திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 615 அவ்வூடல் நீங்கி அவனது செவ்வாயைப் பெற உருகாநிற்பேன்; உள் ளுருகித் தேடுவேன்; தேடி அச்சிவனது திருவடிகளையே சிந்திப்பேன்; சிந்தித்து அவனருளைப் பெறாவிடத்து மெலிவேன்; மீண்டும் அவன் அருளைப் பெற்று மகிழ்வேன்; அனலைக் கையில் ஏந்தியாடுகின்ற அள் விறைவனது திருவடிகளையே பாடிக்கொண்டு விளையாடுவோமாக என்பதாம். சிவபெருமானுக்குரிய அடையாளப் பூவாகிய கொன்றை மலர் மாலையைச் சூடுதலால் அவனுக்கு உரிமை பூண்டு திரள் தோள் கூடு வேன் என்றார். கொன்றை அடையாளப் பூவாதல், ''கண்ணி கார் நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற்றாருங் கொன்றை" (புறநா- கடவுள்) என்பதனாலும் அறிக. சூடுதல் என்பது தலையில் அணியும் அணிக்குரிய வினையாதலின் கொன்றை மலர்மாலையைச் சூடியது சிர சில் என்க. 'முடிமிசை யுழிஞை சூடி" (பு. வெ. பா 95) என வருத லுங் காண்க. சிவன் திரள் தோள் - சிவனது திரண்ட தோள். "சிவ னவன் திரள் தோள்"(சத.33) என அடிகள் பிறிதோரிடத்து அருளிய வாறுங் காண்க. கூடுவேன் என்பது ஞானயோகத்தால் இறைவனை அண்ணித்தலை யும், முயங்கி என்பது ஞானத்தால் அத்துவித பாவனை செய்தலையும் குறித்தன. மயங்குதல் - முயக்கத்தாலுண்டாகிய இன்ப மிகுதியால் அறிவு மயங்குதல். மயங்கி என்றுமில்லாத இன்பத்தினைத் தலைவன் ஈந்தமை தன்னைப் பிரிதற்குப்போலும் என எண்ணினமையால் ''ஊடு வேன்" என்றார். அவ்வூடல் நீங்கியவிடத்து அவ்விறைவன் செவ் வாய்க்கு உருகுதலும் உள்ளுருகி அவனைத் தேடுதலும் தேடி அவன் திருவடியைச் சிந்தித்தலும் அவன் அருளைப் பெறாவிடத்து வாடுதலும் மீண்டும் அவனருளைப் பெற்றவிடத்து மலர்தலும் முறையாக உள்ளத் தின் கண் நிகழ்வனவாகக் கூறிய முறைமை மிக வியந்து இன்புறற் பாலது. "பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றி நான் தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர ஆடுவ னாடுவ னாமாத்தூரெம் மடிகளைக் கூடுவன் கூடுவன் குற்றமதற்றென் குறிப்போடே" "தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடோறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே ஆடுவ னாடுவ னாமாத்தூரெம் மடிகட்கே' எனத் தேவாரத்தும், (சுந்-45-2) (சுந்-45-9)
திருவம்மானை 615 அவ்வூடல் நீங்கி அவனது செவ்வாயைப் பெற உருகாநிற்பேன் ; உள் ளுருகித் தேடுவேன் ; தேடி அச்சிவனது திருவடிகளையே சிந்திப்பேன் ; சிந்தித்து அவனருளைப் பெறாவிடத்து மெலிவேன் ; மீண்டும் அவன் அருளைப் பெற்று மகிழ்வேன் ; அனலைக் கையில் ஏந்தியாடுகின்ற அள் விறைவனது திருவடிகளையே பாடிக்கொண்டு விளையாடுவோமாக என்பதாம் . சிவபெருமானுக்குரிய அடையாளப் பூவாகிய கொன்றை மலர் மாலையைச் சூடுதலால் அவனுக்கு உரிமை பூண்டு திரள் தோள் கூடு வேன் என்றார் . கொன்றை அடையாளப் பூவாதல் ' ' கண்ணி கார் நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற்றாருங் கொன்றை ( புறநா கடவுள் ) என்பதனாலும் அறிக . சூடுதல் என்பது தலையில் அணியும் அணிக்குரிய வினையாதலின் கொன்றை மலர்மாலையைச் சூடியது சிர சில் என்க . ' முடிமிசை யுழிஞை சூடி ( பு . வெ . பா 95 ) என வருத லுங் காண்க . சிவன் திரள் தோள் - சிவனது திரண்ட தோள் . சிவ னவன் திரள் தோள் ( சத .33 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளிய வாறுங் காண்க . கூடுவேன் என்பது ஞானயோகத்தால் இறைவனை அண்ணித்தலை யும் முயங்கி என்பது ஞானத்தால் அத்துவித பாவனை செய்தலையும் குறித்தன . மயங்குதல் - முயக்கத்தாலுண்டாகிய இன்ப மிகுதியால் அறிவு மயங்குதல் . மயங்கி என்றுமில்லாத இன்பத்தினைத் தலைவன் ஈந்தமை தன்னைப் பிரிதற்குப்போலும் என எண்ணினமையால் ' ' ஊடு வேன் என்றார் . அவ்வூடல் நீங்கியவிடத்து அவ்விறைவன் செவ் வாய்க்கு உருகுதலும் உள்ளுருகி அவனைத் தேடுதலும் தேடி அவன் திருவடியைச் சிந்தித்தலும் அவன் அருளைப் பெறாவிடத்து வாடுதலும் மீண்டும் அவனருளைப் பெற்றவிடத்து மலர்தலும் முறையாக உள்ளத் தின் கண் நிகழ்வனவாகக் கூறிய முறைமை மிக வியந்து இன்புறற் பாலது . பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றி நான் தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர ஆடுவ னாடுவ னாமாத்தூரெம் மடிகளைக் கூடுவன் கூடுவன் குற்றமதற்றென் குறிப்போடே தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடோறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே ஆடுவ னாடுவ னாமாத்தூரெம் மடிகட்கே ' எனத் தேவாரத்தும் ( சுந் - 45-2 ) ( சுந் - 45-9 )