க . சிலம்பு ஆட புரள பாய ஒலிப்ப பாடுதும் என வினைமுடிபு செய்க . இதன் கண் அன்பர்க்கு மெய்யானை என்பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 13