திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை திருமாலும் பன்றி வடிவெடுத்து நிலத்தை இடந்துசென்றும் அறியமுடியாத திருவடிகளினது உருவினை நாம் கண்டறியும் வண்ணம் இறைவன் ஓர் அந்தணனாய் வலிய எழுந்தருளி வந்து நம்மை ஆட் கொண்டருளினன். ஒரு நாமமும் ஓர் உருவமும் முதலாகிய ஒன்றும் இல்லாத அவ்விறைவனுக்கு ஆயிரந் திருநாமங்களைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம். 698 திருமாலும் என்பதில் உப்மை உயர்வு சிறப்பு. பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி என்றது இறைவன் அழலுருவமாய் நின்ற காலத்துப் பன்றி வடிவெடுத்துப் பூமியை இடந்துசென்றும் அறிய முடியாத திருவடியென்றவாறு. ''போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமாலன் றடிமுடி யறியும் ஆதர வதனிற் கடுமுரண் ஏன மாகி முன்கலந் தேழ்தலம் உருவ இடந்து பின்னெய்த் தூழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்** (போற்றி.4-9) என வந்தமை காண்க. உரு என்றது சொரூபலக்கணத்தை. இறை வன் சுட்டியறியப்படாதவனாதலின் நாமம் உருவம் முதலாய உயி ரியல்புகள் இலனாயினான். "தனக்கென நாமமில்லான்” என ஞானாமிர்தத்தும், (55-10-11) ''ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்'"(மாயைப்.1) எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க. அங்ஙனமாக அவ்விறைவ னுக்கு ஆயிரம் திருநாமம் நாம் பாடுதல் யாங்ஙனமெனில், உயிர் களுக்கு அருள்செய்யும்பொருட்டு இறைவன்கொண்ட பல கோலங் களினால் திருநாமங்களும் பலவாயின என்க. 'ஆயிரம் பேருகந்தானும் ஆரூரமர்ந்த அம்மானே' "எண்ணும் நீர் அவன் ஆயிர நாமமே" *பேராயிரம் பரவி வானோ ரேத்தும் பெம்மானை" 'பேருமொராயிரம் பேருடையார்" (நாவு 4-8) (நாவு. 148-3) (நாவு.267-8) (சுந்.18-3)
திருவாசக ஆராய்ச்சியுரை திருமாலும் பன்றி வடிவெடுத்து நிலத்தை இடந்துசென்றும் அறியமுடியாத திருவடிகளினது உருவினை நாம் கண்டறியும் வண்ணம் இறைவன் ஓர் அந்தணனாய் வலிய எழுந்தருளி வந்து நம்மை ஆட் கொண்டருளினன் . ஒரு நாமமும் ஓர் உருவமும் முதலாகிய ஒன்றும் இல்லாத அவ்விறைவனுக்கு ஆயிரந் திருநாமங்களைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம் . 698 திருமாலும் என்பதில் உப்மை உயர்வு சிறப்பு . பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி என்றது இறைவன் அழலுருவமாய் நின்ற காலத்துப் பன்றி வடிவெடுத்துப் பூமியை இடந்துசென்றும் அறிய முடியாத திருவடியென்றவாறு . ' ' போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமாலன் றடிமுடி யறியும் ஆதர வதனிற் கடுமுரண் ஏன மாகி முன்கலந் தேழ்தலம் உருவ இடந்து பின்னெய்த் தூழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி யிணைகள் ** ( போற்றி.4-9 ) என வந்தமை காண்க . உரு என்றது சொரூபலக்கணத்தை . இறை வன் சுட்டியறியப்படாதவனாதலின் நாமம் உருவம் முதலாய உயி ரியல்புகள் இலனாயினான் . தனக்கென நாமமில்லான் என ஞானாமிர்தத்தும் ( 55-10-11 ) ' ' ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான் ' ( மாயைப் .1 ) எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க . அங்ஙனமாக அவ்விறைவ னுக்கு ஆயிரம் திருநாமம் நாம் பாடுதல் யாங்ஙனமெனில் உயிர் களுக்கு அருள்செய்யும்பொருட்டு இறைவன்கொண்ட பல கோலங் களினால் திருநாமங்களும் பலவாயின என்க . ' ஆயிரம் பேருகந்தானும் ஆரூரமர்ந்த அம்மானே ' எண்ணும் நீர் அவன் ஆயிர நாமமே * பேராயிரம் பரவி வானோ ரேத்தும் பெம்மானை ' பேருமொராயிரம் பேருடையார் ( நாவு 4-8 ) ( நாவு . 148-3 ) ( நாவு.267-8 ) ( சுந்.18-3 )