திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மின்னிடை - மின்போலும் நுண்ணிய இடை. "மின்னியல் நுண் ணிடையர்கள்'' (திருப்படை. 6) 'மின்றங்கிடையொடு" "மின்றங் கிடை அன்னந் நடையாண் மின்னணி நுண்ணிடைக்கோ” (கோவை. 221; 268; 342) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. துவர் -பவளம். வெண்ணகை - வெள்ளியமுறுவல்" (கோவை. 58 பேர்) பண்ணமர் மென்மொழி - பண்ணின் இனிமைபொருந்திய மெல்லிய மொழி. "பண்ணமரு மென்மொழியினாளை" (ஞான. 167-6) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. 650 மின்னிடையினையும் செந்துவர் வாயினையும் கருங்கண்ணினையும் வெண்ணகையினையும் பண்ணமர் மென்மொழியினையுமுடைய மகளிர் என்க. "மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் நுண்ணிடையீர்" (தெள். 9) "சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடைபீர்" (கோவை.73) செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே'' (கோவை.338) 'செந்துவர் வாய்க் கருங்கண்ணிணை வெண்ணகைத்தேன் மொழியார்" (நாவு. 104-5) "செந்துவர் வாய்க்க ருங்கட் சிற்றிடைப் பெரிய வல்குற் பைந்தொடி யணங்கை” (நம்பி. திருவிளை - வலைவீசின. 17) என வருவனவற்றால் அறியப்படும். சிவன் சத்தியுடன் இயைந்து சங்கற்பித்துத் தத்துவங்களையுண் டாக்கலால் அச்சத்தியாகிய இமவான் மகட்குச் சிவனைக் “கேள்வன்” என்றார். இமவான் மகள் பனிமலையரசன் மகளாகிய பார்வதிதேவி. "இமவான் மகள் கூறன்றிக் கூறுவதில்லையோ”(சுந். 44-2)'இமவான் மகளஞ்ச" சுந். 68-9) எனத் தேவாரத்தும் வருவன காண்க. சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் 'மகன்" என்றும், சிவதத்துவத்தினின்று சத்தி தத்துவந் தோன்ற லின் தகப்பன் என்றும் கூறினார். "தவளத்த நீறணியுந் தடந்தோள் அண்ணறன்னொரு பாலவளத்தனாம் மகனாம் தில்லையான்” (112) என் னும் திருக்கோவையார் விசேடவுரையில் சிவதத்துவத்தினின்றுஞ் சத்திதத்துவந் தோன்றலின் அவளத்தனாமென்றும், சத்தி தத்துவத்தி னின்றுஞ் சதாசிவ தத்துவந் தோன்றலின் மகனாமென்றுங் கூறினார். இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் என்ப தூஉம் அப்பொருண்மேல் வந்தது எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க.
திருவாசக ஆராய்ச்சியுரை மின்னிடை - மின்போலும் நுண்ணிய இடை . மின்னியல் நுண் ணிடையர்கள் ' ' ( திருப்படை . 6 ) ' மின்றங்கிடையொடு மின்றங் கிடை அன்னந் நடையாண் மின்னணி நுண்ணிடைக்கோ ( கோவை . 221 ; 268 ; 342 ) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . துவர் -பவளம் . வெண்ணகை - வெள்ளியமுறுவல் ( கோவை . 58 பேர் ) பண்ணமர் மென்மொழி - பண்ணின் இனிமைபொருந்திய மெல்லிய மொழி . பண்ணமரு மென்மொழியினாளை ( ஞான . 167-6 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . 650 மின்னிடையினையும் செந்துவர் வாயினையும் கருங்கண்ணினையும் வெண்ணகையினையும் பண்ணமர் மென்மொழியினையுமுடைய மகளிர் என்க . மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் நுண்ணிடையீர் ( தெள் . 9 ) சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடைபீர் ( கோவை .73 ) செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே ' ' ( கோவை .338 ) ' செந்துவர் வாய்க் கருங்கண்ணிணை வெண்ணகைத்தேன் மொழியார் ( நாவு . 104-5 ) செந்துவர் வாய்க்க ருங்கட் சிற்றிடைப் பெரிய வல்குற் பைந்தொடி யணங்கை ( நம்பி . திருவிளை - வலைவீசின . 17 ) என வருவனவற்றால் அறியப்படும் . சிவன் சத்தியுடன் இயைந்து சங்கற்பித்துத் தத்துவங்களையுண் டாக்கலால் அச்சத்தியாகிய இமவான் மகட்குச் சிவனைக் கேள்வன் என்றார் . இமவான் மகள் பனிமலையரசன் மகளாகிய பார்வதிதேவி . இமவான் மகள் கூறன்றிக் கூறுவதில்லையோ ( சுந் . 44-2 ) ' இமவான் மகளஞ்ச சுந் . 68-9 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் ' மகன் என்றும் சிவதத்துவத்தினின்று சத்தி தத்துவந் தோன்ற லின் தகப்பன் என்றும் கூறினார் . தவளத்த நீறணியுந் தடந்தோள் அண்ணறன்னொரு பாலவளத்தனாம் மகனாம் தில்லையான் ( 112 ) என் னும் திருக்கோவையார் விசேடவுரையில் சிவதத்துவத்தினின்றுஞ் சத்திதத்துவந் தோன்றலின் அவளத்தனாமென்றும் சத்தி தத்துவத்தி னின்றுஞ் சதாசிவ தத்துவந் தோன்றலின் மகனாமென்றுங் கூறினார் . இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் என்ப தூஉம் அப்பொருண்மேல் வந்தது எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க .