திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

664 213. திருவாசக ஆராய்ச்சியுரை வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும்பாடி மதியும் பாடி சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் சுட்டிய மாசுணக் கச்சைபாடிக் கங்கணம் பாடிக் கவித்தகைம் மேல் இட்டுநின் றாடும்அரவம் பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே. செல்வம் பாடி ப-ரை : கொன்றை மலர் வட்ட மாலை பாடி - கொன்றை மலரி னாற் கட்டப்பட்ட வட்டமான மாலையினைப்பாடி, மத்தமும் பாடி- பொன் ஊமத்தை மலர் மாலையினையும் பாடி, மதியமும் பாடி- பிறைத் திங்களையும் பாடி, சிட்டர்கள் வாழும் தென்தில்லைபாடி - பெரியோர்களான தில்லைவாழ் அந்தணர்கள் வாழுகின்ற தெற்கின் கண்ணுள்ளதாகிய தில்லைநகரைப்பாடி, சிற்றம்பலத்து எங்கள் தில்லை நகரிலுள்ள திருச்சிற்றம்பலத்து எழுந் தருளிய எங்களுடைய செல்வமான கூத்தப்பிரானைப்பாடி, கட் டிய மாசுண கச்சைபாடி- அப்பெருமான் அரையிற் கட்டிய பாம் பாகிய அரைஞாண் கச்சையைப் பாடி, கங்கணம்பாடி - அவனது பாம்பாகிய கங்கணத்தையும் பாடி, கவித்த கைமேல் இட்டு நின்று ஆடும் அரவம் பாடி - தூக்கிய திருவடியை நோக்கிக் கவிந்திருக்கின்ற திருக்கரத்தின்மேலே இடப்பட்டு நின்று ஆடிக்கொண்டிருக்கின்ற பாம்பினைப்பாடி, ஈசற்குச் சுண்ணம் நாம் இடித்தும் - கூத்தப்பிரா னுக்குத் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக. - கொன்றை மலர்மாலையைப் பாடி, அதனோடு ஊமத்தை மலர் மாலையையும் பாடி, பிறைத் திங்களையும்பாடி, சிட்டர்கள் வாழும் தில்லையைப்பாடி, அத்தில்லைக்கணுளதாகிய திருச்சிற்றம்பலத்து எழுந் தருளிய எங்கள் செல்வமாகிய கூத்தப் பெருமானைப்பாடி, அரையிற் கட்டிய மாசுணக் கச்சையினைப் பாடி. கங்கணம் பாடிக் கவித்த கை மேல் இட்டு நின்றாடும் அரவினைப்பாடி ஈசற்குச் சுண்ணம் நாம் இடிப்போமாக என்பதாம். அப்பில் கொன்றைமலர் வட்டமாலை எனக்கூட்டிக் கொன்றை மலரினால் வட்டமாகக் கட்டப்பட்ட சடைமுடியின்மேல் அணியும் மாலை எனக் கொள்க. இதனைக் கொண்டைமாலை என்பர். கொன்றையும் மத்த மும் மதியமும் சடைமுடிக்கணுள்ளனவாகும். பொன்மலர்க்கொன்றை பொன்போலுஞ் சடைமேற் புனைந்தானை சுந். 59-5 சுந். 31-7 மகம் "தன்முடிமேல்.. மத்தமுஞ்சூடி"
664 213 . திருவாசக ஆராய்ச்சியுரை வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும்பாடி மதியும் பாடி சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் சுட்டிய மாசுணக் கச்சைபாடிக் கங்கணம் பாடிக் கவித்தகைம் மேல் இட்டுநின் றாடும்அரவம் பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே . செல்வம் பாடி - ரை : கொன்றை மலர் வட்ட மாலை பாடி - கொன்றை மலரி னாற் கட்டப்பட்ட வட்டமான மாலையினைப்பாடி மத்தமும் பாடி பொன் ஊமத்தை மலர் மாலையினையும் பாடி மதியமும் பாடி பிறைத் திங்களையும் பாடி சிட்டர்கள் வாழும் தென்தில்லைபாடி - பெரியோர்களான தில்லைவாழ் அந்தணர்கள் வாழுகின்ற தெற்கின் கண்ணுள்ளதாகிய தில்லைநகரைப்பாடி சிற்றம்பலத்து எங்கள் தில்லை நகரிலுள்ள திருச்சிற்றம்பலத்து எழுந் தருளிய எங்களுடைய செல்வமான கூத்தப்பிரானைப்பாடி கட் டிய மாசுண கச்சைபாடி- அப்பெருமான் அரையிற் கட்டிய பாம் பாகிய அரைஞாண் கச்சையைப் பாடி கங்கணம்பாடி - அவனது பாம்பாகிய கங்கணத்தையும் பாடி கவித்த கைமேல் இட்டு நின்று ஆடும் அரவம் பாடி - தூக்கிய திருவடியை நோக்கிக் கவிந்திருக்கின்ற திருக்கரத்தின்மேலே இடப்பட்டு நின்று ஆடிக்கொண்டிருக்கின்ற பாம்பினைப்பாடி ஈசற்குச் சுண்ணம் நாம் இடித்தும் - கூத்தப்பிரா னுக்குத் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக . - கொன்றை மலர்மாலையைப் பாடி அதனோடு ஊமத்தை மலர் மாலையையும் பாடி பிறைத் திங்களையும்பாடி சிட்டர்கள் வாழும் தில்லையைப்பாடி அத்தில்லைக்கணுளதாகிய திருச்சிற்றம்பலத்து எழுந் தருளிய எங்கள் செல்வமாகிய கூத்தப் பெருமானைப்பாடி அரையிற் கட்டிய மாசுணக் கச்சையினைப் பாடி . கங்கணம் பாடிக் கவித்த கை மேல் இட்டு நின்றாடும் அரவினைப்பாடி ஈசற்குச் சுண்ணம் நாம் இடிப்போமாக என்பதாம் . அப்பில் கொன்றைமலர் வட்டமாலை எனக்கூட்டிக் கொன்றை மலரினால் வட்டமாகக் கட்டப்பட்ட சடைமுடியின்மேல் அணியும் மாலை எனக் கொள்க . இதனைக் கொண்டைமாலை என்பர் . கொன்றையும் மத்த மும் மதியமும் சடைமுடிக்கணுள்ளனவாகும் . பொன்மலர்க்கொன்றை பொன்போலுஞ் சடைமேற் புனைந்தானை சுந் . 59-5 சுந் . 31-7 மகம் தன்முடிமேல் .. மத்தமுஞ்சூடி