திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 623 பயிற்சி வயத்தான் வாசனாமலம் தாக்குமாதலின் அதனையும் நீக்க வேண்டுதலின் பாசத்தைப் பற்றோடறுக்க என்றார். 'பற்றாங்கவை யற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் கெடுவீர்" (உயிருண்ணி.5) என்றவிடத்தும், அடிகள் பற்றறுக்க என்றவிடத்தும் வாசனாமல நீக்கத் தின்பொருட்டுப் பற்றப்படும் உபாயம் கூறுமாறு காண்க. பற்றுவான் வானீற்று வினையெச்சம், பேரானந்தம் என்றது அருட்சத்தியை. எம்மான் பெருந்துறையான் தொடர்வறுப்பான் அவனது தொல் புகழே பற்றிப் பாசத்தைப் பற்றறப் பற்றுவான் நம்மைப் பற்றிய பேரானந்தம் பாடுதும் என முடிக்க. இதன் கண் பற்றிய பேரானந்தம் பாடுதும் என்பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 20
திருவம்மானை 623 பயிற்சி வயத்தான் வாசனாமலம் தாக்குமாதலின் அதனையும் நீக்க வேண்டுதலின் பாசத்தைப் பற்றோடறுக்க என்றார் . ' பற்றாங்கவை யற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் கெடுவீர் ( உயிருண்ணி .5 ) என்றவிடத்தும் அடிகள் பற்றறுக்க என்றவிடத்தும் வாசனாமல நீக்கத் தின்பொருட்டுப் பற்றப்படும் உபாயம் கூறுமாறு காண்க . பற்றுவான் வானீற்று வினையெச்சம் பேரானந்தம் என்றது அருட்சத்தியை . எம்மான் பெருந்துறையான் தொடர்வறுப்பான் அவனது தொல் புகழே பற்றிப் பாசத்தைப் பற்றறப் பற்றுவான் நம்மைப் பற்றிய பேரானந்தம் பாடுதும் என முடிக்க . இதன் கண் பற்றிய பேரானந்தம் பாடுதும் என்பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 20