திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

634 திருவாசக ஆராய்ச்சியுரை நாம் முன்னர் நாம் முன்னர் எனத் தம்முண் மாறுபட்டு அவர்கள் முறுமுறுத்தலின் 'நறுமுறு தேவர் கணம்" என்றார். நறுமுறுத்தல்- ஒலிக்குறிப்பாய் தம்முண் மாறுபட்டு முற்படுதலை உணர்த்தியது. நம்மில் பின்பல்லது எடுக்கவொட்டோம் என்றது இடிக்கும் பொற்சுண்ணத்தோடு சேர்க்கப்பட்ட அறுகம் புல்லினை எடுக்க விட மாட்டோம் என்றவாறு. இறைவர் தீர்த்தமாடுதற்குச் சுண்ணத்தை இடிக்கும் உரிமை பூண்டுள்ள நாமே முதலில் எடுத்தற்கு உரிமையுடை யோம் என்றவாறு. ஒட்டோம் விடமாட்டோம்; இணங்கமாட் டோம். "கூடவே மடிவதன்றிக் கொடுக்க யாம் மாட்டோம்" என் றார் (பெரிய. இயற்பகை. 18) vader செறிவு - நெருக்கம். அழிக்கவிரும்பிய இடங்களைச் சென்று மேலே தாக்கி நெருக்கி அழிக்கும் இயல்புடையனவாதலின் "செறி வுடை மும்மதில்" என்றார். மும்மதில் மூன்றுமதில், 'தெருளும் மும்மதில்" (அதிசயப். 10), இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள் ளிப்புரிசை (167) எனத் திருக்கோவையிலும் வருவன காண்க. அவை இரும்பு வெள்ளி பொன்னாலாகிய மதில்களையுடைய நகரங்கள். "எயிற்குலம் மூன்றிருந்தீ யெய்த வெய்தவன்" (36) என்னும் திருக் கோவையார் உரையில் "எயிற்குலம் மூன்றென்றார், அவை இரும்பும் வெள்ளியும் பொன்னுமாகிய சாதிவேறுபாடுடைமையின்" எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க. எய்த என்ற வினையால் தீயா கிய அம்பு எய்து எரித்த என்பது பெறப்படும். 'ஒங்குமலைப் பொருவிற் பாம்பு ஞாண் கொளீஇ யொருகணை கொண்டு மூவெயி லுடற்றிப் பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல்" திரிபுர மெரியத் தேவர் வேண்ட வெரிமுகப் பேரம் பேவல் கேட்ப வுமையவ ளொரு திற னாக வோங்கிய விமைய னாடிய கொடு கொட்டி யாடலும்" (சிலப்.6-40 7) என வருவன காண்க. அம்பு - திருமாலாகிய அம்பு. வில் - மேருமலை வில். "புரம் எரிய வளைத்த மேருச் சிலையானை" "மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டு எயில் (4m. 55-1-4) "அயிலார் அம்பெரி மேருவில்லாகவே எயிலாரும் பொடியாய் விழ எய்தவன்" (நாவு.276-6) தொட்டான்” (நாவு.181-3) (நாவு. 183-9)
634 திருவாசக ஆராய்ச்சியுரை நாம் முன்னர் நாம் முன்னர் எனத் தம்முண் மாறுபட்டு அவர்கள் முறுமுறுத்தலின் ' நறுமுறு தேவர் கணம் என்றார் . நறுமுறுத்தல் ஒலிக்குறிப்பாய் தம்முண் மாறுபட்டு முற்படுதலை உணர்த்தியது . நம்மில் பின்பல்லது எடுக்கவொட்டோம் என்றது இடிக்கும் பொற்சுண்ணத்தோடு சேர்க்கப்பட்ட அறுகம் புல்லினை எடுக்க விட மாட்டோம் என்றவாறு . இறைவர் தீர்த்தமாடுதற்குச் சுண்ணத்தை இடிக்கும் உரிமை பூண்டுள்ள நாமே முதலில் எடுத்தற்கு உரிமையுடை யோம் என்றவாறு . ஒட்டோம் விடமாட்டோம் ; இணங்கமாட் டோம் . கூடவே மடிவதன்றிக் கொடுக்க யாம் மாட்டோம் என் றார் ( பெரிய . இயற்பகை . 18 ) vader செறிவு - நெருக்கம் . அழிக்கவிரும்பிய இடங்களைச் சென்று மேலே தாக்கி நெருக்கி அழிக்கும் இயல்புடையனவாதலின் செறி வுடை மும்மதில் என்றார் . மும்மதில் மூன்றுமதில் ' தெருளும் மும்மதில் ( அதிசயப் . 10 ) இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள் ளிப்புரிசை ( 167 ) எனத் திருக்கோவையிலும் வருவன காண்க . அவை இரும்பு வெள்ளி பொன்னாலாகிய மதில்களையுடைய நகரங்கள் . எயிற்குலம் மூன்றிருந்தீ யெய்த வெய்தவன் ( 36 ) என்னும் திருக் கோவையார் உரையில் எயிற்குலம் மூன்றென்றார் அவை இரும்பும் வெள்ளியும் பொன்னுமாகிய சாதிவேறுபாடுடைமையின் எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க . எய்த என்ற வினையால் தீயா கிய அம்பு எய்து எரித்த என்பது பெறப்படும் . ' ஒங்குமலைப் பொருவிற் பாம்பு ஞாண் கொளீஇ யொருகணை கொண்டு மூவெயி லுடற்றிப் பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் திரிபுர மெரியத் தேவர் வேண்ட வெரிமுகப் பேரம் பேவல் கேட்ப வுமையவ ளொரு திற னாக வோங்கிய விமைய னாடிய கொடு கொட்டி யாடலும் ( சிலப்.6-40 7 ) என வருவன காண்க . அம்பு - திருமாலாகிய அம்பு . வில் - மேருமலை வில் . புரம் எரிய வளைத்த மேருச் சிலையானை மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டு எயில் ( 4m . 55-1-4 ) அயிலார் அம்பெரி மேருவில்லாகவே எயிலாரும் பொடியாய் விழ எய்தவன் ( நாவு.276-6 ) தொட்டான் ( நாவு.181-3 ) ( நாவு . 183-9 )