திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கோத்தும்பீ, நான்முகனும், இந்திரனும், கலைமகளும், நாரண னும், நான்மறையும், மாவேறு சோதியும், வானவரும் அறிய முடி யாத இறைவன் திருவடி மலரின் கண்ணே நீ சென்று படிந்து ஒலித்துப் பேரின்பமாகிய தேனைப் பருகுவாயாக என்பதாம். 670 பூவேறு என்ற அடையினாற் கோன் என்பது முதல்வனாகிய பிரம னையும். 'நாவேறு' என்ற அடையினால் செல்வி என்பது கலைமகளை யும் உணர்த்தின. பொற்பமைந்த செல்வியென இயையும். பொற்பு அழகு; பொலிவுமாம். மாவேறு சோதி - பெருமை மிக்க ஒளியுருவத் தையுடைய உருத்திரமூர்த்தி. இதற்கு 'சூரிய சந்திராக்கினிகளை'' என்றும் 'இடபவாகனத்தையுடைய சோதி'என்றும் உரைகூறுவாரு முளர். பூவேறு கோன் முதலியோர் அறியா என்பது தமதுஅறிவாற்ற லால் அறியத் தலைப்பட்டு அறிய மாட்டாமையைக் குறிப்பதாகும். எனவே அவன் அருள்வழிப்பட்டு நின்று அறிதலன்றி மற்று எவ்வாற் றானும் அறியப்படாதவன் என்பதாம். சே - இடபம். சேவடிக்கு என் னும் நான்காவதை ஏழாவதாக்கி ஏகாரத்தைத் தேற்றமாகக் கொள்க. ஊதுதல் - ஒலித்தலும் உண்ணுதலுமாகும். வண்டு பூவிற் சென்று ஊதுதல் தேனுண்ணும் பொருட்டாதலின், சென்றூதாய் என் பதற்குச் சென்றுஊதிப் பேரின்பத் தேனைப் பருகுவாயாக என உரைக் கப்பட்டது. இதன்கண் ''சேவடிக்கே சென்றூதாய்" என்பதனால் சிவனோ 1 டைக்கியம்" என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 216. நானாரென் னுள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார் வானோர் பிரானென்னை யாண்டிலனேன் மதிமயங்கி ஊனாருடைதலையில் உண்பலிதே ரம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. ஊன் ப-ரை, கோதும்பீ - அரசவண்டே, வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் - தேவர்களுக்குத் தலைவனாய இறைவன் என்னை ஆட் கொண்டிலனாயின், நான் ஆர்-நான் எப்படிப்பட்டவனாயிருப்பேன்; என் உள்ளம் ஆர் - எனது மனம் எத்தன்மையாயிருக்கும். ஞானங் கள் ஆர் - என் அறிவுகள் எத்தன்மையனவாகும்; என்னை அறிவார் ஆர்- என் இயல்பினை அறிபவர் எவர்? மதி மயங்கி உடை ஆர் தலையில் - அறிவு மயங்கி அதனால் உடைபட்ட ஊன் பொருந்திய பிரம கபாலத்தில், உண் பலி தேர் அம்பலவன் - உண்ணுதற்குரிய உணவைத் தேடிப் பெறுகின்ற திருச்சிற்றம்பலத்தை இடமாகக் கொண்ட இறைவனது. தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் - தேன் நிறைந்த திருவடியாகிய செந்தாமரை மலரின் கண்ணே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக.
திருவாசக ஆராய்ச்சியுரை கோத்தும்பீ நான்முகனும் இந்திரனும் கலைமகளும் நாரண னும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவரும் அறிய முடி யாத இறைவன் திருவடி மலரின் கண்ணே நீ சென்று படிந்து ஒலித்துப் பேரின்பமாகிய தேனைப் பருகுவாயாக என்பதாம் . 670 பூவேறு என்ற அடையினாற் கோன் என்பது முதல்வனாகிய பிரம னையும் . ' நாவேறு ' என்ற அடையினால் செல்வி என்பது கலைமகளை யும் உணர்த்தின . பொற்பமைந்த செல்வியென இயையும் . பொற்பு அழகு ; பொலிவுமாம் . மாவேறு சோதி - பெருமை மிக்க ஒளியுருவத் தையுடைய உருத்திரமூர்த்தி . இதற்கு ' சூரிய சந்திராக்கினிகளை ' ' என்றும் ' இடபவாகனத்தையுடைய சோதி'என்றும் உரைகூறுவாரு முளர் . பூவேறு கோன் முதலியோர் அறியா என்பது தமதுஅறிவாற்ற லால் அறியத் தலைப்பட்டு அறிய மாட்டாமையைக் குறிப்பதாகும் . எனவே அவன் அருள்வழிப்பட்டு நின்று அறிதலன்றி மற்று எவ்வாற் றானும் அறியப்படாதவன் என்பதாம் . சே - இடபம் . சேவடிக்கு என் னும் நான்காவதை ஏழாவதாக்கி ஏகாரத்தைத் தேற்றமாகக் கொள்க . ஊதுதல் - ஒலித்தலும் உண்ணுதலுமாகும் . வண்டு பூவிற் சென்று ஊதுதல் தேனுண்ணும் பொருட்டாதலின் சென்றூதாய் என் பதற்குச் சென்றுஊதிப் பேரின்பத் தேனைப் பருகுவாயாக என உரைக் கப்பட்டது . இதன்கண் ' ' சேவடிக்கே சென்றூதாய் என்பதனால் சிவனோ 1 டைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 216. நானாரென் னுள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார் வானோர் பிரானென்னை யாண்டிலனேன் மதிமயங்கி ஊனாருடைதலையில் உண்பலிதே ரம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ . ஊன் - ரை கோதும்பீ - அரசவண்டே வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் - தேவர்களுக்குத் தலைவனாய இறைவன் என்னை ஆட் கொண்டிலனாயின் நான் ஆர் - நான் எப்படிப்பட்டவனாயிருப்பேன் ; என் உள்ளம் ஆர் - எனது மனம் எத்தன்மையாயிருக்கும் . ஞானங் கள் ஆர் - என் அறிவுகள் எத்தன்மையனவாகும் ; என்னை அறிவார் ஆர்- என் இயல்பினை அறிபவர் எவர் ? மதி மயங்கி உடை ஆர் தலையில் - அறிவு மயங்கி அதனால் உடைபட்ட ஊன் பொருந்திய பிரம கபாலத்தில் உண் பலி தேர் அம்பலவன் - உண்ணுதற்குரிய உணவைத் தேடிப் பெறுகின்ற திருச்சிற்றம்பலத்தை இடமாகக் கொண்ட இறைவனது . தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் - தேன் நிறைந்த திருவடியாகிய செந்தாமரை மலரின் கண்ணே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக .