திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பரைக்குப் பரன். "பந்தம் வீடவையாய பராபரன்'" (நாவு. 120-3) பராபரன் - பரத்துக்குப் பரன்; பரைக்குப் பரன் எனினுமாம். பரை உமாதேவி. ஆடகம் - நால்வகைப் பொன்களுள் ஒன்று. ஆடகமா மலை என்றது பொன்மயமான மகாமேரு மலையை. இறைவன் பொன் வண்ணமுடையனாதல்பற்றி ''ஆடகமாமலை யன்னகோ” என்றார். 640 ஆர்ப்ப, ஆர்ப்ப, ஆர்ப்ப, ஆர்ப்பப் பராபரனுக்கு மாமலையன்ன கோவுக்கு ஆட நாம் பொற்சுண்ணம் இடித்தும் என முடிக்க. இதன்கண், பாடகமெல்லடியார்க்கு மங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடகமாமலை யன்னகோவுக்கு ஆடப்பொற்சுண்ண னும் பதிகநுதலிய மிடித்தும் என்பதனால் ஆனந்தமனோலயம் எ பொருள் போதருதல் காண்க. 202 வாட்டடங் கண்மட மங் கை நல்லீர் வரிவளை யார்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச் சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி 7 ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. ப-ரை. வாள் தடம் கண்மட மங்கை நல்லீர் - ஒளிபொருந்திய அகன்ற கண்களையுடைய மடப்பத்தினையுடைய மங்கையர்களாகிய நல்லீரே, வரிவளை ஆர்ப்ப - வரியினையுடைய வளைகள் ஒலிப்பவும், வண் கொங்கை பொங்க -வளவிய தனங்கள் மேலெழுந்து விளங்கவும். தோள் முண்டம் திருதுதைந்து இலங்க - தோளின்கண் முக்குறியாகிய திருவெண்ணீறு செறிந்து விளங்க. எம்பிரான் சோத்துஎன்று சொல்லி சொல்லி - எங்கள் தலைவனே நினக்கு வணக்கம் என்று பன்முறைகூறி, நாள் கொண்ட மலர் நாண் பாதம் காட்டி - அன்றலர்ந்த செந்தா மரை மலரும் நாணுதற் கேதுவாகிய உயர்வினையுடைய திருவடிகளைக் காட்டியருளி, நாயில் கடைப்பட்ட நம்மை - நாயினும் கீழ்ப்பட்ட நம்மை. இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடி பாடி - இப்பிறப் பில் ஆட்கொண்டருளிய சிறப்பியல்புகளை இடைவிடாது பாடி, ஆட பொற் சுண்ணம் நாம் இடித்தும் - அவ்விறைவன் தீர்த்தமாடுதற்குத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக. மங்கை நல்லீர், வரிவளை ஆர்ப்ப, கொங்கை பொங்க, தோளின் கண் முக்குறியாகிய திருவெண்ணீறு செறிந்து விளங்க, எம்பிரானே
திருவாசக ஆராய்ச்சியுரை பரைக்குப் பரன் . பந்தம் வீடவையாய பராபரன் ' ( நாவு . 120-3 ) பராபரன் - பரத்துக்குப் பரன் ; பரைக்குப் பரன் எனினுமாம் . பரை உமாதேவி . ஆடகம் - நால்வகைப் பொன்களுள் ஒன்று . ஆடகமா மலை என்றது பொன்மயமான மகாமேரு மலையை . இறைவன் பொன் வண்ணமுடையனாதல்பற்றி ' ' ஆடகமாமலை யன்னகோ என்றார் . 640 ஆர்ப்ப ஆர்ப்ப ஆர்ப்ப ஆர்ப்பப் பராபரனுக்கு மாமலையன்ன கோவுக்கு ஆட நாம் பொற்சுண்ணம் இடித்தும் என முடிக்க . இதன்கண் பாடகமெல்லடியார்க்கு மங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடகமாமலை யன்னகோவுக்கு ஆடப்பொற்சுண்ண னும் பதிகநுதலிய மிடித்தும் என்பதனால் ஆனந்தமனோலயம் பொருள் போதருதல் காண்க . 202 வாட்டடங் கண்மட மங் கை நல்லீர் வரிவளை யார்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச் சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி 7 ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே . - ரை . வாள் தடம் கண்மட மங்கை நல்லீர் - ஒளிபொருந்திய அகன்ற கண்களையுடைய மடப்பத்தினையுடைய மங்கையர்களாகிய நல்லீரே வரிவளை ஆர்ப்ப - வரியினையுடைய வளைகள் ஒலிப்பவும் வண் கொங்கை பொங்க -வளவிய தனங்கள் மேலெழுந்து விளங்கவும் . தோள் முண்டம் திருதுதைந்து இலங்க - தோளின்கண் முக்குறியாகிய திருவெண்ணீறு செறிந்து விளங்க . எம்பிரான் சோத்துஎன்று சொல்லி சொல்லி - எங்கள் தலைவனே நினக்கு வணக்கம் என்று பன்முறைகூறி நாள் கொண்ட மலர் நாண் பாதம் காட்டி - அன்றலர்ந்த செந்தா மரை மலரும் நாணுதற் கேதுவாகிய உயர்வினையுடைய திருவடிகளைக் காட்டியருளி நாயில் கடைப்பட்ட நம்மை - நாயினும் கீழ்ப்பட்ட நம்மை . இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடி பாடி - இப்பிறப் பில் ஆட்கொண்டருளிய சிறப்பியல்புகளை இடைவிடாது பாடி ஆட பொற் சுண்ணம் நாம் இடித்தும் - அவ்விறைவன் தீர்த்தமாடுதற்குத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக . மங்கை நல்லீர் வரிவளை ஆர்ப்ப கொங்கை பொங்க தோளின் கண் முக்குறியாகிய திருவெண்ணீறு செறிந்து விளங்க எம்பிரானே