திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை இறந்து எய்த்தேனை - பிறந்தும் இறந்தும் இளைப்புற்றேனை. "இம்மா யப் பிறவி பிறந்தே யிறந்தெய்த்தொழிந்தேன்" (தே. 24-3) எனச் சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளியவாறுங் காண்க. ஊனையும் என்பதில் உம்மை எச்சவும்மை. ' ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண் மையனே" (நீத் 21) என வருதலுங் காண்க. எய்த்தேனை ஊனையும் நின்றுருக்கி என்ற ஆற்றலால் ஆட்கொண்டருளி என்பது வருவிக்கப் பட்டது. "கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டு கொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்'' "என்பெலாம் உருக்கி யெளிமையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே' 607 (கோத். 11) (பிடித்.10) "என்பே யுருக நின்னருள் அணிந்துன் இணைமலர் அடிகாட்டி, முன்பே என்னை யாண்டு கொண்ட முனிவா'' (எண்ணப்.3) என அடிகள் அருளியவாறுங் காண்க. வினை என்றது இருவினையை. அவை சஞ்சிதம் ஆகாமியம் என்பன. ஓட்டுகத்தல் - ஓட்டுதலை விரும் பிச் செய்தல், "என்புள் ளுருக்கி இருவினையை யீடழித்து" (குலாப்.3) "ஊச லாட்டுமிவ் வுடலுயி ராபின இருவினை அறுத்து' (அற்பு. 8) என வருவன காண்க. தேன் முதலியவற்றைக் கூறினார், இறைவன் இனியனாதல் பற்றி. கனியினும் கட்டிபட்ட கரும்பினும்..... இனியன் றன்னடைந்தார்க் கிடை மருதனே" (நாவு. 127-10) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. தேனையும் பாலையும் கன்னலையும் என மூன்று உவமை கூறி யது, தனது ஞானம் இச்சை கிரியைகளுக்கு இன்பம் பயக்கும் முறை மைபற்றியாகும். இனி, தேனையும், பாலையும், கன்னலையும் எனத் தனித்தனி கூறினும் மூன்றினையும் ஒன்றாகக் கலந்தாற் போன்று மிக இனியன் எனக் கொள்ளினுமமையும். "தேன்றலை ஆன்பாலது கலந்தா லன்ன சீரனை" எனப் பதினொராந்திருமுறையில் (கோயில் திருப்பண் ணியார் 64) என வருதலுங் காண்க. கோனவன் - தலைவன். "கோனவனைக் குறுகக் குறுகா வல்வினை தாமே " (ஞான. 365-5) எனத் தேவாரத்து வருதலும் காண்க. கோனவன் போல் வந்து என்றது இறைவன் தாமாந் தன்மையறியுந் திருவோடு வராது தலைவனாகிய ஆசாரியன் போல் வந்து என்றவாறு.
திருவம்மானை இறந்து எய்த்தேனை - பிறந்தும் இறந்தும் இளைப்புற்றேனை . இம்மா யப் பிறவி பிறந்தே யிறந்தெய்த்தொழிந்தேன் ( தே . 24-3 ) எனச் சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளியவாறுங் காண்க . ஊனையும் என்பதில் உம்மை எச்சவும்மை . ' ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண் மையனே ( நீத் 21 ) என வருதலுங் காண்க . எய்த்தேனை ஊனையும் நின்றுருக்கி என்ற ஆற்றலால் ஆட்கொண்டருளி என்பது வருவிக்கப் பட்டது . கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டு கொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் ' ' என்பெலாம் உருக்கி யெளிமையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே ' 607 ( கோத் . 11 ) ( பிடித் .10 ) என்பே யுருக நின்னருள் அணிந்துன் இணைமலர் அடிகாட்டி முன்பே என்னை யாண்டு கொண்ட முனிவா ' ' ( எண்ணப் .3 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . வினை என்றது இருவினையை . அவை சஞ்சிதம் ஆகாமியம் என்பன . ஓட்டுகத்தல் - ஓட்டுதலை விரும் பிச் செய்தல் என்புள் ளுருக்கி இருவினையை யீடழித்து ( குலாப் .3 ) ஊச லாட்டுமிவ் வுடலுயி ராபின இருவினை அறுத்து ' ( அற்பு . 8 ) என வருவன காண்க . தேன் முதலியவற்றைக் கூறினார் இறைவன் இனியனாதல் பற்றி . கனியினும் கட்டிபட்ட கரும்பினும் ..... இனியன் றன்னடைந்தார்க் கிடை மருதனே ( நாவு . 127-10 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . தேனையும் பாலையும் கன்னலையும் என மூன்று உவமை கூறி யது தனது ஞானம் இச்சை கிரியைகளுக்கு இன்பம் பயக்கும் முறை மைபற்றியாகும் . இனி தேனையும் பாலையும் கன்னலையும் எனத் தனித்தனி கூறினும் மூன்றினையும் ஒன்றாகக் கலந்தாற் போன்று மிக இனியன் எனக் கொள்ளினுமமையும் . தேன்றலை ஆன்பாலது கலந்தா லன்ன சீரனை எனப் பதினொராந்திருமுறையில் ( கோயில் திருப்பண் ணியார் 64 ) என வருதலுங் காண்க . கோனவன் - தலைவன் . கோனவனைக் குறுகக் குறுகா வல்வினை தாமே ( ஞான . 365-5 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . கோனவன் போல் வந்து என்றது இறைவன் தாமாந் தன்மையறியுந் திருவோடு வராது தலைவனாகிய ஆசாரியன் போல் வந்து என்றவாறு .