திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

608 188 திருவாசக ஆராய்ச்சியுரை ஆனையாய்க் கிடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை ஊனையும் நின்றுருக்கி யென்வினையை யோட்டுகந்து தேனையு பாலையுங் கன்னலையு மொத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்றொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். ப-ரை. அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே; ஆனையாய்- யானையாகியும், கீடமாய் -புழுவாகியும், மானுடராய்- மனிதராகியும், தேவராய் - தேவர்களாகியும், ஏனை பிறவாய் - மற்றுமுள்ள பிறவிக ளாகியும், பிறந்து இறந்து எய்த்தேனை - பிறந்தும் இறந்தும் இளைப் புற்ற அடியேனை ஆட்கொண்டருளி, ஊனையும் நின்று உருக்கி - உள் ளத்தினோடு உடம்பினையும் நின்று உருகச் செய்து, என்வினையை ஓட்டு உகந்து, எனது இரு வினைகளையும் நீக்குதலை விரும்பிச் செய்து, தேனை யும் பாலையும் கன்னலைபும் ஒத்து - தேனையும் பாலையும் கருப்பஞ்சாற் றையும் போன்று, இனிய கோனவன்போல் வந்து - இனிமையுடைய தலைவனாயுள்ள ஆசாரியன் போல் எழுந்தருளி வந்து, என்னை தன் தொழும்பில் கொண்டருளும்- என்னைத் தனது அணுக்கன் தொண்டர் கூட்டத்தில் ஏற்றுக்கொண்டருளிய, வானவன் பூ கழல் பாடுதும்- சிற்பரவியோமத்தினுள்ளவனது பொலிவினையுடைய திருவடிகளைப் பாடியாடுவோமாக. அம்மானாய், ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப்பிறவாய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை ஆட்கொண்டருளி, ஊனையும் நின்று உருக்கி என் இருவினைகளையும் நீக்குதலை விரும்பிச் செய்து, தேனையும் பாலையும் . கன்னலையும் ஒத்து இனிய கோனவன் போல் எழுந்தருளி வந்து, தன்தொழும்பிற் கொண்டருளும் சிவபெரு மானது திருவடிகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டு ஆடுவோமாக என்ப தாம். கீடம் - புழு. 'கீடமும் பொட்டும் கிருமியும் புழுவே" எனப் பிங்கலந்தையில் (8-305) வருதலுங் காண்க. ஆனையாய்க் கீடமாய் என்றமையால் பேருருவுடைய ஆனையையும் சிற்றுருவுடைய புழுவை யுங் கூறினமையால் இடைப்பட்டவுருவுடைய பிறப்புக்கள் யாவை யுங் கொள்ளப்படும். இதனை ஆனை முதல் எறும்பீறாய பிறப்பு எனக் கொள்வதும் ஒருசார் வழக்கு. மானுடராய்த் தேவராய் என முற் கூறினமையின் ஏனைப்பிறவாய் என்றது நரகர் முதலியோரது பிற வியை உணர்த்தியது. ஏனைப்பிற ஒரு பொருட் பன்மொழி. பிறவாய் -வேறுசிலவாய். திருக்கோவை 61 பேர். பிறவு ஆய் எனப் பிரித்து பிறவு என்பதற்குப் பிறவி எனப் பொருள் உரைப்பினுமமையும். "'. பிறவினொடு இறவுமானான்" எனத் தேவாரத்தும் காண்க. பிறந்து
608 188 திருவாசக ஆராய்ச்சியுரை ஆனையாய்க் கிடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை ஊனையும் நின்றுருக்கி யென்வினையை யோட்டுகந்து தேனையு பாலையுங் கன்னலையு மொத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்றொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய் . - ரை . அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே ; ஆனையாய் யானையாகியும் கீடமாய் -புழுவாகியும் மானுடராய்- மனிதராகியும் தேவராய் - தேவர்களாகியும் ஏனை பிறவாய் - மற்றுமுள்ள பிறவிக ளாகியும் பிறந்து இறந்து எய்த்தேனை - பிறந்தும் இறந்தும் இளைப் புற்ற அடியேனை ஆட்கொண்டருளி ஊனையும் நின்று உருக்கி - உள் ளத்தினோடு உடம்பினையும் நின்று உருகச் செய்து என்வினையை ஓட்டு உகந்து எனது இரு வினைகளையும் நீக்குதலை விரும்பிச் செய்து தேனை யும் பாலையும் கன்னலைபும் ஒத்து - தேனையும் பாலையும் கருப்பஞ்சாற் றையும் போன்று இனிய கோனவன்போல் வந்து - இனிமையுடைய தலைவனாயுள்ள ஆசாரியன் போல் எழுந்தருளி வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும்- என்னைத் தனது அணுக்கன் தொண்டர் கூட்டத்தில் ஏற்றுக்கொண்டருளிய வானவன் பூ கழல் பாடுதும் சிற்பரவியோமத்தினுள்ளவனது பொலிவினையுடைய திருவடிகளைப் பாடியாடுவோமாக . அம்மானாய் ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப்பிறவாய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை ஆட்கொண்டருளி ஊனையும் நின்று உருக்கி என் இருவினைகளையும் நீக்குதலை விரும்பிச் செய்து தேனையும் பாலையும் . கன்னலையும் ஒத்து இனிய கோனவன் போல் எழுந்தருளி வந்து தன்தொழும்பிற் கொண்டருளும் சிவபெரு மானது திருவடிகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டு ஆடுவோமாக என்ப தாம் . கீடம் - புழு . ' கீடமும் பொட்டும் கிருமியும் புழுவே எனப் பிங்கலந்தையில் ( 8-305 ) வருதலுங் காண்க . ஆனையாய்க் கீடமாய் என்றமையால் பேருருவுடைய ஆனையையும் சிற்றுருவுடைய புழுவை யுங் கூறினமையால் இடைப்பட்டவுருவுடைய பிறப்புக்கள் யாவை யுங் கொள்ளப்படும் . இதனை ஆனை முதல் எறும்பீறாய பிறப்பு எனக் கொள்வதும் ஒருசார் வழக்கு . மானுடராய்த் தேவராய் என முற் கூறினமையின் ஏனைப்பிறவாய் என்றது நரகர் முதலியோரது பிற வியை உணர்த்தியது . ஏனைப்பிற ஒரு பொருட் பன்மொழி . பிறவாய் -வேறுசிலவாய் . திருக்கோவை 61 பேர் . பிறவு ஆய் எனப் பிரித்து பிறவு என்பதற்குப் பிறவி எனப் பொருள் உரைப்பினுமமையும் . ' . பிறவினொடு இறவுமானான் எனத் தேவாரத்தும் காண்க . பிறந்து