திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மந்தாரமாலை - மந்தாரமலர்மாலை. மந்தாரம் - ஐந்தருக்களுள் ஒன்று. அடிகள், திருவாசகத்துள் இறைவன் அணியும் திருமாலைகளா கக் கொன்றை மலர்மாலையையும் (அம்- 16) கழுநீர் மாலையையும் (போற்றி - 217) தாளியறுகின் தாரையும் (போற்றி 201) ஈண்டு மந்தாரமாலையையும் அருளிச் செய்துள்ளார். இறைவன் அணியும் மாலைகளுள் ஒன்றாதல் பற்றியும், அதனைப் புகழ்ந்து பாடுதலாகுமென் பது பற்றியும் "மந்தாரமாலையே பாடுதும்" என்றார். "தேனக மாம லர்க் கொன்றை பாடி" "வட்ட மலர்க் கொன்றை மாலைபாடி" (பொற்.17,18) என வருவனவுங் காண்க. 612 YOLO தேய்த்தருளி நெரித்திட்டு அறிந்து தகர்த்து ஓட்டுகந்த தென்னன் பெருந்துறையான் மந்தாரமாலையே பாடுதும் என வினைமுடிபு செய்க இதன்கண் 'சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டுகந்த" என் பதனால் இறைவனை இகழ்ந்த தக்கன் வேள்வி அழிவுற்றமை புலப்படுத லின் ஆனந்தக்களிப்பு என்னும் பதிகம் நுதலிய பொருள் புலப்படு மாறு காண்க. 15 190 ஊனா யுயிரா யுணர்வாயென் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும் பின் கட்டியுமாய் வானோரறியா வழியெமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா வறிவா யளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். ப-ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து - உடம்பாகியும் உயிராகி யும் உணர்வாகியும் என்னுள்ளே கலந்து நின்றருளி, தேன் ஆய் அமு தமும் ஆய் தீ கரும்பின் கட்டியுமாய் - தேனாகியும் அமுதமாகியும் இனிய கரும்பின் வெல்லமாகியும் இனிமைதந்து, வானோர் அறியாத வழி எமக்கு தந்தருளும் - தேவர்களும் அறியாத வீட்டு நெறியை எமக்குக் காட்டியருளும், தேன் ஆர் மலர் கொன்றை சேவகன் - தேன் பொருந்திய கொன்றை மலர் மாலையை அணிந்த பேராற்றலுடைய இறைவன், ஆர் சீர் ஒளி சேர் ஆனா அறிவாய் - நிறைந்த சிறப்பினை யுடைய ஒளி பொருந்திய கெடாத பேரறிவுருவினனாய், அளவு இறந்த பல் உயிர்க்கும் கோன் ஆகி நின்றவா - எல்லையில்லாத பலவகை உயிர் களுக்கும் தலைவனாய் நின்ற முறைமையை, கூறுதும் - யாம் புகழ்ந்து பாடிக்கொண்டு ஆடுவோமாக. அம்மானாய், ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுட் கலந்து நின் றருளி, தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் இனிமை
திருவாசக ஆராய்ச்சியுரை மந்தாரமாலை - மந்தாரமலர்மாலை . மந்தாரம் - ஐந்தருக்களுள் ஒன்று . அடிகள் திருவாசகத்துள் இறைவன் அணியும் திருமாலைகளா கக் கொன்றை மலர்மாலையையும் ( அம்- 16 ) கழுநீர் மாலையையும் ( போற்றி - 217 ) தாளியறுகின் தாரையும் ( போற்றி 201 ) ஈண்டு மந்தாரமாலையையும் அருளிச் செய்துள்ளார் . இறைவன் அணியும் மாலைகளுள் ஒன்றாதல் பற்றியும் அதனைப் புகழ்ந்து பாடுதலாகுமென் பது பற்றியும் மந்தாரமாலையே பாடுதும் என்றார் . தேனக மாம லர்க் கொன்றை பாடி வட்ட மலர்க் கொன்றை மாலைபாடி ( பொற் .17 ) என வருவனவுங் காண்க . 612 YOLO தேய்த்தருளி நெரித்திட்டு அறிந்து தகர்த்து ஓட்டுகந்த தென்னன் பெருந்துறையான் மந்தாரமாலையே பாடுதும் என வினைமுடிபு செய்க இதன்கண் ' சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டுகந்த என் பதனால் இறைவனை இகழ்ந்த தக்கன் வேள்வி அழிவுற்றமை புலப்படுத லின் ஆனந்தக்களிப்பு என்னும் பதிகம் நுதலிய பொருள் புலப்படு மாறு காண்க . 15 190 ஊனா யுயிரா யுணர்வாயென் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும் பின் கட்டியுமாய் வானோரறியா வழியெமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா வறிவா யளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய் . - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து - உடம்பாகியும் உயிராகி யும் உணர்வாகியும் என்னுள்ளே கலந்து நின்றருளி தேன் ஆய் அமு தமும் ஆய் தீ கரும்பின் கட்டியுமாய் - தேனாகியும் அமுதமாகியும் இனிய கரும்பின் வெல்லமாகியும் இனிமைதந்து வானோர் அறியாத வழி எமக்கு தந்தருளும் - தேவர்களும் அறியாத வீட்டு நெறியை எமக்குக் காட்டியருளும் தேன் ஆர் மலர் கொன்றை சேவகன் - தேன் பொருந்திய கொன்றை மலர் மாலையை அணிந்த பேராற்றலுடைய இறைவன் ஆர் சீர் ஒளி சேர் ஆனா அறிவாய் - நிறைந்த சிறப்பினை யுடைய ஒளி பொருந்திய கெடாத பேரறிவுருவினனாய் அளவு இறந்த பல் உயிர்க்கும் கோன் ஆகி நின்றவா - எல்லையில்லாத பலவகை உயிர் களுக்கும் தலைவனாய் நின்ற முறைமையை கூறுதும் - யாம் புகழ்ந்து பாடிக்கொண்டு ஆடுவோமாக . அம்மானாய் ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுட் கலந்து நின் றருளி தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் இனிமை