திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் 639 வண்டுங் கன்றுங் கைவளை" என்பது பிங்கலந்தை (பிங். 6- 77). தோள் வளை - தோளில் அணியும் தொடி "தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து" (சிலப். 6-90) என வருதல் காண்க. ஆர்ப்ப ஆர்ப்ப என்ற அடுக்கு நான்கும் இடைவிடாது ஒலிப்பவென்றவாறு.சூடகந் தோள் வளை ஆர்த்தல் சுண்ணமிடித்தலால் என்க. சூடகமு மேகலையு மார்ப்பு வார்ப்பு (சிலப். 12-ஆய்பொன்) என வருதல் காண்க. தொண்டர் - சுண்ணவிழாவிற் கலந்துகொள்ள வந்த தொண்டர் முதிரும் அன்புடையாரே தொண்டர் என்பது; "முதிரும் அன்புடைத் தொண்டர்'' "கொண்ட வன்பினிற் குறைபடா வடியவ ரடிமைத் தொண்டு மொத்தலால்'' என வருவனவற்றாலறிக. (பெரிய. அமர்நீதி. 18) 'பரியக நூபுரம் பாடகஞ் சதங்கை பரியகங் காலுக் கமைவுற வணிந்து" (பெரிய. அமர்நீதி. 44) நாடவர்- நாட்டிலுள்ள பொதுமக்கள். நம் தம்மை என்பதில் நம் தம்மை இகழ்ந்து என ஒருசொல் வருவிக்க. நாடவர் நம் தம்மை யார்ப்ப வார்ப்ப என்றது உலகியல்பினையுடைய நாட்டிலுள்ளார் இறைவன் அருள்பெற்று அவ்வுலகியல்பில் நில்லாத நம்மை இகழ்ந்து ஆரவாரிப்ப என்றவாறு. "தில்லையானருள் பெற்றார் உலகியல்பினராய் நில்லாமையின் அவ்வருளுலகத்தார்க் கலராவென்பது கருத்து, நாட வர் நம் தம்மை யார்ப்ப வார்ப்பஎன்பதூஉ மக்கருத்தேபற்றி வந் தது' என்னும் திருக்கோவை (180) கண்டறியற்பாலது. நாமும் அவர் தம்மை என்பதற்கு நாமும் அவர்தம் அறியாமையை எண்ணி நகைத்து எனச் சில சொற்கள் வருவித்துரைக்க. பாடகம் - காலில் அணியும் ஒருவகை அணி. (சிலப்.6-84-5) என வருதல் காண்க பாடகமெல்லடி யார்க்கும் மங்கை என்றது உமையம்மையை. 'பாடகமெல்லடிப் பாவையோடும் படுபிணக்காடிடம் பற்றிநின்று நாடகமாடு நள்ளாறுடைய நம்பெருமான்'' (ஞான.7-1) ''பாடகஞ்சேர் மெல்லடிப் பாவையாரை நீயும் போய்' (நாவு. 247-3) எனத் தேவாரத்தும் வருவன காண்க. பராபரன் - பரைக்கு மேலானவன். பரை - சுத்தமாயை.
திருப்பொற்சுண்ணம் 639 வண்டுங் கன்றுங் கைவளை என்பது பிங்கலந்தை ( பிங் . 6- 77 ) . தோள் வளை - தோளில் அணியும் தொடி தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து ( சிலப் . 6-90 ) என வருதல் காண்க . ஆர்ப்ப ஆர்ப்ப என்ற அடுக்கு நான்கும் இடைவிடாது ஒலிப்பவென்றவாறு.சூடகந் தோள் வளை ஆர்த்தல் சுண்ணமிடித்தலால் என்க . சூடகமு மேகலையு மார்ப்பு வார்ப்பு ( சிலப் . 12 - ஆய்பொன் ) என வருதல் காண்க . தொண்டர் - சுண்ணவிழாவிற் கலந்துகொள்ள வந்த தொண்டர் முதிரும் அன்புடையாரே தொண்டர் என்பது ; முதிரும் அன்புடைத் தொண்டர் ' ' கொண்ட வன்பினிற் குறைபடா வடியவ ரடிமைத் தொண்டு மொத்தலால் ' ' என வருவனவற்றாலறிக . ( பெரிய . அமர்நீதி . 18 ) ' பரியக நூபுரம் பாடகஞ் சதங்கை பரியகங் காலுக் கமைவுற வணிந்து ( பெரிய . அமர்நீதி . 44 ) நாடவர்- நாட்டிலுள்ள பொதுமக்கள் . நம் தம்மை என்பதில் நம் தம்மை இகழ்ந்து என ஒருசொல் வருவிக்க . நாடவர் நம் தம்மை யார்ப்ப வார்ப்ப என்றது உலகியல்பினையுடைய நாட்டிலுள்ளார் இறைவன் அருள்பெற்று அவ்வுலகியல்பில் நில்லாத நம்மை இகழ்ந்து ஆரவாரிப்ப என்றவாறு . தில்லையானருள் பெற்றார் உலகியல்பினராய் நில்லாமையின் அவ்வருளுலகத்தார்க் கலராவென்பது கருத்து நாட வர் நம் தம்மை யார்ப்ப வார்ப்பஎன்பதூஉ மக்கருத்தேபற்றி வந் தது ' என்னும் திருக்கோவை ( 180 ) கண்டறியற்பாலது . நாமும் அவர் தம்மை என்பதற்கு நாமும் அவர்தம் அறியாமையை எண்ணி நகைத்து எனச் சில சொற்கள் வருவித்துரைக்க . பாடகம் - காலில் அணியும் ஒருவகை அணி . ( சிலப்.6-84-5 ) என வருதல் காண்க பாடகமெல்லடி யார்க்கும் மங்கை என்றது உமையம்மையை . ' பாடகமெல்லடிப் பாவையோடும் படுபிணக்காடிடம் பற்றிநின்று நாடகமாடு நள்ளாறுடைய நம்பெருமான் ' ' ( ஞான.7-1 ) ' ' பாடகஞ்சேர் மெல்லடிப் பாவையாரை நீயும் போய் ' ( நாவு . 247-3 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . பராபரன் - பரைக்கு மேலானவன் . பரை - சுத்தமாயை .