திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

219. 691 திருக்கோத்தும்பி அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேது மில்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ. ப-ரை: கோ தும்பீ - அரசவண்டே, அதேவர் தேவர்-அத் தேவரே முழுமுதற் கடவுள், அவர் தேவர் என்று இங்ஙன் - அங்ஙன மன்று; நாம் கூறும் அவரே முழுமுதற் கடவுள் என்று பலசமயத்த வரும் இவ்வாறாக. பொய் தேவு பேசி - முழுமுதற் கடவுள் அல்லாத புன் சிறு தெய்வங்களை முழுமுதற் கடவுளாக எடுத்துச் சொல்லி, புலம்புகின்ற பூதலத்தே - வீணாக வருந்துகின்ற இந் நிலவுலகத்தின் கண்ணே,பத்து ஏதும் இல்லாது என் பற்று அற - பற்றுக்கோடு சிறி துமில்லாது எனது உலகப் பற்றுக்களெல்லாம் நீங்கும் வண்ணம், நான் பற்றி நின்ற - நான் சார்ந்து பற்றி நின்ற, மெய் தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் - உண்மையான தேவர்களுக்கெல்லாம் மகாதேவரா யுள்ளவரது திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின் பத் தேனை நுகர்வாயாக. 675 கோத்தும்பீ! அத்தேவர் தேவர்; அவர் தேவர் என்று பலசம யத்தவரும் இவ்வாறாக முழுமுதற் கடவுளல்லாத புன்சிறு தெய்வங் களை முழுமுதற் கடவுளாக எடுத்துச் சொல்லிப் புலம்புகின்ற இந் நிலவுலகின் கண்ணே பற்றுக்கோடு சிறிதும் இல்லாது எனது உலகப் பற்றுக்களெல்லாம் நீங்கும் வண்ணம் நான் பற்றிநின்ற யான தேவர்தேவன் திருவடி மலர்களிற் சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம். உண்மை அத்தேவர் தேவர்; அவர் தேவர் என்பன பல சமயவாதிகளும் கடவுளைப்பற்றிக்கூறும் கூற்றுக்கள். பொய்த்தேவு பேசுதல் - இறைவ னல்லாத சிறு தெய்வங்களை இறைவனாகக் கூறுதல். புலம்புதல் -பயன் பெறாது வருந்துதல். பற்று என்பது பத்து என எதுகை நோக்கி நின்றது. ஏதும் - சிறிதும். ''ஏதும் நீரிலா தழல்படு வெய்யகான்" (கந்த - சுரம் புகு - 22) என்புழிப்போல. பற்று அற - துறக்கப்படுவன வற்றின் மேலுள்ள பற்றுநீங்க எனினுமாம். பற்றி நின்ற - சார்ந்து பற்றி நின்ற. 'சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்" 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு " என்பன ஈண்டறியற்பாலன. (குறள் 359) (குறள் 350)
219 . 691 திருக்கோத்தும்பி அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேது மில்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ . - ரை : கோ தும்பீ - அரசவண்டே அதேவர் தேவர் - அத் தேவரே முழுமுதற் கடவுள் அவர் தேவர் என்று இங்ஙன் - அங்ஙன மன்று ; நாம் கூறும் அவரே முழுமுதற் கடவுள் என்று பலசமயத்த வரும் இவ்வாறாக . பொய் தேவு பேசி - முழுமுதற் கடவுள் அல்லாத புன் சிறு தெய்வங்களை முழுமுதற் கடவுளாக எடுத்துச் சொல்லி புலம்புகின்ற பூதலத்தே - வீணாக வருந்துகின்ற இந் நிலவுலகத்தின் கண்ணே பத்து ஏதும் இல்லாது என் பற்று அற - பற்றுக்கோடு சிறி துமில்லாது எனது உலகப் பற்றுக்களெல்லாம் நீங்கும் வண்ணம் நான் பற்றி நின்ற - நான் சார்ந்து பற்றி நின்ற மெய் தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் - உண்மையான தேவர்களுக்கெல்லாம் மகாதேவரா யுள்ளவரது திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின் பத் தேனை நுகர்வாயாக . 675 கோத்தும்பீ ! அத்தேவர் தேவர் ; அவர் தேவர் என்று பலசம யத்தவரும் இவ்வாறாக முழுமுதற் கடவுளல்லாத புன்சிறு தெய்வங் களை முழுமுதற் கடவுளாக எடுத்துச் சொல்லிப் புலம்புகின்ற இந் நிலவுலகின் கண்ணே பற்றுக்கோடு சிறிதும் இல்லாது எனது உலகப் பற்றுக்களெல்லாம் நீங்கும் வண்ணம் நான் பற்றிநின்ற யான தேவர்தேவன் திருவடி மலர்களிற் சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம் . உண்மை அத்தேவர் தேவர் ; அவர் தேவர் என்பன பல சமயவாதிகளும் கடவுளைப்பற்றிக்கூறும் கூற்றுக்கள் . பொய்த்தேவு பேசுதல் - இறைவ னல்லாத சிறு தெய்வங்களை இறைவனாகக் கூறுதல் . புலம்புதல் -பயன் பெறாது வருந்துதல் . பற்று என்பது பத்து என எதுகை நோக்கி நின்றது . ஏதும் - சிறிதும் . ' ' ஏதும் நீரிலா தழல்படு வெய்யகான் ( கந்த - சுரம் புகு - 22 ) என்புழிப்போல . பற்று அற - துறக்கப்படுவன வற்றின் மேலுள்ள பற்றுநீங்க எனினுமாம் . பற்றி நின்ற - சார்ந்து பற்றி நின்ற . ' சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ' பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்பன ஈண்டறியற்பாலன . ( குறள் 359 ) ( குறள் 350 )