திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை (கோயிற். 6) எனவும் "பித்தனே யெல்லா வுயிருமாய்த் தழைத்துப் பிழைத்து அவையல்லையாய் நிற்கும் அத்தனே" (பிடித்த. 8) எனவும் அடிகள் அருளியமை காண்க. 688 இப்புறம் - இவ்விடம்; என்றது இவ்வுலகை உணர்த்தியது. மரு வார் குழல் மலர்க்குழல் எனத் தனித்தனி இயையும். இறைவியின் கூந்தல் இயல்பாகவே நறுமணமுடைமையின் மருவார்குழல் என்றார். இனி மருவார் மலர்க்குழல் என இயைத்துப் பொருள்கொள்வாரும் உளர்.மாது என்றது திருவருட்சத்தியை. சிந்தையிலும் என்றன் சிரத்தினிலும் சேரும் வண்ணம் வந்தவனை மண்ணிடை நாம் வாராமல் -தந்தவனை மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதல்லால் (106) என்னும் திருக்களிற்றுப்படியாரிலும் இப்பொருட்டாதல் காண்க. என்ப? சொல் வந்தருளி என்ற சொல்லாற்றலால் வலிய என ஒரு வருவித்துரைக்கப்பட்டது. "தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி" (திருவெம்பா. 6) என வருத லும் காண்க. இறைவன் ஆட்கொள்ள வந்தபோது இறைவியுடன் வந்ததாக வரலாறு இல்லையெனின், இறைவனது திருவருட்சத்தி அடிகள் பாற் பதிந்து நின்று அவரை அதிதீவிர பக்குவமுடையராக்கி யமை கொண்டு "மாதினொடும் வந்தருளி" என்றார். "ஆட்கொள்வான், பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட (ஊசல் 9) "அலர்ந்த மெய்க்கருணையும் நீயும், அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய்'' (பள்ளி. 10) ''குணங்களும் குறிகளுமில்லாக் குணக்கடல் கோமளத்தொடுங் கூடி, அணைந்து வந்தெனை ஆண்டு கொண்டருளிய அற்புதம்" (அற்புத. 6) என வருவன காண்க. அருவாய் மறைபயில் அந்தணனாய் - அரும்பொருளை ஆராய்கின்ற மந்திரப்பொருளைப் பயிற்றுவிக்கும் அருட் குரவனாய் என்றவாறு. 'அந்தணனாய் ஆண்டுகொண்ட தேவர்க்கு" என இயையும். 'அந்தண னாய் ஆண்டுகொண்டான்" (தெள். 1) என அருளியமையுங் காண்க. பயில் என்பது பயிற்றும் என்னும் பிறவினைப் பொருளில் வந்தது. அத னால் அந்தணனாய் என்பதற்கு அழகிய தண்ணளியையுடைய சாரியனாய் எனப் பொருளுரைக்கப்பட்டது. திருவான தேவன் - வீடு பேறாகிய உயர் திருவினை அருளும் காரணனாகிய தேவன். பரமா
திருவாசக ஆராய்ச்சியுரை ( கோயிற் . 6 ) எனவும் பித்தனே யெல்லா வுயிருமாய்த் தழைத்துப் பிழைத்து அவையல்லையாய் நிற்கும் அத்தனே ( பிடித்த . 8 ) எனவும் அடிகள் அருளியமை காண்க . 688 இப்புறம் - இவ்விடம் ; என்றது இவ்வுலகை உணர்த்தியது . மரு வார் குழல் மலர்க்குழல் எனத் தனித்தனி இயையும் . இறைவியின் கூந்தல் இயல்பாகவே நறுமணமுடைமையின் மருவார்குழல் என்றார் . இனி மருவார் மலர்க்குழல் என இயைத்துப் பொருள்கொள்வாரும் உளர்.மாது என்றது திருவருட்சத்தியை . சிந்தையிலும் என்றன் சிரத்தினிலும் சேரும் வண்ணம் வந்தவனை மண்ணிடை நாம் வாராமல் -தந்தவனை மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதல்லால் ( 106 ) என்னும் திருக்களிற்றுப்படியாரிலும் இப்பொருட்டாதல் காண்க . என்ப ? சொல் வந்தருளி என்ற சொல்லாற்றலால் வலிய என ஒரு வருவித்துரைக்கப்பட்டது . தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி ( திருவெம்பா . 6 ) என வருத லும் காண்க . இறைவன் ஆட்கொள்ள வந்தபோது இறைவியுடன் வந்ததாக வரலாறு இல்லையெனின் இறைவனது திருவருட்சத்தி அடிகள் பாற் பதிந்து நின்று அவரை அதிதீவிர பக்குவமுடையராக்கி யமை கொண்டு மாதினொடும் வந்தருளி என்றார் . ஆட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட ( ஊசல் 9 ) அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய் ' ' ( பள்ளி . 10 ) ' ' குணங்களும் குறிகளுமில்லாக் குணக்கடல் கோமளத்தொடுங் கூடி அணைந்து வந்தெனை ஆண்டு கொண்டருளிய அற்புதம் ( அற்புத . 6 ) என வருவன காண்க . அருவாய் மறைபயில் அந்தணனாய் - அரும்பொருளை ஆராய்கின்ற மந்திரப்பொருளைப் பயிற்றுவிக்கும் அருட் குரவனாய் என்றவாறு . ' அந்தணனாய் ஆண்டுகொண்ட தேவர்க்கு என இயையும் . ' அந்தண னாய் ஆண்டுகொண்டான் ( தெள் . 1 ) என அருளியமையுங் காண்க . பயில் என்பது பயிற்றும் என்னும் பிறவினைப் பொருளில் வந்தது . அத னால் அந்தணனாய் என்பதற்கு அழகிய தண்ணளியையுடைய சாரியனாய் எனப் பொருளுரைக்கப்பட்டது . திருவான தேவன் - வீடு பேறாகிய உயர் திருவினை அருளும் காரணனாகிய தேவன் . பரமா