திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் "பேருமோராயிர மென்பரால் என் பிரானுக்கே" ''பேராயிர முடையானை" எனத் தேவாரத்து வருவன காண்க கொட்டாமோ என்பதில் மோ முன்னிலையசை. "பொன்னூசலாடாமோ" (பொன்னூசல் 1) என் புழிப்போல. கொட்டுவாம் என்பது கொட்டாம் என நின்றது. கொட்டுதல் - அடித்தல். திருவடியை உருநாமறிய அந்தணனாய் ஆண்டுகொண்டான். ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடி நாம் ஏணம் கொட்டுவாம் எனமுடிக்க. இதன்கண், திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாமறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 236 699 (சுந். 44-7) (சுந். 56-11) திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவே ரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை அருவாய் உருவமு மாயபிரான் அவன்மருவுந் திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 310 1 ப -ரை, திரு ஆர் பெருந்துறை மேயபிரான் - அழகு பொருந் திய திருப்பெருந்துறையில் என்பொருட்டு எழுந்தருளிய இறைவன், என் பிறவி கருவேர் அறுத்தபின் - என்னுடைய பிறவியாகிய மரத் தின் மூலவேராகிய பற்றினை அறுத்து ஒழித்தபின், யாவரையும் கண் டது இல்லை - அவ்விறைவன் ஒருவனை அன்றி உலகில் பிறர் எவரையும் நாம் பார்த்ததில்லை. அருவாய் உருவமும் ஆயபிரான் அவன் மரு வும் - உருவற்றவனாயும் உருவுடையவனாயும் அமைந்துள்ள தலைவனா கிய அவ்விறைவன் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கின்ற, திரு ஆரூர் பாடி - திருவாரூரின் சிறப்பினைப் பாடிக்கொண்டு, நாம் தெள் ஏணம் கொட்டாம் - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. திருப்பெருந்துறையில் எழுந்தருளிய இறைவன் என் பிறவிக் கரு வேர் அறுத்தபின் யான் அவ்விறைவன் ஒருவனையன்றிப் பிறர் எவரை யும் கண்டதில்லை. அருவாய் உருவமுமாய தலைவனாகிய அவன் எழுந் தருளியிருக்கின்ற திருவாரூரின் சிறப்பினைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக என்பதாம். வேர் என்ற ஏகதேச வுருவகத்தால் பிறவியாகிய மரத்தின் கரு வேர் எனக் கொள்க. பிறவிக் கருவேர் பற்று என்பதனைப் பற்றற்ற
திருத்தெள்ளேணம் பேருமோராயிர மென்பரால் என் பிரானுக்கே ' ' பேராயிர முடையானை எனத் தேவாரத்து வருவன காண்க கொட்டாமோ என்பதில் மோ முன்னிலையசை . பொன்னூசலாடாமோ ( பொன்னூசல் 1 ) என் புழிப்போல . கொட்டுவாம் என்பது கொட்டாம் என நின்றது . கொட்டுதல் - அடித்தல் . திருவடியை உருநாமறிய அந்தணனாய் ஆண்டுகொண்டான் . ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடி நாம் ஏணம் கொட்டுவாம் எனமுடிக்க . இதன்கண் திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாமறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 236 699 ( சுந் . 44-7 ) ( சுந் . 56-11 ) திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவே ரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை அருவாய் உருவமு மாயபிரான் அவன்மருவுந் திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ . 310 1 -ரை திரு ஆர் பெருந்துறை மேயபிரான் - அழகு பொருந் திய திருப்பெருந்துறையில் என்பொருட்டு எழுந்தருளிய இறைவன் என் பிறவி கருவேர் அறுத்தபின் - என்னுடைய பிறவியாகிய மரத் தின் மூலவேராகிய பற்றினை அறுத்து ஒழித்தபின் யாவரையும் கண் டது இல்லை - அவ்விறைவன் ஒருவனை அன்றி உலகில் பிறர் எவரையும் நாம் பார்த்ததில்லை . அருவாய் உருவமும் ஆயபிரான் அவன் மரு வும் - உருவற்றவனாயும் உருவுடையவனாயும் அமைந்துள்ள தலைவனா கிய அவ்விறைவன் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கின்ற திரு ஆரூர் பாடி - திருவாரூரின் சிறப்பினைப் பாடிக்கொண்டு நாம் தெள் ஏணம் கொட்டாம் - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . திருப்பெருந்துறையில் எழுந்தருளிய இறைவன் என் பிறவிக் கரு வேர் அறுத்தபின் யான் அவ்விறைவன் ஒருவனையன்றிப் பிறர் எவரை யும் கண்டதில்லை . அருவாய் உருவமுமாய தலைவனாகிய அவன் எழுந் தருளியிருக்கின்ற திருவாரூரின் சிறப்பினைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக என்பதாம் . வேர் என்ற ஏகதேச வுருவகத்தால் பிறவியாகிய மரத்தின் கரு வேர் எனக் கொள்க . பிறவிக் கருவேர் பற்று என்பதனைப் பற்றற்ற