திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

211 திருப்பொற்சுண்ணம் தேனக மாமலர்க் கொன்றைபாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி உம்பரும் இம்பரும் உய்யவன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப் பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 657 ப-ரை. தேன் அகம் மாமலர் கொன்றை பாடி - தேனைத் தன் னிடத்தேயுடைய பெருமை பொருந்திய கொன்றை மலர் மாலையைப் பாடியும், சிவபுரம் பாடி - சிவபுரத்தினைப் பாடியும், திரு சடைமேல் வான் அக மாமதி பிள்ளை பாடி - அழகிய சடைமேல் சூட்டப்பெற்ற விண்ணினை இடமாகக் கொண்ட சிறந்த இளம்பிறைச் சந்திரனைப் பாடியும், மால் விடை பாடி - திருமாலாகிய இடபவூர்தியைப்பாடி யும், வல கை ஏந்தும் ஊன் அக மா மழு சூலம்பாடி - வலத்திருக்கரங் களில் தாங்கிய உலகினுக்குத் தீங்கு இழைக்கும் கொடியாரது ஊனி ளைத் தன்னகத்துக் கொண்ட பெரிய மழுவையும் முத்தலைச்சூலத்தினை யும் பாடியும், உம்பரும் இம்பரும் உய்ய - விண்ணுலகத்தவரும் இம் மண்ணுலகத்தவரும் உய்யும் வண்ணம், அன்று நஞ்சு போனகமாக உண்டல்பாடி- அக்காலத்தில் திருப்பாற்கடலிலெழுந்த ஆலகால விடத்தினை உணவாக உட்கொண்ட அருட்டிறத்தினைப் பாடியும், பொன் திரு சுண்ணத்தினை நாம் இடிப்போமாக. O KITC இறைவனது கொன்றை மலர் மாலையைப் பாடியும், சிவபுரத்தி னைப் பாடியும், திருச்சடைமேற் சூடப்பட்ட இளம்பிறைச் சந்திரனைப் பாடியும், மால்விடை பாடியும், வலத்திருக்கரங்களில் ஏந்தும் மழுவை யும் முத்தலைச் சூலத்தினையும் பாடியும், உம்பரும் இம்பரும் உய்யும் வண்ணம் அக்காலத்தில் ஆலகாலவிடத்தினைப் போனகமாக உண்ட அருள்திறத்தினைப் பாடியும், அவ்விறைவன் தீர்த்தமாடும் பொருட் டுத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம். துணை ம - தேனக மலர்க் கொன்றை தேனைத் தன்னிடத்தேயுடைய கொன்றை மலர் மாலை. "தேனார் மலர்க்கொன்றை" (அம். 16) தேன் திகழ் கொன்றையும்" "தேனுடைக் கொன்றை' (அப்பர். 107-10; 104-4) என வருவன காண்க. இறைவனுக்குத் தாரும் மாலையும் கண்ணியும் கொன்றையாதல், " ''வண்டார் கொன்றைத் தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன்” நாவு.125-7) 72
211 திருப்பொற்சுண்ணம் தேனக மாமலர்க் கொன்றைபாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி உம்பரும் இம்பரும் உய்யவன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப் பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே . 657 - ரை . தேன் அகம் மாமலர் கொன்றை பாடி - தேனைத் தன் னிடத்தேயுடைய பெருமை பொருந்திய கொன்றை மலர் மாலையைப் பாடியும் சிவபுரம் பாடி - சிவபுரத்தினைப் பாடியும் திரு சடைமேல் வான் அக மாமதி பிள்ளை பாடி - அழகிய சடைமேல் சூட்டப்பெற்ற விண்ணினை இடமாகக் கொண்ட சிறந்த இளம்பிறைச் சந்திரனைப் பாடியும் மால் விடை பாடி - திருமாலாகிய இடபவூர்தியைப்பாடி யும் வல கை ஏந்தும் ஊன் அக மா மழு சூலம்பாடி - வலத்திருக்கரங் களில் தாங்கிய உலகினுக்குத் தீங்கு இழைக்கும் கொடியாரது ஊனி ளைத் தன்னகத்துக் கொண்ட பெரிய மழுவையும் முத்தலைச்சூலத்தினை யும் பாடியும் உம்பரும் இம்பரும் உய்ய - விண்ணுலகத்தவரும் இம் மண்ணுலகத்தவரும் உய்யும் வண்ணம் அன்று நஞ்சு போனகமாக உண்டல்பாடி- அக்காலத்தில் திருப்பாற்கடலிலெழுந்த ஆலகால விடத்தினை உணவாக உட்கொண்ட அருட்டிறத்தினைப் பாடியும் பொன் திரு சுண்ணத்தினை நாம் இடிப்போமாக . O KITC இறைவனது கொன்றை மலர் மாலையைப் பாடியும் சிவபுரத்தி னைப் பாடியும் திருச்சடைமேற் சூடப்பட்ட இளம்பிறைச் சந்திரனைப் பாடியும் மால்விடை பாடியும் வலத்திருக்கரங்களில் ஏந்தும் மழுவை யும் முத்தலைச் சூலத்தினையும் பாடியும் உம்பரும் இம்பரும் உய்யும் வண்ணம் அக்காலத்தில் ஆலகாலவிடத்தினைப் போனகமாக உண்ட அருள்திறத்தினைப் பாடியும் அவ்விறைவன் தீர்த்தமாடும் பொருட் டுத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம் . துணை - தேனக மலர்க் கொன்றை தேனைத் தன்னிடத்தேயுடைய கொன்றை மலர் மாலை . தேனார் மலர்க்கொன்றை ( அம் . 16 ) தேன் திகழ் கொன்றையும் தேனுடைக் கொன்றை ' ( அப்பர் . 107-10 ; 104-4 ) என வருவன காண்க . இறைவனுக்குத் தாரும் மாலையும் கண்ணியும் கொன்றையாதல் ' ' வண்டார் கொன்றைத் தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன் நாவு.125-7 ) 72