திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி னின்று சிவதத்துவமும் சத்திதத்துவமும் தோன்றி, எத்தனையோ கவடு விட்டு - பின் அத் தத்துவங்களினின்று பஞ்சசாதாக்கிய வடிவங் களும் அவற்றினின்று மரகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தும் கார ணேஸ்வர வடிவங்கள் ஐந்தும் ஆகிய பல கிளைகளையுடைத்தாய். என்னை நன்றாக வைத்து - அந்நிலைமைக்கண் தனு கரண புவன போசுங் களோடு என்னை நன்றாக வாழும்வண்ணம் வைத்து, நாய் சிவிகை ஏற்றுவித்த - உலக வாழ்வில் உவர்ப்புண்டாகும்போது இழிவுடைய நாயினைச் சிவிகையில் ஏற்றிவைப்பதுபோல இழிவுடைய என்னையும் தன்மெய்யடியார் கூட்டத்தில் ஏற்றிவைத்தருளிய, என் தாதை தாதைக்கும் - எனக்கும் என் தந்தைக்கும் அவன் தந்தைக்கும், எம் அனைக்கும் - எமது தாய்க்கும், தம்பெருமான் - தலைவனாயுள்ளவனும், குன்றாத செல்வற்கே - அந்தமில் இன்பத்தழிவில் வீடாகிய செல்வத் தினையுடையவனுமாகிய இறைவனது திருவடி மலர்களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர் வாயாக. 679 கோத்தும்பீ, ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுகளை விட்டு என்னை நன்றாக வாழும் வண்ணம் வைத்து, உலகவாழ்வில் உவர்ப்புண்டாயபோது இழிவுடைய நாயினைச் சிவிகையில் ஏற்றிவைப் பதுபோல இழிவுடைய என்னையும் தன் மெய்யடியார் கூட்டத்தில் ஏற்றிவைத்தருளிய, எனக்கும் என்தத்தைக்கும் அவன்தந்தைக்கும் எமது தாய்க்கும் தலைவனாயுள்ளவனும் குன்றாத செல்வத்தினையுடைய வனுமாகிய இறைவனது திருவடிமலரிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம். ஒன்றாய் என்றது சர்வசங்காரகாலத்தில் உலகமும் உயிர்களும் தத்துவங்களும் தன்பால் ஒடுங்கத் தான் ஒருவனேயாகி என்றவாறு. 40 முளைத்தெழுந்து என்றது சிருட்டியாரம்பகாலத்தில் வித்திலிருந்து முளைதோன்றுவது போலச் சுத்தமாயையினின்று சிவதத்துவமும் சத்தி தத்துவமுமாகத் தோன்றி என்றவாறு Hoe எத்தனையோ கவடு விட்டு என்றது முளைத்தெழுந்த மரத்தில் பெருங்கிளைகளும் சிறுகிளைகளும் கிளையிற் கிளைகளும் தோன்றுவது போல ஐவகைச் சாதாக்கிய வடிவங்களும் இருபத்தைந்து மாகேஸ் வர வடிவங்களும் ஐந்துவகைக் காரணேசுர வடிவங்களும் ஆட்பால வர்க்கருளும் வண்ணம் இறைவன் தோன்றும் வடிவங்களுமாக விரி வடைந்து என்றவாறு. இனி ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு என்பதற்கு சிவதத்துவ முதலிற்றோன்றிப் பின்சுலைகளும் தத்துவங்களும், புவனங்களும் பிறவும் விரிந்து உயிர் சகலாவத்தை யுறுதற்குரிய கருவி கரணங்கள் எல்லாம் தோன்றி எனவுரை கூற
திருக்கோத்தும்பி னின்று சிவதத்துவமும் சத்திதத்துவமும் தோன்றி எத்தனையோ கவடு விட்டு - பின் அத் தத்துவங்களினின்று பஞ்சசாதாக்கிய வடிவங் களும் அவற்றினின்று மரகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தும் கார ணேஸ்வர வடிவங்கள் ஐந்தும் ஆகிய பல கிளைகளையுடைத்தாய் . என்னை நன்றாக வைத்து - அந்நிலைமைக்கண் தனு கரண புவன போசுங் களோடு என்னை நன்றாக வாழும்வண்ணம் வைத்து நாய் சிவிகை ஏற்றுவித்த - உலக வாழ்வில் உவர்ப்புண்டாகும்போது இழிவுடைய நாயினைச் சிவிகையில் ஏற்றிவைப்பதுபோல இழிவுடைய என்னையும் தன்மெய்யடியார் கூட்டத்தில் ஏற்றிவைத்தருளிய என் தாதை தாதைக்கும் - எனக்கும் என் தந்தைக்கும் அவன் தந்தைக்கும் எம் அனைக்கும் - எமது தாய்க்கும் தம்பெருமான் - தலைவனாயுள்ளவனும் குன்றாத செல்வற்கே - அந்தமில் இன்பத்தழிவில் வீடாகிய செல்வத் தினையுடையவனுமாகிய இறைவனது திருவடி மலர்களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர் வாயாக . 679 கோத்தும்பீ ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுகளை விட்டு என்னை நன்றாக வாழும் வண்ணம் வைத்து உலகவாழ்வில் உவர்ப்புண்டாயபோது இழிவுடைய நாயினைச் சிவிகையில் ஏற்றிவைப் பதுபோல இழிவுடைய என்னையும் தன் மெய்யடியார் கூட்டத்தில் ஏற்றிவைத்தருளிய எனக்கும் என்தத்தைக்கும் அவன்தந்தைக்கும் எமது தாய்க்கும் தலைவனாயுள்ளவனும் குன்றாத செல்வத்தினையுடைய வனுமாகிய இறைவனது திருவடிமலரிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம் . ஒன்றாய் என்றது சர்வசங்காரகாலத்தில் உலகமும் உயிர்களும் தத்துவங்களும் தன்பால் ஒடுங்கத் தான் ஒருவனேயாகி என்றவாறு . 40 முளைத்தெழுந்து என்றது சிருட்டியாரம்பகாலத்தில் வித்திலிருந்து முளைதோன்றுவது போலச் சுத்தமாயையினின்று சிவதத்துவமும் சத்தி தத்துவமுமாகத் தோன்றி என்றவாறு Hoe எத்தனையோ கவடு விட்டு என்றது முளைத்தெழுந்த மரத்தில் பெருங்கிளைகளும் சிறுகிளைகளும் கிளையிற் கிளைகளும் தோன்றுவது போல ஐவகைச் சாதாக்கிய வடிவங்களும் இருபத்தைந்து மாகேஸ் வர வடிவங்களும் ஐந்துவகைக் காரணேசுர வடிவங்களும் ஆட்பால வர்க்கருளும் வண்ணம் இறைவன் தோன்றும் வடிவங்களுமாக விரி வடைந்து என்றவாறு . இனி ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு என்பதற்கு சிவதத்துவ முதலிற்றோன்றிப் பின்சுலைகளும் தத்துவங்களும் புவனங்களும் பிறவும் விரிந்து உயிர் சகலாவத்தை யுறுதற்குரிய கருவி கரணங்கள் எல்லாம் தோன்றி எனவுரை கூற