திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

672 217. திருவாசக ஆராய்ச்சியுரை தினைத்தனை யுள்ளதோர் பூவினிற் றேனுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. ப-ரை: கோ தும்பீ - அரசவண்டே, பூவினில் உள்ளது ஓர் தினைதனை தேன் உண்ணாது - பூவின்கண் உள்ளதாகிய ஒரு தினையள வினதாகிய தேனைப் பெரிதென்று எண்ணி அப்பூவின்கட் சென்று உண் ணாமல், நினைத்தொறும் - நினைக்குந்தோறும், காண்தொறும் - தரிசிக் குந்தோறும், பேசும்தோறும் - தன்னைப்பற்றிப் பேசுந்தோறும், எப் போதும் - மற்று எப்பொழுதினும், அனைத்து எலும்பு உள் நெக. உடலிலுள்ள எல்லா எலும்புகளும் உள்ளே நெகிழும் வண்ணம். ஆனந்த தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே - பேரின்பத் தேனைப் பொழிகின்ற கூத்துடையானது திருவடிமலரின் கண்ணே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர் வாயாக. கோத்தும்பீ, பூவின்கணுள்ள ஓர் தினையளவினதாகிய தேனைப் பெரிதென்று எண்ணி அதன்கட் சென்று உண்ணாமல் நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்து எலும்புகளும் உள் நெகிழும்படி பேரின்பத் தேனைச் சொரிகின்ற கூத்துடையானது திருவடி மலரின் கண்ணே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம். 'தினைத்தனைப் தினைத்தனை - தினையளவு. "தினைத்தனையோர் பொறையிலாவுயிர் போங்கூட்டை" (தே. நா. 255-5) புகலிடமறிந் தேன்'' (சுந் 72-1) எனத் தேவாரத்தும் வருவனகாண்க. நினைத்தொ றும் காண்டொறும் என்பன வினைத்தொகை. எப்போதும் என்றது நினைத்தல் காண்டல் பேசுதல் நிகழும் காலத்தன்றி மற்று எப்பொழு என்றவாறு. வா தும் உடம்பிலுள்ள திண்ணிய பொருளாகிய எலும்பு நெகிழ்தல் சொல்லப்படவே மற்றைய உடற்பகுதிகள் நெகிழ்தல் சொல்லாதே அமையும். அனைத்தெலும்பும் என்னும் முற்றும்மை விகார வகை யாற் றொக்கது. ஆனந்தத் தேன்- சிவானந்தத் தேன்."ஆனந்தமாய தேனினைச் சொரிந்து" (பிடித்த 9) "ஆனந்தத் தேனிருந்த பொந்து" (பூவல் 2) என வருவன காண்க. கோத்தும்பீ, நீ விரும்பியுண்னும் பூவினிற்றேன் தினையளவினது. நாவிற்குமட்டும் இனிப்பது. நாம் கூறும் திருவடிப் பூந்தேனோ நினைக் குந்தோறும் காணுந்தோறும் பேசுந்தோறும் அதனைக் கேட்குந்தோ றும் இந்நிகழ்ச்சிகள் இல்லாதிருக்கும் எப்போதும் இனிமை செய்வ
672 217 . திருவாசக ஆராய்ச்சியுரை தினைத்தனை யுள்ளதோர் பூவினிற் றேனுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ . - ரை : கோ தும்பீ - அரசவண்டே பூவினில் உள்ளது ஓர் தினைதனை தேன் உண்ணாது - பூவின்கண் உள்ளதாகிய ஒரு தினையள வினதாகிய தேனைப் பெரிதென்று எண்ணி அப்பூவின்கட் சென்று உண் ணாமல் நினைத்தொறும் - நினைக்குந்தோறும் காண்தொறும் - தரிசிக் குந்தோறும் பேசும்தோறும் - தன்னைப்பற்றிப் பேசுந்தோறும் எப் போதும் - மற்று எப்பொழுதினும் அனைத்து எலும்பு உள் நெக . உடலிலுள்ள எல்லா எலும்புகளும் உள்ளே நெகிழும் வண்ணம் . ஆனந்த தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே - பேரின்பத் தேனைப் பொழிகின்ற கூத்துடையானது திருவடிமலரின் கண்ணே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர் வாயாக . கோத்தும்பீ பூவின்கணுள்ள ஓர் தினையளவினதாகிய தேனைப் பெரிதென்று எண்ணி அதன்கட் சென்று உண்ணாமல் நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்து எலும்புகளும் உள் நெகிழும்படி பேரின்பத் தேனைச் சொரிகின்ற கூத்துடையானது திருவடி மலரின் கண்ணே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம் . ' தினைத்தனைப் தினைத்தனை - தினையளவு . தினைத்தனையோர் பொறையிலாவுயிர் போங்கூட்டை ( தே . நா . 255-5 ) புகலிடமறிந் தேன் ' ' ( சுந் 72-1 ) எனத் தேவாரத்தும் வருவனகாண்க . நினைத்தொ றும் காண்டொறும் என்பன வினைத்தொகை . எப்போதும் என்றது நினைத்தல் காண்டல் பேசுதல் நிகழும் காலத்தன்றி மற்று எப்பொழு என்றவாறு . வா தும் உடம்பிலுள்ள திண்ணிய பொருளாகிய எலும்பு நெகிழ்தல் சொல்லப்படவே மற்றைய உடற்பகுதிகள் நெகிழ்தல் சொல்லாதே அமையும் . அனைத்தெலும்பும் என்னும் முற்றும்மை விகார வகை யாற் றொக்கது . ஆனந்தத் தேன்- சிவானந்தத் தேன் . ஆனந்தமாய தேனினைச் சொரிந்து ( பிடித்த 9 ) ஆனந்தத் தேனிருந்த பொந்து ( பூவல் 2 ) என வருவன காண்க . கோத்தும்பீ நீ விரும்பியுண்னும் பூவினிற்றேன் தினையளவினது . நாவிற்குமட்டும் இனிப்பது . நாம் கூறும் திருவடிப் பூந்தேனோ நினைக் குந்தோறும் காணுந்தோறும் பேசுந்தோறும் அதனைக் கேட்குந்தோ றும் இந்நிகழ்ச்சிகள் இல்லாதிருக்கும் எப்போதும் இனிமை செய்வ