திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் எய்து அழித்தமையைப் பாடியும், ஏழை அடியோமை ஆட்கொண் டருளிய நன்மையினைப் புகழ்ந்து பாடியும் நின்று ஆடியாடி நம் தலை வற்குத் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம். அயன் தலை - இறைவனை இகழ்ந்த பிரமதேவனது தலை. 'அயன்றலை மறுத்தல் பாடி யருக்கனை படர்த்தல் பாடிக் கயந்தனை யுரித்தல் பாடிக் காலனை யுதைத்தல் பாடி வியன்புர மெரித்தல் பாடி வேள்கெட விழித்தல் பாடிச் சயந்தரு புழ்கண் மற்றும் பாடினான் சாலவாழ்த்தி' penஜப் பா (பலகையிட்ட.9) எனத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்து வருவன காண்க. அயன் தலைகொண்டு என்றது பிரமதேவனது ஐந்தலைகளுள் இறை வனை யிகழ்ந்த நடுத்தலையினை அவ்விறைவன்பாற் றோன்றிய வைரவக் கடவுள் கைவிரல் நகத்தினால் கிள்ளியெடுத்து என்றவாறு. 'பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம் Dina 661 எனக் கந்தபுராணத்தும், 166ET (கடவுள் வாழ்த்து) ‘"அறுத்தான் அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை” (ஞான.30-7) ""அமரர்வேண்ட, நிறங்கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தில் ஒன்றறுத்த" (ஞான.131-7) ‘அங்க மலத்தயன் சிரங்கள் ஐந்திலொன்றை அறுத்தவன்" (நாவு.243-6) எனத் தேவாரத்தும் வருவன காண்க. கிள்ளியெடுத்த தலையினைப் பந்துபோலக் கொண்டு மற்றைய தேவர்களிடத்தும் குருதிப்பிச்சை ஏற்று அவர்களது செருக்கை அடக் கினன் என்பது வரலாறு. "மலர்வளர் மறையவன் வழிவழுவிய சிரமது கொடுபலி திரிதரு சிவன்” றும் "அலர்மிசை யந்தணன் உச்சிக்களை தலையிற்பலி கொள்ளுங் கருத்தானே" (ஞான.40-6) 'உளைந்தான் செறுதற்கரியான் தலையை உகிரொன்றினாற் களைந்தான் அதனை நிறைய நெடுமால் கணார் குருதி, வளைந்தான்'' (நாவு.84-7) (ஞான.20.8)
திருப்பொற்சுண்ணம் எய்து அழித்தமையைப் பாடியும் ஏழை அடியோமை ஆட்கொண் டருளிய நன்மையினைப் புகழ்ந்து பாடியும் நின்று ஆடியாடி நம் தலை வற்குத் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம் . அயன் தலை - இறைவனை இகழ்ந்த பிரமதேவனது தலை . ' அயன்றலை மறுத்தல் பாடி யருக்கனை படர்த்தல் பாடிக் கயந்தனை யுரித்தல் பாடிக் காலனை யுதைத்தல் பாடி வியன்புர மெரித்தல் பாடி வேள்கெட விழித்தல் பாடிச் சயந்தரு புழ்கண் மற்றும் பாடினான் சாலவாழ்த்தி ' pen ஜப் பா ( பலகையிட்ட .9 ) எனத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்து வருவன காண்க . அயன் தலைகொண்டு என்றது பிரமதேவனது ஐந்தலைகளுள் இறை வனை யிகழ்ந்த நடுத்தலையினை அவ்விறைவன்பாற் றோன்றிய வைரவக் கடவுள் கைவிரல் நகத்தினால் கிள்ளியெடுத்து என்றவாறு . ' பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம் Dina 661 எனக் கந்தபுராணத்தும் 166ET ( கடவுள் வாழ்த்து ) அறுத்தான் அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை ( ஞான.30-7 ) அமரர்வேண்ட நிறங்கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தில் ஒன்றறுத்த ( ஞான.131-7 ) அங்க மலத்தயன் சிரங்கள் ஐந்திலொன்றை அறுத்தவன் ( நாவு.243-6 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . கிள்ளியெடுத்த தலையினைப் பந்துபோலக் கொண்டு மற்றைய தேவர்களிடத்தும் குருதிப்பிச்சை ஏற்று அவர்களது செருக்கை அடக் கினன் என்பது வரலாறு . மலர்வளர் மறையவன் வழிவழுவிய சிரமது கொடுபலி திரிதரு சிவன் றும் அலர்மிசை யந்தணன் உச்சிக்களை தலையிற்பலி கொள்ளுங் கருத்தானே ( ஞான.40-6 ) ' உளைந்தான் செறுதற்கரியான் தலையை உகிரொன்றினாற் களைந்தான் அதனை நிறைய நெடுமால் கணார் குருதி வளைந்தான் ' ' ( நாவு.84-7 ) ( ஞான .20.8 )