திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி கோத்தும்பீ, நாயேனைக் கொண்டு தன் திருவடிகளைப் புகழ்ந்து பாடும்படி செய்தருளிய நாயகனும், பேயேனது மனக் குற்றங்களைப் பொறுத்தருளுகின்ற பெருமையனும், இகழ்ச்சி சிறிதுமின்றி என் பணிகள் கொண்டருளும் ஈசனுமாகிய இறைவனுடைய திருவடி மலர் களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம். 685 நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த என்றதனால் அடிகள் அரு ளிச் செய்த திருவாசகம் திருக்கோவையார் என்னும் இரண்டும் திருவருட் பணியால் அருளிச்செய்யப்பட்டன என்பது தெளிவாகும். பேயேனது - பேய்போன்ற அவாவினையுடையேனது. உள்ளப் பிழை- மனத்தில் உண்டாகும் குற்றங்கள். அவை காமம், வெகுளி, மயக் கம் என்பன. இவற்றை வடநூலார் காமம். குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என ஆறாகக்கொண்டு அரிஷட் வர்க்கம் என்பர். இனி, உள்ளப் பிழை பொறுக்கும் என்பதற்கு உள்ளத்தினாற் தன்னைப்பற்றிப் பிழைபட எண்ணும் எண்ணங்களைப் பொறுக்கும் எனினுமாம். 'பிழைத்த தெல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய் என்றும்" (நாவு 244-5) என்பது காண்க. சீ என்பது வெறுப்பினை உணர்த்தும் குறிப்பிடைச்சொல். ஏதும் - சிறிதும். க இதன்கண் பாடுவித்த என்பதனால் வாக்குப் பணியும், உள்ளப் பிழை பொறுக்கும் என்பதனால் மனப்பணியும் செய்பணி கொண்டரு ளுர் என்பதனால் உடற் பணியும் கூறப்படுதலின் மனம் வாக்கு, காயம் என்னும் மூன்று கருவிகளின் வழிபாடுகள் இறைவனாற் கொள் ளப்பட்டமை கூறியவாறு. நணபரன் D alien நாயகனும் பெருமையனும் ஈசனுமாகிய இறைவனுடைய திரு வடிமலரின் கண்ணே சென்றூதாய் என வினைமுடிபு செய்க. இதன் கண், மனமொழி மெய்கள் இறைபணியில் நிற்றல் கூறப் படுதலின் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க. 12 227 நான்றனக் கன்பின்மை நானுந்தா னும்மறிவோம் தானென்னை யாட்கொண்ட தெல்லாருந் தாமறிவாங் ஆன கருணையும் அங்குற்றே தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. ப- ரை. கோ தும்பீ - அரச வண்டே, நான் தனக்கு-அன்பு- இன்மை - நான் தன்னிடத்து அன்புடைமையும் அஃதின்மையும், நானும் தானும் அறிவோம் - நானும் அவ்விறைவனும் அறிவோம். தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார் - தான்
திருக்கோத்தும்பி கோத்தும்பீ நாயேனைக் கொண்டு தன் திருவடிகளைப் புகழ்ந்து பாடும்படி செய்தருளிய நாயகனும் பேயேனது மனக் குற்றங்களைப் பொறுத்தருளுகின்ற பெருமையனும் இகழ்ச்சி சிறிதுமின்றி என் பணிகள் கொண்டருளும் ஈசனுமாகிய இறைவனுடைய திருவடி மலர் களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம் . 685 நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த என்றதனால் அடிகள் அரு ளிச் செய்த திருவாசகம் திருக்கோவையார் என்னும் இரண்டும் திருவருட் பணியால் அருளிச்செய்யப்பட்டன என்பது தெளிவாகும் . பேயேனது - பேய்போன்ற அவாவினையுடையேனது . உள்ளப் பிழை மனத்தில் உண்டாகும் குற்றங்கள் . அவை காமம் வெகுளி மயக் கம் என்பன . இவற்றை வடநூலார் காமம் . குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என ஆறாகக்கொண்டு அரிஷட் வர்க்கம் என்பர் . இனி உள்ளப் பிழை பொறுக்கும் என்பதற்கு உள்ளத்தினாற் தன்னைப்பற்றிப் பிழைபட எண்ணும் எண்ணங்களைப் பொறுக்கும் எனினுமாம் . ' பிழைத்த தெல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய் என்றும் ( நாவு 244-5 ) என்பது காண்க . சீ என்பது வெறுப்பினை உணர்த்தும் குறிப்பிடைச்சொல் . ஏதும் - சிறிதும் . இதன்கண் பாடுவித்த என்பதனால் வாக்குப் பணியும் உள்ளப் பிழை பொறுக்கும் என்பதனால் மனப்பணியும் செய்பணி கொண்டரு ளுர் என்பதனால் உடற் பணியும் கூறப்படுதலின் மனம் வாக்கு காயம் என்னும் மூன்று கருவிகளின் வழிபாடுகள் இறைவனாற் கொள் ளப்பட்டமை கூறியவாறு . நணபரன் D alien நாயகனும் பெருமையனும் ஈசனுமாகிய இறைவனுடைய திரு வடிமலரின் கண்ணே சென்றூதாய் என வினைமுடிபு செய்க . இதன் கண் மனமொழி மெய்கள் இறைபணியில் நிற்றல் கூறப் படுதலின் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க . 12 227 நான்றனக் கன்பின்மை நானுந்தா னும்மறிவோம் தானென்னை யாட்கொண்ட தெல்லாருந் தாமறிவாங் ஆன கருணையும் அங்குற்றே தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ . ப- ரை . கோ தும்பீ - அரச வண்டே நான் தனக்கு - அன்பு இன்மை - நான் தன்னிடத்து அன்புடைமையும் அஃதின்மையும் நானும் தானும் அறிவோம் - நானும் அவ்விறைவனும் அறிவோம் . தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார் - தான்