திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

656 திருவாசக ஆராய்ச்சியுரை றது மெய் யடியாரை. தம்மொடு சேர்ந்து என ஒருசொல் வருவித் துரைக்க. ஆட்செய்தல் - ஆளாக இருந்து தொண்டுசெய்தல். வண் ணங்கள் - தொண்டின் பேதங்கள். பூதேவரு முண்மையின் விண்மேல் தேவர் என்றார். தேவர்கள் கனவிலும் கண்டறியாமை திரோதான மறைப்பினால். கனவிலும் - எச்சவும்மை, உயர்வு சிறப்புமாம். கண் டறியாப் பாதங்கள் என இயையும். "கனவிலும் தேவர்க்கரியாய் போற்றி" (போற்றி. 143) 'கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனை கழலோன்' (தெள்.10) என அடிகள் பிறாண்டும் அருளுதலுங் காண்க. செல்வச் சே - வளப் பொருந்திய சே. வளம்- இளமையும் வலியும் உயர் வும் முதலியன. சே - தருமதேவதையாகிய எருது. சேவகம் ஏந்திய வெல்கொடி என்றது இடபக்கொடியை. தன்னகத்தே தாங்கிய வெல் கொடியானும் என்றவாறு. "ஏறணி வெல்கொடியான்" (ஞான். 105-7) "சே பிரியா வெல்கொடியினானே யென்றும்" “சே வார்ந்த வெல் கொடியாய் போற்றி" (நாவு. 244-6; 245-9) சே வேந்திய கொடியான்" (சுந். 82-8) எனத் தேவாரத்தும் வருவனகாண்க. புரஞ் செற்ற கொற்றச் சேவகன் சிவபெருமான் என மாறிக் கூட்டிப் பொருள்கொள்க. "திரிகின்ற முப்புரஞ் செற்றபிரானை" (திருமந். 348) செற்றவார் புரமூன்றெரியெழச் செற்ற செஞ்சடை நஞ்சுடைக்கண்டர்" "புரமூன்றெரியச் செற்றபுரி புன்சடையானே" (சுந்.14-3) (சுந். 47-9) 'விண்வாய்ச் செயிரொன்று முப்புரஞ் செற்றவன்" (கோவை. 18) செற்ற-கெடுத்த; (கோவை 13 உரை காண்க). புரங்கள் பாசண்ட தருமமாகிய தீங்கிலே புகுதலான் அவற்றைச் செற்றார் என்க. குறு கலர் ஊர் தீங்கில்புக செற்ற கொற்றவன் - குறுகாதார் புரங்கள் பாசண்ட தருமமாகிய தீங்கிலே புகுதலான் அவற்றைக் கெடுத்த வெற்றியுடையவன் (கோவை 13 உரை). செம்பொன்செய் என்பதில் செய் உவமவுருபு. 'வேனிரைசெய் கண்ணியொடு மெல்லென விருந் தார்'' (சீவக. 2490) என்புழிபோல. செம்பொன் செய் சுண்ணம் என் றது திருப்பொற்சுண்ணம் என்பதன் விளக்கமாகும். நாமும் ஆவகை வந்து அன்பர் தம்மொடு (சேர்ந்து) ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி நாமங்கள் பாடி நாம் சுண்ணம் இடித்தும் என வினைமுடிபு செய்க. இதன்கண், செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவக மேந்திய வெல்கொடியான் சிவபெருமான் என்பதனால் ஆனந்தமனோ லயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 16
656 திருவாசக ஆராய்ச்சியுரை றது மெய் யடியாரை . தம்மொடு சேர்ந்து என ஒருசொல் வருவித் துரைக்க . ஆட்செய்தல் - ஆளாக இருந்து தொண்டுசெய்தல் . வண் ணங்கள் - தொண்டின் பேதங்கள் . பூதேவரு முண்மையின் விண்மேல் தேவர் என்றார் . தேவர்கள் கனவிலும் கண்டறியாமை திரோதான மறைப்பினால் . கனவிலும் - எச்சவும்மை உயர்வு சிறப்புமாம் . கண் டறியாப் பாதங்கள் என இயையும் . கனவிலும் தேவர்க்கரியாய் போற்றி ( போற்றி . 143 ) ' கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனை கழலோன் ' ( தெள் .10 ) என அடிகள் பிறாண்டும் அருளுதலுங் காண்க . செல்வச் சே - வளப் பொருந்திய சே . வளம்- இளமையும் வலியும் உயர் வும் முதலியன . சே - தருமதேவதையாகிய எருது . சேவகம் ஏந்திய வெல்கொடி என்றது இடபக்கொடியை . தன்னகத்தே தாங்கிய வெல் கொடியானும் என்றவாறு . ஏறணி வெல்கொடியான் ( ஞான் . 105-7 ) சே பிரியா வெல்கொடியினானே யென்றும் சே வார்ந்த வெல் கொடியாய் போற்றி ( நாவு . 244-6 ; 245-9 ) சே வேந்திய கொடியான் ( சுந் . 82-8 ) எனத் தேவாரத்தும் வருவனகாண்க . புரஞ் செற்ற கொற்றச் சேவகன் சிவபெருமான் என மாறிக் கூட்டிப் பொருள்கொள்க . திரிகின்ற முப்புரஞ் செற்றபிரானை ( திருமந் . 348 ) செற்றவார் புரமூன்றெரியெழச் செற்ற செஞ்சடை நஞ்சுடைக்கண்டர் புரமூன்றெரியச் செற்றபுரி புன்சடையானே ( சுந்.14-3 ) ( சுந் . 47-9 ) ' விண்வாய்ச் செயிரொன்று முப்புரஞ் செற்றவன் ( கோவை . 18 ) செற்ற - கெடுத்த ; ( கோவை 13 உரை காண்க ) . புரங்கள் பாசண்ட தருமமாகிய தீங்கிலே புகுதலான் அவற்றைச் செற்றார் என்க . குறு கலர் ஊர் தீங்கில்புக செற்ற கொற்றவன் - குறுகாதார் புரங்கள் பாசண்ட தருமமாகிய தீங்கிலே புகுதலான் அவற்றைக் கெடுத்த வெற்றியுடையவன் ( கோவை 13 உரை ) . செம்பொன்செய் என்பதில் செய் உவமவுருபு . ' வேனிரைசெய் கண்ணியொடு மெல்லென விருந் தார் ' ' ( சீவக . 2490 ) என்புழிபோல . செம்பொன் செய் சுண்ணம் என் றது திருப்பொற்சுண்ணம் என்பதன் விளக்கமாகும் . நாமும் ஆவகை வந்து அன்பர் தம்மொடு ( சேர்ந்து ) ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி நாமங்கள் பாடி நாம் சுண்ணம் இடித்தும் என வினைமுடிபு செய்க . இதன்கண் செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவக மேந்திய வெல்கொடியான் சிவபெருமான் என்பதனால் ஆனந்தமனோ லயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 16