திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

9. திருப்பொற் சுண்ணம் ஆனந்த மனோலயம் திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது பய கேங் 195 அடிகளார் தில்லைநகரில் எழுந்தருளியிருந்தபொழுது நடரா சப் பெருமானுக்கு மகோற்சவம் நடந்து தீர்த்ததினத்தன்று சுவாமி தீர்த்தமாடச் செல்வதன் முன் திருப்பொற் சுண்ணமிடித்துக்கொண்டு மங்களகரமாகத் தீர்த்தமாடப் புறப்படுவதைக் கண்டனர். இறைவற் குத் தீர்த்தத்தின் பொருட்டுச் சுண்ணமிடிக்கையில் ஆசாரியர் உலக் கையின் மேற்பாகத்திலும். எஜமானர் அதன் கீழும் உருத்திர கணி கையர் அதன் கீழும் பற்றிக்கொண்டு "வியோம வியாபினே" என்று தொடங்குகின்ற எண்பத்தொரு பதங்களையுடைய மந்திரத்தினை ஏழு முறை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு சுண்ணத்தினை இடித்து சுண்ணமிடிப்பதற்காகத் தாபிக்கப்பட்ட கும்பசலத்தில் கலந்து கொண்டு புறப்படுதல் முறைமையாகும். அதனை அறிந்த அடிகள் இறைவற்குச் சுண்ணமிடிக்கும்போது பாடிக்கொண்டு இடிப்பதற்காக இத் திருப்பொற்சுண்ணப் பாடலை அருளிச் செய்தனர். அக்காலந் தொடக்கமாக இன்றும் திருக்கோயில்களில் தீர்த்ததினத்தில் சுண்ண மிடிக்கும்போது அப்பத மந்திரங்கள் கூறியிடித்த பின்னர் இத் திருப் பாடல்களைப் பாடிக்கொண்டு இடிக்கும் வழக்கம் உளதாயிற்று. ஆனந்த மனோலயம் என்பது மகிழ்ச்சி மிகுதியால் மனம் ஒரு வழிப்பட்டு இறைவன்பால் அமைதல். அறுசீரடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் Dou முத்துநற் றாமம்பூ மாலை தூக்கி முளைக்குடந் தூபநற் றீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளும் நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின் அத்தனை யாறனம் மானைப்பாடி யாடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. பரை: முத்து நல் தாமம் பூ மாலை தூக்கி - முத்துக்களா லாகிய நல்ல மாலைகளையும் மலர்மாலைகளையும் சுண்ணம் இடிக்கும் மண்டபத்தில் தொங்க நாற்றி, முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம் மின் - நவதானியங்கள் முளைக்க இட்ட குடங்களையும் நறும் புகை
9. திருப்பொற் சுண்ணம் ஆனந்த மனோலயம் திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது பய கேங் 195 அடிகளார் தில்லைநகரில் எழுந்தருளியிருந்தபொழுது நடரா சப் பெருமானுக்கு மகோற்சவம் நடந்து தீர்த்ததினத்தன்று சுவாமி தீர்த்தமாடச் செல்வதன் முன் திருப்பொற் சுண்ணமிடித்துக்கொண்டு மங்களகரமாகத் தீர்த்தமாடப் புறப்படுவதைக் கண்டனர் . இறைவற் குத் தீர்த்தத்தின் பொருட்டுச் சுண்ணமிடிக்கையில் ஆசாரியர் உலக் கையின் மேற்பாகத்திலும் . எஜமானர் அதன் கீழும் உருத்திர கணி கையர் அதன் கீழும் பற்றிக்கொண்டு வியோம வியாபினே என்று தொடங்குகின்ற எண்பத்தொரு பதங்களையுடைய மந்திரத்தினை ஏழு முறை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு சுண்ணத்தினை இடித்து சுண்ணமிடிப்பதற்காகத் தாபிக்கப்பட்ட கும்பசலத்தில் கலந்து கொண்டு புறப்படுதல் முறைமையாகும் . அதனை அறிந்த அடிகள் இறைவற்குச் சுண்ணமிடிக்கும்போது பாடிக்கொண்டு இடிப்பதற்காக இத் திருப்பொற்சுண்ணப் பாடலை அருளிச் செய்தனர் . அக்காலந் தொடக்கமாக இன்றும் திருக்கோயில்களில் தீர்த்ததினத்தில் சுண்ண மிடிக்கும்போது அப்பத மந்திரங்கள் கூறியிடித்த பின்னர் இத் திருப் பாடல்களைப் பாடிக்கொண்டு இடிக்கும் வழக்கம் உளதாயிற்று . ஆனந்த மனோலயம் என்பது மகிழ்ச்சி மிகுதியால் மனம் ஒரு வழிப்பட்டு இறைவன்பால் அமைதல் . அறுசீரடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் Dou முத்துநற் றாமம்பூ மாலை தூக்கி முளைக்குடந் தூபநற் றீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளும் நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின் அத்தனை யாறனம் மானைப்பாடி யாடப்பொற் சுண்ணம் இடித்துநாமே . பரை : முத்து நல் தாமம் பூ மாலை தூக்கி - முத்துக்களா லாகிய நல்ல மாலைகளையும் மலர்மாலைகளையும் சுண்ணம் இடிக்கும் மண்டபத்தில் தொங்க நாற்றி முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம் மின் - நவதானியங்கள் முளைக்க இட்ட குடங்களையும் நறும் புகை