திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அநாதி பந்தமாகிய ஆணவமல ஆற்றலை நீக்குதற்கு ஆதிந்த மாகிய கன்மமல மாயாமல பந்தங்களை இறைவன் உயிரின் கண் இயை வித்துப் பக்குவமடையச் செய்து அந்நிலையில் மும்மல பந்தங்களையும் நீக்கி வீடருளுவானாதலின் "பந்தமுமாய் வீடுமாயினார்க்கு" என்றார். 668 "பந்தமாய் வீடுமாகிப் பரம்பரமாகி நின்று" "பந்தமும் வீடும் பரப்புகின்றீர்" "பந்தம் வீடவை யாய பராபரன்" *பந்தம் வீடிவை பண்ணினீர்'' எனத் தேவாரத்தும், ‘‘பந்தமும் வீடும் தரும் பரமன்" (தடுத்தாட்.150) எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க. இறைவனுக்கு பந்தமோட்ச கத்ரு என்னும் திருநாமமுண்மையுமறிக. உலகத் தோற்றத்திற்கு முன்னும் மகாசங்காரகாலத்திற்குப் பின்னும் உள்ளான் இறைவனாதலின் 'ஆதியு மந்தமுமாயினார்க்கு" என்றார். $ "அந்தமும் ஆதியுமாகிய அண்ணலார்" 'ஆதியு மந்தமு மானான் கண்டாய்” எனத் தேவாரத்தும், (நாவு.41-5) (நாவு.95-2) (நாவு.121-2) (சுந்.88-4) 'போற்றி யருளுக நின்னாதியாம் பாதமலர் போற்றியருளுக நின் னந்தமாஞ் செந்தளிர்கள்'' (ஞான, 39-1) (நாவு.236-9) (திருவெம்பா.20) எனத் திருவாசகத்தும், "முன்னு மொருவ ரிரும்பொழில் மூன் றற்கு முற்றுமிற்றாற் பின்னுமொருவர்'' எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. ஆட என்றமையால் தீர்த்தமாடும் பொருட்டு என்பது வெளிப் படையாயிற்று. ரகதேர் om இதன் கண், "பந்தமும் வீடுமாயினார்க்கு" என்பதனால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள்போதருதல் காண்க. 20
திருவாசக ஆராய்ச்சியுரை அநாதி பந்தமாகிய ஆணவமல ஆற்றலை நீக்குதற்கு ஆதிந்த மாகிய கன்மமல மாயாமல பந்தங்களை இறைவன் உயிரின் கண் இயை வித்துப் பக்குவமடையச் செய்து அந்நிலையில் மும்மல பந்தங்களையும் நீக்கி வீடருளுவானாதலின் பந்தமுமாய் வீடுமாயினார்க்கு என்றார் . 668 பந்தமாய் வீடுமாகிப் பரம்பரமாகி நின்று பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பந்தம் வீடவை யாய பராபரன் * பந்தம் வீடிவை பண்ணினீர் ' ' எனத் தேவாரத்தும் பந்தமும் வீடும் தரும் பரமன் ( தடுத்தாட் .150 ) எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க . இறைவனுக்கு பந்தமோட்ச கத்ரு என்னும் திருநாமமுண்மையுமறிக . உலகத் தோற்றத்திற்கு முன்னும் மகாசங்காரகாலத்திற்குப் பின்னும் உள்ளான் இறைவனாதலின் ' ஆதியு மந்தமுமாயினார்க்கு என்றார் . $ அந்தமும் ஆதியுமாகிய அண்ணலார் ' ஆதியு மந்தமு மானான் கண்டாய் எனத் தேவாரத்தும் ( நாவு.41-5 ) ( நாவு.95-2 ) ( நாவு.121-2 ) ( சுந்.88-4 ) ' போற்றி யருளுக நின்னாதியாம் பாதமலர் போற்றியருளுக நின் னந்தமாஞ் செந்தளிர்கள் ' ' ( ஞான 39-1 ) ( நாவு.236-9 ) ( திருவெம்பா .20 ) எனத் திருவாசகத்தும் முன்னு மொருவ ரிரும்பொழில் மூன் றற்கு முற்றுமிற்றாற் பின்னுமொருவர் ' ' எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . ஆட என்றமையால் தீர்த்தமாடும் பொருட்டு என்பது வெளிப் படையாயிற்று . ரகதேர் om இதன் கண் பந்தமும் வீடுமாயினார்க்கு என்பதனால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள்போதருதல் காண்க . 20