திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி ணம், செல்வம் நயந்து அறியாவண்ணம் என இயைத்து நோயுறாம் லும் முதிர்வடையாமலும் செல்வத்தை நயந்து 'நுகராமலும் இருக் கும்படி எனப் பொருள் கொள்க. அறியாவண்ணம் ஆண்டு கொண்ட என இயையும். நுந்து கன்று - தாய்ப் பசுவினாற் றள்ளப்படும் முதிர்ந்த கன்று. நுந்துதல் - தள்ளுதல். நாய் நயந்து எனக் கூட்டி நாய்போல விரும்பி எனினுமாம். தாய் - தாயின் தன்மை. 683 தன் கருணை என்றது உயிர்களுக்குக் கைம்மாறு கருதாது செய்யுந் திருவருள் என்றவாறு. கருணைச் செல்வற்கே என இயையும். தேயு உற்ற என்பதன் உகரம் தேயுற்றவென எதுகை நோக்கிக் கெட்டது. தேயு - நெருப்பு. இறைவன் செந்தழல்போலும் ஒளியையுடைய திரு மேனியனாதலின் 'தேயுற்ற' என்றார். “செந்தழல்போற் றிருமேனித் தேவர்பிரான்" (குயிற். 10) ''செந்தழல்புரை திருமேனியுங்காட்டி" (திருப்பள்ளி 8) 'செந்தழல்போல்வாய்'' (வாழாப். 8) என அடிகள் அருளியமையுங் காண்க. நான் உற்று மூத்து நுந்து கன்றாய் இங்கிருந்து நயந்தறியா வண் ணம் ஆண்டுகொண்ட செல்வற்குச் சென்று ஊதாய் என வினைமுடிபு செய்க. இதன்கண், 'தாயுற்று வந்து என்னை ஆண்டு கொண்ட தேயுற்ற செல்வற்கு' என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 225 வன்னெஞ்சக் கள்வன் மனவலிய னென்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டு கொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பி. 10 ப - ரை : கோ தும்பீ - அரசவண்டே. வல் நெஞ்சம் கள்வன்- இரங்காத வலிய மனத்தினையுடைய வஞ்சன், மன வலியன் என் னாது - மனத்தின்கண் நிகழும் உலகியலறிவு வலுப்பெற்றவன் என்று என்னை இகழ்ந்து தள்ளி விடாமல், கருணையினால் கல் நெஞ்சு உருக்கி ஆண்டு கொண்ட - தன் பேரருளால் எனது கல்போன்ற வலிய நெஞ் சினை உருகச் செய்து அடிமை கொண்டருளிய, அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் - அன்னப் பறவைகள் கூடி விளையாடும் தில் லைத் திருச்சிற்றம்பலத்தின்கணுள்ளானது, பொன் அம் கழலுக்கே- பொன்னானியன்ற கழல்களையுடைய திருவடிமலர்களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக.
திருக்கோத்தும்பி ணம் செல்வம் நயந்து அறியாவண்ணம் என இயைத்து நோயுறாம் லும் முதிர்வடையாமலும் செல்வத்தை நயந்து ' நுகராமலும் இருக் கும்படி எனப் பொருள் கொள்க . அறியாவண்ணம் ஆண்டு கொண்ட என இயையும் . நுந்து கன்று - தாய்ப் பசுவினாற் றள்ளப்படும் முதிர்ந்த கன்று . நுந்துதல் - தள்ளுதல் . நாய் நயந்து எனக் கூட்டி நாய்போல விரும்பி எனினுமாம் . தாய் - தாயின் தன்மை . 683 தன் கருணை என்றது உயிர்களுக்குக் கைம்மாறு கருதாது செய்யுந் திருவருள் என்றவாறு . கருணைச் செல்வற்கே என இயையும் . தேயு உற்ற என்பதன் உகரம் தேயுற்றவென எதுகை நோக்கிக் கெட்டது . தேயு - நெருப்பு . இறைவன் செந்தழல்போலும் ஒளியையுடைய திரு மேனியனாதலின் ' தேயுற்ற ' என்றார் . செந்தழல்போற் றிருமேனித் தேவர்பிரான் ( குயிற் . 10 ) ' ' செந்தழல்புரை திருமேனியுங்காட்டி ( திருப்பள்ளி 8 ) ' செந்தழல்போல்வாய் ' ' ( வாழாப் . 8 ) என அடிகள் அருளியமையுங் காண்க . நான் உற்று மூத்து நுந்து கன்றாய் இங்கிருந்து நயந்தறியா வண் ணம் ஆண்டுகொண்ட செல்வற்குச் சென்று ஊதாய் என வினைமுடிபு செய்க . இதன்கண் ' தாயுற்று வந்து என்னை ஆண்டு கொண்ட தேயுற்ற செல்வற்கு ' என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 225 வன்னெஞ்சக் கள்வன் மனவலிய னென்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டு கொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பி . 10 - ரை : கோ தும்பீ - அரசவண்டே . வல் நெஞ்சம் கள்வன் இரங்காத வலிய மனத்தினையுடைய வஞ்சன் மன வலியன் என் னாது - மனத்தின்கண் நிகழும் உலகியலறிவு வலுப்பெற்றவன் என்று என்னை இகழ்ந்து தள்ளி விடாமல் கருணையினால் கல் நெஞ்சு உருக்கி ஆண்டு கொண்ட - தன் பேரருளால் எனது கல்போன்ற வலிய நெஞ் சினை உருகச் செய்து அடிமை கொண்டருளிய அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் - அன்னப் பறவைகள் கூடி விளையாடும் தில் லைத் திருச்சிற்றம்பலத்தின்கணுள்ளானது பொன் அம் கழலுக்கே பொன்னானியன்ற கழல்களையுடைய திருவடிமலர்களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக .