திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 621 முன்னானை, பின்னானை, பிஞ்ஞகனை, மன்னானை, வானவனை, மாதி யலும் பாதியனை. ஆனைக்காவானை, பாண்டி நாட்டானை. இன்னமுதை யன்னானை அம்மானைப் பாடுதும் என முடிக்க. ரூம் இதன்கண் என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை என் பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதரு தல் காண்க. 19 194 பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசந்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். ப -ரை. அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே, பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான்- தனது இறைமைக் குணங்கள் பிறர் எவர்க் கும் இல்லாத பெருமான், பெருந்துறையான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவன், கொற்ற குதிரையின்மேல் வந்தருளி - வெற் றியையுடைய குதிரையின் மேல் எழுந்தருளிவந்து, தன் அடியார் குற் றங்கள் நீக்கி - தன் அடியவர்களுடைய மும்மலங்களாகிய குற்றங்களை நீக்கி, குணம் கொண்டு - அவர்கள் அன்பினை ஏற்று, கோது ஆட்டி - தன் அடியாரின் தகுதியின்மையைத் தனது அருளால் கருதாது பாராட்டி, சுற்றிய சுற்றத்தொடர்வு அறுப்பான் - சூழ்ந்திருக்கின்ற சுற்றத்தின்மேல் கொண்டுள்ள பற்றினை நீக்கியருள்பவன், தொல் புகழே பற்றி - அவனுடைய பழமையான பொருள்சேர் புகழினை உட் பொருளாகக்கொண்டு, இப்பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் - இந்த மும்மலங்களினது கட்டினை வாசனாமலத்தோடு நீக்குதற்காக நாங்கள் தன்னைப்பற்றும்பொருட்டு, பற்றிய பேரானந்தம் பாடுதும்- நம்மை விடாது வந்து பற்றிய இறைவனது பேரானந்தத்தைப் பாடி யாடுவோமாக. அம்மானாய், பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறை யான். குதிரையின்மேல் வந்தருளித் தன் அடியார் குற்றங்களை நீக்கி, குணங்கொண்டு தன் அடியாரின் தகுதியின்மையைக் கருதாது பாராட்டி, சுற்றத் தொடரறுப்பவன், அவனுடைய புகழினைப்பற்றி இப்பாசத்தை முழுவதும் நீக்குவதற்காக, நாங்கள் தன்னைப் பற்றும் பொருட்டு நம்மை விடாது வந்து பற்றிய இறைவனது பேரானந் தத்தை நாம் பாடியாடுவோமாக என்பதாம்.
திருவம்மானை 621 முன்னானை பின்னானை பிஞ்ஞகனை மன்னானை வானவனை மாதி யலும் பாதியனை . ஆனைக்காவானை பாண்டி நாட்டானை . இன்னமுதை யன்னானை அம்மானைப் பாடுதும் என முடிக்க . ரூம் இதன்கண் என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை என் பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதரு தல் காண்க . 19 194 பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசந்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய் . -ரை . அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான்- தனது இறைமைக் குணங்கள் பிறர் எவர்க் கும் இல்லாத பெருமான் பெருந்துறையான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவன் கொற்ற குதிரையின்மேல் வந்தருளி - வெற் றியையுடைய குதிரையின் மேல் எழுந்தருளிவந்து தன் அடியார் குற் றங்கள் நீக்கி - தன் அடியவர்களுடைய மும்மலங்களாகிய குற்றங்களை நீக்கி குணம் கொண்டு - அவர்கள் அன்பினை ஏற்று கோது ஆட்டி - தன் அடியாரின் தகுதியின்மையைத் தனது அருளால் கருதாது பாராட்டி சுற்றிய சுற்றத்தொடர்வு அறுப்பான் - சூழ்ந்திருக்கின்ற சுற்றத்தின்மேல் கொண்டுள்ள பற்றினை நீக்கியருள்பவன் தொல் புகழே பற்றி - அவனுடைய பழமையான பொருள்சேர் புகழினை உட் பொருளாகக்கொண்டு இப்பாசத்தை பற்று அற நாம் பற்றுவான் - இந்த மும்மலங்களினது கட்டினை வாசனாமலத்தோடு நீக்குதற்காக நாங்கள் தன்னைப்பற்றும்பொருட்டு பற்றிய பேரானந்தம் பாடுதும் நம்மை விடாது வந்து பற்றிய இறைவனது பேரானந்தத்தைப் பாடி யாடுவோமாக . அம்மானாய் பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறை யான் . குதிரையின்மேல் வந்தருளித் தன் அடியார் குற்றங்களை நீக்கி குணங்கொண்டு தன் அடியாரின் தகுதியின்மையைக் கருதாது பாராட்டி சுற்றத் தொடரறுப்பவன் அவனுடைய புகழினைப்பற்றி இப்பாசத்தை முழுவதும் நீக்குவதற்காக நாங்கள் தன்னைப் பற்றும் பொருட்டு நம்மை விடாது வந்து பற்றிய இறைவனது பேரானந் தத்தை நாம் பாடியாடுவோமாக என்பதாம் .