திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை மரு 617 ஒக்கும் இனிய மெல்லிய மொழியினையுடைய உமையம்மையின் நீல நிறம் விளங்குகின்ற இடப்பாகத் திருமேனியை யுடையவனை, வெளி வந்த - அக்கினிப் பிழம்பாய் வெளிப்பட்டு வந்த, மால் அயனும் காண்பு அரிய வித்தகனை - திருமாலும் பிரமனும் அடியும் முடியுமாகிய எல்லைகளைக் காண்டற்கு அரிய சதுரப்பாடுடையவனை, தெளி வந்த தேறலை - தெளிந்தெடுத்த தேன்போல இனியவனை, சீர் ஆர் பெருந் துறையில் எளி வந்து இருந்து இரங்கி - புகழ் நிறைந்த திருப்பெருந் துறையின் கண் ஞானாசாரியனாக எளிதாக வலிய வந்து எழுந்தருளி யிருந்து அடியேன் மீது இரங்கி, எண் அரிய இன் அருளால் - நினைத்தற் கரிய இனிய பேரருளால், ஒளி என் உள்ளத்தின் உள்ளே வந்து ஒளி திகழ தனது அறிவொளி உருவம் என் நெஞ்சினுள்ளே வந்து பேரொளியாய் விளங்கும் வண்ணம், அளி வந்த அந்தணனை பாடுதும்- அருள்புரிந்த பேரருளானைப் பாடியாடுவோமாக. அம்மானாய், உமையம்மையின் நிறம் விளங்குகின்ற இடப்பாகத் திருமேனி உடையவனை, வெளிவந்த திருமாலும் பிரமனும் காண்டற் கரிய வித்தகனாயுள்ளானை, தெளிவந்த தேறலை, பெருந்துறையில் எழுந்தருளி வந்து இருந்து இரங்கி, இன்னருளால் தனது ஒளி என் உள்ளத்தினுள்ளே ஒளி திகழும் வண்ணம் அருள்புரிந்த பேரருளானைப் பாடிக்கொண்டே யாடுவோமாக என்பதாம். கிளி - ஆகுபெயராய் அதன் மொழிக்காயிற்று. கிளிவந்த மொழி கிளியினது மொழியை யொக்கும் இனியமொழி - "கிளிபுரை கிளவி யாய்" (கலி 20-7) “கிளிச் சொலி னினிய சொல்லார்' (சீவக. 2898) எனப் பிறரும் கூறுதல் காண்க. கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை என்றது இறைவனது அர்த்தநாரீசுவர வடிவத்தை உணர்த்தியது. ht வந்த - உவமையுருபு. வெளிவந்த என்பது அக்கினிப் பிழம்பாக வெளிப்பட்ட என்னும் பொருளுடையதாய் வித்தகனை என்பதனோடு இயையும். "தோன்றினன் கனற் குன்றேபோல் சொல்லரும் பரத்தின் சோதி" (கந்த. அடி முடி. 59) எனவும், "பரமன் அனலாய்ப் பரந்து முன்னிற்க" (திருமந். 372) என வருவனவுங் காண்க.. இதனால் இறை வன் அக்கினிப் பிழம்பாய் தம்முன்னர் வெளிப்பட்டு நின்றும், மால் அயனும் காண்டற்கரியனாயினன் என்னும் நயமும் தோன்றும். "கருவரையனைய மேனிக் கடல் வண்ணனவனுங் காணான் திருவரையனைய பூமேல் திசை முகனவனுங் காணான் (நாவு. 56-9) எனத் தேவாரத்தாலுமறிக. இனி வெளிவந்த என்பதற்கு புறப் பட்ட எனப் பொருள்கொண்டு அதனை மாலயனுக்கு அடையாக்கு
திருவம்மானை மரு 617 ஒக்கும் இனிய மெல்லிய மொழியினையுடைய உமையம்மையின் நீல நிறம் விளங்குகின்ற இடப்பாகத் திருமேனியை யுடையவனை வெளி வந்த - அக்கினிப் பிழம்பாய் வெளிப்பட்டு வந்த மால் அயனும் காண்பு அரிய வித்தகனை - திருமாலும் பிரமனும் அடியும் முடியுமாகிய எல்லைகளைக் காண்டற்கு அரிய சதுரப்பாடுடையவனை தெளி வந்த தேறலை - தெளிந்தெடுத்த தேன்போல இனியவனை சீர் ஆர் பெருந் துறையில் எளி வந்து இருந்து இரங்கி - புகழ் நிறைந்த திருப்பெருந் துறையின் கண் ஞானாசாரியனாக எளிதாக வலிய வந்து எழுந்தருளி யிருந்து அடியேன் மீது இரங்கி எண் அரிய இன் அருளால் - நினைத்தற் கரிய இனிய பேரருளால் ஒளி என் உள்ளத்தின் உள்ளே வந்து ஒளி திகழ தனது அறிவொளி உருவம் என் நெஞ்சினுள்ளே வந்து பேரொளியாய் விளங்கும் வண்ணம் அளி வந்த அந்தணனை பாடுதும் அருள்புரிந்த பேரருளானைப் பாடியாடுவோமாக . அம்மானாய் உமையம்மையின் நிறம் விளங்குகின்ற இடப்பாகத் திருமேனி உடையவனை வெளிவந்த திருமாலும் பிரமனும் காண்டற் கரிய வித்தகனாயுள்ளானை தெளிவந்த தேறலை பெருந்துறையில் எழுந்தருளி வந்து இருந்து இரங்கி இன்னருளால் தனது ஒளி என் உள்ளத்தினுள்ளே ஒளி திகழும் வண்ணம் அருள்புரிந்த பேரருளானைப் பாடிக்கொண்டே யாடுவோமாக என்பதாம் . கிளி - ஆகுபெயராய் அதன் மொழிக்காயிற்று . கிளிவந்த மொழி கிளியினது மொழியை யொக்கும் இனியமொழி - கிளிபுரை கிளவி யாய் ( கலி 20-7 ) கிளிச் சொலி னினிய சொல்லார் ' ( சீவக . 2898 ) எனப் பிறரும் கூறுதல் காண்க . கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை என்றது இறைவனது அர்த்தநாரீசுவர வடிவத்தை உணர்த்தியது . ht வந்த - உவமையுருபு . வெளிவந்த என்பது அக்கினிப் பிழம்பாக வெளிப்பட்ட என்னும் பொருளுடையதாய் வித்தகனை என்பதனோடு இயையும் . தோன்றினன் கனற் குன்றேபோல் சொல்லரும் பரத்தின் சோதி ( கந்த . அடி முடி . 59 ) எனவும் பரமன் அனலாய்ப் பரந்து முன்னிற்க ( திருமந் . 372 ) என வருவனவுங் காண்க .. இதனால் இறை வன் அக்கினிப் பிழம்பாய் தம்முன்னர் வெளிப்பட்டு நின்றும் மால் அயனும் காண்டற்கரியனாயினன் என்னும் நயமும் தோன்றும் . கருவரையனைய மேனிக் கடல் வண்ணனவனுங் காணான் திருவரையனைய பூமேல் திசை முகனவனுங் காணான் ( நாவு . 56-9 ) எனத் தேவாரத்தாலுமறிக . இனி வெளிவந்த என்பதற்கு புறப் பட்ட எனப் பொருள்கொண்டு அதனை மாலயனுக்கு அடையாக்கு