திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் 'மதியஞ்சடைவைத்த’ "மாமதியம் மலர்க்கொன்றை வன்னிமத்தம் நறவார் செஞ்சடையானை" 665 சுந். 41-7 அப்பர்.233-31 எனத் தேவாரத்தும் வருவன காண்க, சிட்டர் என்பது சிரேஷ்டர் என்னும் வடமொழித் திரிபு. சிட் டர்கள் என்பது கல்வி, அறிவு, ஒழுக்கம் இறையன்பு முதலியவற்றிற் சிறந்தவர்களான தில்லைவாழந்தணரைக் குறித்தது. சிட்டர்வாழ் தில்லை என்க. "சிட்டர்வாழ் தில்லைச் சிற்றம்பலம்" என ஆளுடைய பிள்ளையார் அருளியவாறு காண்க. தில்லையும் திருச்சிற்றம்பலமும் விதந்தெடுத்துச் சொல்லப்பட்டமை இத் திருப்பொற்சுண்ணம் தில் லையில் அருளிச் செய்யப்பட்டமையை வலியுறுத்துவதாகும். சிற்றம் பலத்து எங்கள் செல்வன் என்றது இறைவனை. 'சிற்றம்பலமேய செல் வன்" என்று ஆளுடைய பிள்ளையாரும் அருளிச் செய்வாராயினர். இறைவனைச் செல்வன் என்றது வீடுபேறாகிய திருவுடைமை பற்றி யாகும். அரைக் கச்சாகவும் முன்கைக்காப்பாகவும் தோளின் மேல் டாகவும் பாம்பினை இறைவன் கொண்டுள்ளமையின் மாசுணக் கச்சை மாசுணக் கங்கணம் கவித்த கைமேல் இட்டுநின்றாடும் அரவு எனக் கூறப்பட்டது. மாசுணக் கச்சை மாசுணக் கங்கணம் எனக்கூட்டுக. ''அரவமே கச்சதாக அசைத்தான்” ''அங்கொர் பாம்பொருகை சுற்றிவைத்தாய்" "கடுத்தாடுங் கரதலத்திற்... கரியபாம் பும்" செங்கணரவ முன்கையி லாடவே வந்து நிற்குமிதென்கொலோ" "பாந்தளைக் கங்கணமாச், செழுத்திரள் நீர்த்திருச் சிற் றம்பலத்தான் திருக்கையிட" ல் 11ந் திருமுறை கோயில் திருப்பண்ணி 8 என வருவன காண்க. கவித்த கைமேல் என்றது தூக்கிய திரு வடியை நோக்கிக் கவித்திருக்கின்ற கையின் மேற்பாகமாகியதோளைக் குறித்தது. ''மூர்க்க பாம்பைக் கண்டத்திலும் தோளிலும் கட்டிவைத்தீர்” "திருமுடியிற் கண்ணியும் மாலையும் பாம்பு திருமார்பி லாரமும் பாம்பு - பெருமான் திருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு பெரும்புயத்திற் கங்கணமும் பாம்பு" ஞான. 315-4 நாவு.87-4 சுந். 90-1 சுந். 36-4 சுந். 2-2 சிதம்பரச் செய்யுட் கோவை 4
திருப்பொற்சுண்ணம் ' மதியஞ்சடைவைத்த மாமதியம் மலர்க்கொன்றை வன்னிமத்தம் நறவார் செஞ்சடையானை 665 சுந் . 41-7 அப்பர்.233-31 எனத் தேவாரத்தும் வருவன காண்க சிட்டர் என்பது சிரேஷ்டர் என்னும் வடமொழித் திரிபு . சிட் டர்கள் என்பது கல்வி அறிவு ஒழுக்கம் இறையன்பு முதலியவற்றிற் சிறந்தவர்களான தில்லைவாழந்தணரைக் குறித்தது . சிட்டர்வாழ் தில்லை என்க . சிட்டர்வாழ் தில்லைச் சிற்றம்பலம் என ஆளுடைய பிள்ளையார் அருளியவாறு காண்க . தில்லையும் திருச்சிற்றம்பலமும் விதந்தெடுத்துச் சொல்லப்பட்டமை இத் திருப்பொற்சுண்ணம் தில் லையில் அருளிச் செய்யப்பட்டமையை வலியுறுத்துவதாகும் . சிற்றம் பலத்து எங்கள் செல்வன் என்றது இறைவனை . ' சிற்றம்பலமேய செல் வன் என்று ஆளுடைய பிள்ளையாரும் அருளிச் செய்வாராயினர் . இறைவனைச் செல்வன் என்றது வீடுபேறாகிய திருவுடைமை பற்றி யாகும் . அரைக் கச்சாகவும் முன்கைக்காப்பாகவும் தோளின் மேல் டாகவும் பாம்பினை இறைவன் கொண்டுள்ளமையின் மாசுணக் கச்சை மாசுணக் கங்கணம் கவித்த கைமேல் இட்டுநின்றாடும் அரவு எனக் கூறப்பட்டது . மாசுணக் கச்சை மாசுணக் கங்கணம் எனக்கூட்டுக . ' ' அரவமே கச்சதாக அசைத்தான் ' ' அங்கொர் பாம்பொருகை சுற்றிவைத்தாய் கடுத்தாடுங் கரதலத்திற் ... கரியபாம் பும் செங்கணரவ முன்கையி லாடவே வந்து நிற்குமிதென்கொலோ பாந்தளைக் கங்கணமாச் செழுத்திரள் நீர்த்திருச் சிற் றம்பலத்தான் திருக்கையிட ல் 11 ந் திருமுறை கோயில் திருப்பண்ணி 8 என வருவன காண்க . கவித்த கைமேல் என்றது தூக்கிய திரு வடியை நோக்கிக் கவித்திருக்கின்ற கையின் மேற்பாகமாகியதோளைக் குறித்தது . ' ' மூர்க்க பாம்பைக் கண்டத்திலும் தோளிலும் கட்டிவைத்தீர் திருமுடியிற் கண்ணியும் மாலையும் பாம்பு திருமார்பி லாரமும் பாம்பு - பெருமான் திருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு பெரும்புயத்திற் கங்கணமும் பாம்பு ஞான . 315-4 நாவு.87-4 சுந் . 90-1 சுந் . 36-4 சுந் . 2-2 சிதம்பரச் செய்யுட் கோவை 4