திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் அமுதமானவனை, ப. ரை. போது அரி கண் இணை - பூப்போன்ற செவ்வரியினை யுடைய இரண்டு கண்களையும், பொன் தொடி தோள் - பொன்னாற் செய்த தொடியினையுடைய தோள்களையும். பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் - படத்தையுடைய பாம்பை ஒக்கும் அல்குலையு முடைய மங்கையர்களாகிய நல்லீரே, மை அமர் கண்டனை - நஞ்சின் கருமைதங்கிய கண்டத்தையுடையவனை, வானநாடர் மருந்தினை விண்ணுலகத்தவர்களுக்கு மாணிக்கக் கூத்தன் தன்னை -மாணிக்கம் போலும் கூத்தப்பிரானை, ஐயனை - தலைவனை. ஐயர் பிரானை - தலைவர்களுக்குத் தலைவனை, நம்மை அகப்படுத்து ஆட் கொண்டு - எங்களைத் தன்பால் வயப்படுத்தி ஆட்கொண்டருளி, அருமை காட்டும் - தனது அரிய தன்மைகளைக் காட்டியருளிய, பொய்யர் தம் பொய்யினை - பொய்யர்களுக்குப் பொய்ப்பொருளா யிருப்பவனை,மெய்யர் மெய்யை - மெய்யர்களுக்கு மெய்ப்பொருளா யிருப்பவனை,பாடிபொன் சுண்ணம் நாம் இடித்தும் - பாடிக்கொண்டு அப்பெருமான் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக. மடந்தை நல்லீர்; மையமர் கண்டனும், வானநாடர்க்கு மருந்தா யுள்ளவனும், மாணிக்கக்கூத்தனும்,ஐயனும்,ஐயர்பிரானும், நம்மை அகப்படுத்தி ஆட்கொண்டு தமது அருமையைக் காட்டும் பொய்யர்க் குப் பொய்யனும், மெய்யர்க்கு மெய்யனுமாகிய இறைவனைப் பாடிக் கொண்டு அப்பெருமான் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண் ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம். 647 அரவு போதரிக் கண்ணிணையினையும் பொற்றொடித் தோளினையும் பையரவல் குலினையுமுடைய மடந்தை நல்லார் என்க. போது - பூ. அரி செவ்வரி. பையரவல்குல் -படத்தையுடைத்தாகிய போலும் அல்குல். பையுடை வாளரவத்தல்குல் - படத்தையுடைத் தாகிய ஒளியையுடைய அரவு போலும் அல்குலையுடையாள் (கோவை.48 உரை). "பைதயங்கும் அரவம் புரையு மல்குற் பைந் தொடி" - படம் விளங்கும் பாம்பையொக்கும் அல்குலையுடைய பைந் தொடி (கோவை. 199) எனப் பேராசிரியர் உரைத்தமை காண்க. இனி அரவுப்பை அல்குல் எனக் கூட்டிப் பாம்பின் படம்போல் அல்குல் எனினுமமையும். . மை - கருமை. ஈண்டு கருமை நிறமமைந்த நஞ்சினை, "கண்டங் கரியன் கரியீருரியன்" "மை கொள் கண்டன்'* 'கறுத்தாய் கடனஞ்சமுதுண்டு கண்டம்" (பொன்வண்ணத்.29)- (சுந். 12-10) (சுந். 4-8)
திருப்பொற்சுண்ணம் அமுதமானவனை . ரை . போது அரி கண் இணை - பூப்போன்ற செவ்வரியினை யுடைய இரண்டு கண்களையும் பொன் தொடி தோள் - பொன்னாற் செய்த தொடியினையுடைய தோள்களையும் . பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் - படத்தையுடைய பாம்பை ஒக்கும் அல்குலையு முடைய மங்கையர்களாகிய நல்லீரே மை அமர் கண்டனை - நஞ்சின் கருமைதங்கிய கண்டத்தையுடையவனை வானநாடர் மருந்தினை விண்ணுலகத்தவர்களுக்கு மாணிக்கக் கூத்தன் தன்னை -மாணிக்கம் போலும் கூத்தப்பிரானை ஐயனை - தலைவனை . ஐயர் பிரானை - தலைவர்களுக்குத் தலைவனை நம்மை அகப்படுத்து ஆட் கொண்டு - எங்களைத் தன்பால் வயப்படுத்தி ஆட்கொண்டருளி அருமை காட்டும் - தனது அரிய தன்மைகளைக் காட்டியருளிய பொய்யர் தம் பொய்யினை - பொய்யர்களுக்குப் பொய்ப்பொருளா யிருப்பவனை மெய்யர் மெய்யை - மெய்யர்களுக்கு மெய்ப்பொருளா யிருப்பவனை பாடிபொன் சுண்ணம் நாம் இடித்தும் - பாடிக்கொண்டு அப்பெருமான் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக . மடந்தை நல்லீர் ; மையமர் கண்டனும் வானநாடர்க்கு மருந்தா யுள்ளவனும் மாணிக்கக்கூத்தனும் ஐயனும் ஐயர்பிரானும் நம்மை அகப்படுத்தி ஆட்கொண்டு தமது அருமையைக் காட்டும் பொய்யர்க் குப் பொய்யனும் மெய்யர்க்கு மெய்யனுமாகிய இறைவனைப் பாடிக் கொண்டு அப்பெருமான் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண் ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம் . 647 அரவு போதரிக் கண்ணிணையினையும் பொற்றொடித் தோளினையும் பையரவல் குலினையுமுடைய மடந்தை நல்லார் என்க . போது - பூ . அரி செவ்வரி . பையரவல்குல் -படத்தையுடைத்தாகிய போலும் அல்குல் . பையுடை வாளரவத்தல்குல் - படத்தையுடைத் தாகிய ஒளியையுடைய அரவு போலும் அல்குலையுடையாள் ( கோவை .48 உரை ) . பைதயங்கும் அரவம் புரையு மல்குற் பைந் தொடி - படம் விளங்கும் பாம்பையொக்கும் அல்குலையுடைய பைந் தொடி ( கோவை . 199 ) எனப் பேராசிரியர் உரைத்தமை காண்க . இனி அரவுப்பை அல்குல் எனக் கூட்டிப் பாம்பின் படம்போல் அல்குல் எனினுமமையும் . . மை - கருமை . ஈண்டு கருமை நிறமமைந்த நஞ்சினை கண்டங் கரியன் கரியீருரியன் மை கொள் கண்டன் ' * ' கறுத்தாய் கடனஞ்சமுதுண்டு கண்டம் ( பொன்வண்ணத் .29 ) ( சுந் . 12-10 ) ( சுந் . 4-8 )