திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "பத்தர் சூழப் பராபரன் பாரில்வந்து பார்ப்பானென... கொண்டு எம்பணி கொள்வான்" (சென்னிப்.4) என வருதலும் ஆளுங் காண்க. 608 தொழும்பு- தொண்டு; ஈண்டு அணுக்கன் தொண்டர்களுக்கு ஆகு பெயர். இறைவன் அடிகளைத் தொண்டர் கூட்டத்தில் ஏற்றுக்கொண் டருளியமை, "ஒண்மலர்த் திருப்பாதத் தப்பன் ஆண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே' (அதிசயப். 1) "பாதிமாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற ஆதி ஆண்டுதன் அடியரிற்கூட்டிய அதிசயங்கண்டாமே"(அதிசயப்.2) என அடிகள் அருளியவாற்றாற் காண்க. வானவன்-வானின்கணுள்ளவன். "வானவன் காண் வானவர்க்கு மேலானான் காண்' (தே.நாவு.300-1) என வருதலுங் காண்க. வான்- சிற்பரவியோமமாகுந் திருச்சிற்றம்பலம். பூங்கழல்-பூப்போலுங் கழல் என உவமைத்தொகையாய் நின்றதெனினுமமையும். பிறந்து இறந்து எய்த்தேனை உருக்கி ஓட்டுகந்து வந்து கொண் டருளும் வானவன் கழல் பாடுதும் என வினைமுடிபு செய்க. இதன் கண், "தேனையும் பாலையுங் கன்னலையுமொத்தினியகோன வன்" என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 14 186 சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட்டு எச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த செந்தார்ப் பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்கண் அம்மானாப். ப-ரை. அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே, தக்கன் தன் வேள்வியினில் - தக்கனது யாகத்தில், சந்திரனை தேய்த்தருளி - சந்தி ரனைத் திருவடியினால் பூமியில் தேய்த்தருளியும், இந்திரனை தோள் நெரித்திட்டு - இந்திரனைத் தோளை நெரித்துத் தாக்கியும், எச்சன் தலை அறிந்து - வேள்வித் தலைவனது தலையை அரிந்தும், அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து-ஆகாயத்திற்பயந்துஓடிய பரந்தகிரணங் களையுடைய சூரியனது பல்லைத் தகர்த்தும், தேவர்களை திசை திசை
திருவாசக ஆராய்ச்சியுரை பத்தர் சூழப் பராபரன் பாரில்வந்து பார்ப்பானென ... கொண்டு எம்பணி கொள்வான் ( சென்னிப் .4 ) என வருதலும் ஆளுங் காண்க . 608 தொழும்பு- தொண்டு ; ஈண்டு அணுக்கன் தொண்டர்களுக்கு ஆகு பெயர் . இறைவன் அடிகளைத் தொண்டர் கூட்டத்தில் ஏற்றுக்கொண் டருளியமை ஒண்மலர்த் திருப்பாதத் தப்பன் ஆண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே ' ( அதிசயப் . 1 ) பாதிமாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற ஆதி ஆண்டுதன் அடியரிற்கூட்டிய அதிசயங்கண்டாமே ( அதிசயப் .2 ) என அடிகள் அருளியவாற்றாற் காண்க . வானவன் - வானின்கணுள்ளவன் . வானவன் காண் வானவர்க்கு மேலானான் காண் ' ( தே.நாவு.300-1 ) என வருதலுங் காண்க . வான் சிற்பரவியோமமாகுந் திருச்சிற்றம்பலம் . பூங்கழல் - பூப்போலுங் கழல் என உவமைத்தொகையாய் நின்றதெனினுமமையும் . பிறந்து இறந்து எய்த்தேனை உருக்கி ஓட்டுகந்து வந்து கொண் டருளும் வானவன் கழல் பாடுதும் என வினைமுடிபு செய்க . இதன் கண் தேனையும் பாலையுங் கன்னலையுமொத்தினியகோன வன் என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 14 186 சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட்டு எச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த செந்தார்ப் பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்கண் அம்மானாப் . - ரை . அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே தக்கன் தன் வேள்வியினில் - தக்கனது யாகத்தில் சந்திரனை தேய்த்தருளி - சந்தி ரனைத் திருவடியினால் பூமியில் தேய்த்தருளியும் இந்திரனை தோள் நெரித்திட்டு - இந்திரனைத் தோளை நெரித்துத் தாக்கியும் எச்சன் தலை அறிந்து - வேள்வித் தலைவனது தலையை அரிந்தும் அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து - ஆகாயத்திற்பயந்துஓடிய பரந்தகிரணங் களையுடைய சூரியனது பல்லைத் தகர்த்தும் தேவர்களை திசை திசை