திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஆடி, அம்பலத்து ஆடினானுக்கு ஆடபொன் சுண்ணம் நாம் இடித்தும் தில்லையம்பலத்தின்கண் திருக்கூத்து ஆடுகின்றவனுக்குத்தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக. 646 மங்கையர்களே, பக்கங்களில் நகைவாள் நிலா எறிப்பவும், வாயைத் திறந்து பவளம் போலும் உதடு துடிப்பவும் பாடி, நம்மை ஆட்கொண்டவாறும், நம்பணி கொண்டவண்ணமும் பாடிப்பாடித் தேடுங்கள். எம்பெருமானைத் தேடி, அங்ஙனம் தேடிக் காணாதவிடத் துத் திகைப்படைந்து கண்டவிடத்து மனம் களிப்பத் தெளி வடைந்து ஆடி, அம்பலத்தின் கண் திருக்கூத்தாடினானுக்குத் தீர்த்த மாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக என்பதாம். என மாடு - பக்கம். நகை வாள் நிலா எறிப்ப என்றது, வாய்திறந்து பாடுதலால் பல்வரிசைகளின் ஒளியாகிய நிலவு வீச என்றவாறு.பவ ளம் பவளம் போன்ற உதடுக்கு உருவகம். துடிப்ப - அசைய. "செங்கனி வாயித ழுந்துடிப்பச் சேயிழையீர் சிவலோகம் பாடி"(திருப்பொ. 14) என்பர். பணிகொண்ட வண்ணம் - நாம் செய்த தொண்டினை ஏற்றுக் கொண்ட விதம். தேடித் திகைத்து சித்தம் களிப்பத் தேறி மாறிக் கூட்டுக. எம்பெருமானைத் தேடுதல் -எம்பெருமானை உள் ளத்தினுள்ளே உணர்வாலறிய முயலுதல். ஆடுதல் - மகிழ்ச்சியால் கூத்தாடுதல்.பாடுமின் - பாடி "பாடுமின் பத்தருள்ளீர்" (சுந். 22-3) ஆடுமின்-ஆடி "ஆடுமின் அன்புடையீர்" (சுந். 22-3) எனவருவன காண்க.பாடுமின் ஆடுமின் என்னும் வினைமுற்றுக்கள் பாடி ஆடி என வினையெச்சப்பொருளில் வந்தன. பாடி, தேடி ஆடி பொற்சுண்ணம் இடித்தும் என முடிக்க. இதன் கண் "சித்தங்களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின்" என் பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க. 11 206 மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன்றன்னை ஐயனை யையர்பி ரானைநம்மை யகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோட் பையர வல்குன் மடந்தைநல்லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
திருவாசக ஆராய்ச்சியுரை ஆடி அம்பலத்து ஆடினானுக்கு ஆடபொன் சுண்ணம் நாம் இடித்தும் தில்லையம்பலத்தின்கண் திருக்கூத்து ஆடுகின்றவனுக்குத்தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக . 646 மங்கையர்களே பக்கங்களில் நகைவாள் நிலா எறிப்பவும் வாயைத் திறந்து பவளம் போலும் உதடு துடிப்பவும் பாடி நம்மை ஆட்கொண்டவாறும் நம்பணி கொண்டவண்ணமும் பாடிப்பாடித் தேடுங்கள் . எம்பெருமானைத் தேடி அங்ஙனம் தேடிக் காணாதவிடத் துத் திகைப்படைந்து கண்டவிடத்து மனம் களிப்பத் தெளி வடைந்து ஆடி அம்பலத்தின் கண் திருக்கூத்தாடினானுக்குத் தீர்த்த மாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக என்பதாம் . என மாடு - பக்கம் . நகை வாள் நிலா எறிப்ப என்றது வாய்திறந்து பாடுதலால் பல்வரிசைகளின் ஒளியாகிய நிலவு வீச என்றவாறு.பவ ளம் பவளம் போன்ற உதடுக்கு உருவகம் . துடிப்ப - அசைய . செங்கனி வாயித ழுந்துடிப்பச் சேயிழையீர் சிவலோகம் பாடி ( திருப்பொ . 14 ) என்பர் . பணிகொண்ட வண்ணம் - நாம் செய்த தொண்டினை ஏற்றுக் கொண்ட விதம் . தேடித் திகைத்து சித்தம் களிப்பத் தேறி மாறிக் கூட்டுக . எம்பெருமானைத் தேடுதல் -எம்பெருமானை உள் ளத்தினுள்ளே உணர்வாலறிய முயலுதல் . ஆடுதல் - மகிழ்ச்சியால் கூத்தாடுதல்.பாடுமின் - பாடி பாடுமின் பத்தருள்ளீர் ( சுந் . 22-3 ) ஆடுமின் - ஆடி ஆடுமின் அன்புடையீர் ( சுந் . 22-3 ) எனவருவன காண்க.பாடுமின் ஆடுமின் என்னும் வினைமுற்றுக்கள் பாடி ஆடி என வினையெச்சப்பொருளில் வந்தன . பாடி தேடி ஆடி பொற்சுண்ணம் இடித்தும் என முடிக்க . இதன் கண் சித்தங்களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் என் பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க . 11 206 மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன்றன்னை ஐயனை யையர்பி ரானைநம்மை யகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோட் பையர வல்குன் மடந்தைநல்லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே .