திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை எனவும், கவித்தகை "கண்டேன் எடுத்த கழலும் கனலுங் நவித்தகையும் ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும் வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்தாடும் மணியினையே 666 11ந் திருமுறை திருப்பண்ணி 14 எனவும் வருவனகாண்க. இட்டுஎன்பது இடப்பட்டு எனச்செயப்பாட் டுப் பொருளில் வந்தது. ஈசன் என்பது பொதுவாய் இறைவனைக் குறிப்பதாயினும் ஈண்டுக் கூத்தப்பெருமானைக் குறிப்பதாயிற்று. தில்லை கொன்றைமாலைபாடி, மத்தமும் பாடி, மதியும் பாடி, பாடி, செல்வம் பாடி, கச்சைபாடி, கங்கணம் பாடி, அரவம் பாடி நாம் சுண்ணம் இடித்தும் என வினை முடிபு செய்க. இத்திருப்பாட்டு முழுவதும் பதிக நுதலிய பொருளாகிய ஆனந்த மனோலயம் குறிப்பதாயினும் கவித்த கையினால் சுட்டி உணர்த்தப் படும் திருவடி நீழலாகிய வீடுபேற்றின்பம் பெறப்படுதலின் அதனைச் சிறப்பாகக் கொள்ளலாம். 19 214 வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாயிரு ளாயினார்க்குத் துன்பமு மாயின்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப் பந்தமு மாய்வீடும் ஆயினாருக் காதியும் அந்தமும் ஆயினாருக் காடப்பொற் கண்ணம் இடித்துநாமே. மெய்யா பரை. வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு - வேதங்களும் அவற் றிற் கூறப்படும் வேள்விகளும் நிகழ்தற்குக் காரணமானவர்க்கு. மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு - மெய்யர்க்கு யும் பொய்யர்க்குப் பொய்யாயும் இருப்பவர்க்கு, சோதியுமாய் இருள் ஆயினார்க்கு - ஒளிபுமாகி இருளுமாயிருப்பவர்க்கு, துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு - உயிர்களுக்குத் துன்பம் தருபவராயும் இன்பந் தருபவராயும் உள்ளவர்க்கு, பாதியுமாய் முற்றும் ஆயினார்க்கு - பாதி பெண்ணுருவாகத் தான் பாதியாகியும் இருமையும் கலந்த ஒருவராய் முழுவடிவாயும் உள்ளவர்க்கு, பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு உயிர்க ளது பாசபந்தத்திற்கும் பாசநீக்கமாகிய வீடுபேற்றிற்கும் காரணமா யுள்ளவர்க்கு. ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு - உலகத்திற்கு முதலும் முடிவுமாயிருப்பவர்க்கு, ஆடபொன் சுண்ணம் நாம்இடித்தும்- தீர்த்த மாடும் பொருட்டுத் திருப்பொற்கண்ணத்தினை நாம் இடிப்போமாக.
திருவாசக ஆராய்ச்சியுரை எனவும் கவித்தகை கண்டேன் எடுத்த கழலும் கனலுங் நவித்தகையும் ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும் வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்தாடும் மணியினையே 666 11 ந் திருமுறை திருப்பண்ணி 14 எனவும் வருவனகாண்க . இட்டுஎன்பது இடப்பட்டு எனச்செயப்பாட் டுப் பொருளில் வந்தது . ஈசன் என்பது பொதுவாய் இறைவனைக் குறிப்பதாயினும் ஈண்டுக் கூத்தப்பெருமானைக் குறிப்பதாயிற்று . தில்லை கொன்றைமாலைபாடி மத்தமும் பாடி மதியும் பாடி பாடி செல்வம் பாடி கச்சைபாடி கங்கணம் பாடி அரவம் பாடி நாம் சுண்ணம் இடித்தும் என வினை முடிபு செய்க . இத்திருப்பாட்டு முழுவதும் பதிக நுதலிய பொருளாகிய ஆனந்த மனோலயம் குறிப்பதாயினும் கவித்த கையினால் சுட்டி உணர்த்தப் படும் திருவடி நீழலாகிய வீடுபேற்றின்பம் பெறப்படுதலின் அதனைச் சிறப்பாகக் கொள்ளலாம் . 19 214 வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாயிரு ளாயினார்க்குத் துன்பமு மாயின்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப் பந்தமு மாய்வீடும் ஆயினாருக் காதியும் அந்தமும் ஆயினாருக் காடப்பொற் கண்ணம் இடித்துநாமே . மெய்யா பரை . வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு - வேதங்களும் அவற் றிற் கூறப்படும் வேள்விகளும் நிகழ்தற்குக் காரணமானவர்க்கு . மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு - மெய்யர்க்கு யும் பொய்யர்க்குப் பொய்யாயும் இருப்பவர்க்கு சோதியுமாய் இருள் ஆயினார்க்கு - ஒளிபுமாகி இருளுமாயிருப்பவர்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு - உயிர்களுக்குத் துன்பம் தருபவராயும் இன்பந் தருபவராயும் உள்ளவர்க்கு பாதியுமாய் முற்றும் ஆயினார்க்கு - பாதி பெண்ணுருவாகத் தான் பாதியாகியும் இருமையும் கலந்த ஒருவராய் முழுவடிவாயும் உள்ளவர்க்கு பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு உயிர்க ளது பாசபந்தத்திற்கும் பாசநீக்கமாகிய வீடுபேற்றிற்கும் காரணமா யுள்ளவர்க்கு . ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு - உலகத்திற்கு முதலும் முடிவுமாயிருப்பவர்க்கு ஆடபொன் சுண்ணம் நாம்இடித்தும்- தீர்த்த மாடும் பொருட்டுத் திருப்பொற்கண்ணத்தினை நாம் இடிப்போமாக .