திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் 199 அறுகெடுப் பாரயனும்மரியும் அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம் நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோம் செறிவுடை மும்மதி லெய்த வில்லி திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் காடப்பொற் சுண்ணம் இடித்துநாமே துழ் 633 ப - ரை. அயனும் அரியும் அன்றி மற்றும் இந்திரனோடு அமரர் அறுகு எடுப்பார் - பிரமனும் திருமாலும் அல்லாமல் ஏனைய இந்திர னும் தேவர்களும் சுண்ணத்தோடு சேர்ந்த அறுகம்புல்லினை எடுக்க வருகின்றார்கள். நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம்- யாம் முன்பு யாம் முன்பு என்று நறுமுறுத் துக்கொண்டு அறுகு எடுக்க வருகின்ற அத் தேவர்கூட்டங்களையெல் லாம் நமக்குப் பின்பல்லது முன்னர் எடுக்க விடமாட்டோம்; செறிவு உடை மும்மதில் எய்தவில்லி - தாம் சென்று தங்கும் இடங்களை நெருக்கி அழித்தலையுடைய முப்புரங்களை அக்கினி அம்பு ஏவி அழித்த மேருவில்லையுடையராகிய, திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி- அழகிய ஏகாம்பரநாதசுவாமி எழுந்தருளியிருக்கும் செம்பொன்னா லாகிய திருக்கோயிலைப் பாடிக்கொண்டு, முறுவல் செவ்வாயினீர் - புன்சிரிப்போடு கூடிய சிவந்தவாயையுடைய தோழியர்களே, முக்கண் அப்பற்கு - மூன்று திருக்கண்களையுடைய எங்கள் தந்தையாகிய இறை வனுக்கு, ஆட பொன் சுண்ணம் நாம் இடித்தும் - தீர்த்தமாடுதற்கா கத் திருப்பொற் சுண்ணத்தை நாம் இடிப்போமாக. முறுவற் செவ்வாயினீர், அயனும் அரியும் அல்லாமல் மற்று இந்தி ரனும் தேவர்களும் சுண்ணத்தோடு சேர்ந்த அறுகம்புல்லிளை எடுக்க வருகின்றார்கள். நறுமுறு தேவர் கணங்களெல்லாம் நமக்குப் பின்ன ரல்லது னர் எடுக்க விடமாட்டோம், மும்மதில்களை எய்த வில்லி யாகிய ஏகாம்பரநாதசுவாமி எழுந்தருளியிருக்கும் செம்பொற்கோயி லைப் பாடிக்கொண்டு, முக்கணப்பற்குத் தீர்த்தமாடுதற்காகத் திருப் பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக என்பதாம் அறுகு என்றது இடிக்கப்பட்ட பொற்சுண்ணத்தோடு சேர்க்கப் பட்ட அறுகம் புல்லினை. அறுகு எடுத்தல் - அதன் வாயிலாகச் சுண்ண நீரை எடுத்தல். அறுகும் சுண்ண நீரும் சுவாமி தீர்த்தமாடியபின் மக் கள் தீர்த்தமாடும்போது பெற்றுக்கொண்டு தீர்த்தமாடுவர். சுண்ணத் தோடு சேர்க்கப்பட்ட அறுகம் புல்லினை எடுப்பதற்கு அயனும் அரியும் இந்திரனும் அமரரும் முற்படுவாராயினர். அங்ஙனம் முற்படும்போது
திருப்பொற்சுண்ணம் 199 அறுகெடுப் பாரயனும்மரியும் அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம் நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோம் செறிவுடை மும்மதி லெய்த வில்லி திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் காடப்பொற் சுண்ணம் இடித்துநாமே துழ் 633 - ரை . அயனும் அரியும் அன்றி மற்றும் இந்திரனோடு அமரர் அறுகு எடுப்பார் - பிரமனும் திருமாலும் அல்லாமல் ஏனைய இந்திர னும் தேவர்களும் சுண்ணத்தோடு சேர்ந்த அறுகம்புல்லினை எடுக்க வருகின்றார்கள் . நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம்- யாம் முன்பு யாம் முன்பு என்று நறுமுறுத் துக்கொண்டு அறுகு எடுக்க வருகின்ற அத் தேவர்கூட்டங்களையெல் லாம் நமக்குப் பின்பல்லது முன்னர் எடுக்க விடமாட்டோம் ; செறிவு உடை மும்மதில் எய்தவில்லி - தாம் சென்று தங்கும் இடங்களை நெருக்கி அழித்தலையுடைய முப்புரங்களை அக்கினி அம்பு ஏவி அழித்த மேருவில்லையுடையராகிய திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி அழகிய ஏகாம்பரநாதசுவாமி எழுந்தருளியிருக்கும் செம்பொன்னா லாகிய திருக்கோயிலைப் பாடிக்கொண்டு முறுவல் செவ்வாயினீர் - புன்சிரிப்போடு கூடிய சிவந்தவாயையுடைய தோழியர்களே முக்கண் அப்பற்கு - மூன்று திருக்கண்களையுடைய எங்கள் தந்தையாகிய இறை வனுக்கு ஆட பொன் சுண்ணம் நாம் இடித்தும் - தீர்த்தமாடுதற்கா கத் திருப்பொற் சுண்ணத்தை நாம் இடிப்போமாக . முறுவற் செவ்வாயினீர் அயனும் அரியும் அல்லாமல் மற்று இந்தி ரனும் தேவர்களும் சுண்ணத்தோடு சேர்ந்த அறுகம்புல்லிளை எடுக்க வருகின்றார்கள் . நறுமுறு தேவர் கணங்களெல்லாம் நமக்குப் பின்ன ரல்லது னர் எடுக்க விடமாட்டோம் மும்மதில்களை எய்த வில்லி யாகிய ஏகாம்பரநாதசுவாமி எழுந்தருளியிருக்கும் செம்பொற்கோயி லைப் பாடிக்கொண்டு முக்கணப்பற்குத் தீர்த்தமாடுதற்காகத் திருப் பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக என்பதாம் அறுகு என்றது இடிக்கப்பட்ட பொற்சுண்ணத்தோடு சேர்க்கப் பட்ட அறுகம் புல்லினை . அறுகு எடுத்தல் - அதன் வாயிலாகச் சுண்ண நீரை எடுத்தல் . அறுகும் சுண்ண நீரும் சுவாமி தீர்த்தமாடியபின் மக் கள் தீர்த்தமாடும்போது பெற்றுக்கொண்டு தீர்த்தமாடுவர் . சுண்ணத் தோடு சேர்க்கப்பட்ட அறுகம் புல்லினை எடுப்பதற்கு அயனும் அரியும் இந்திரனும் அமரரும் முற்படுவாராயினர் . அங்ஙனம் முற்படும்போது