திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் என்னும் நான்கனு ருபுகள் அரியினாலும் பிரமனாலும் அல்லாத தேவர்களினாலும் மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தனவாகவும் கொள்ளலாம். அல்லாத தேவர் என்றது இந்திரன் முதலானோரை. தெரியும் என்பது தெரிக்கும் என எதுகை நோக்கித் திரிந்து நின்றது. தெரிக்கும் படித் தன்றி என்றது அறிவரிதாய் என்றபடி. 'கனவேயுந் தேவர்கள் காண் பரிய கழலோன்" (தெள்.10) என வருதலுங் காண்க. படித்து அஃறிணை ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று; தன்மைத்து என்பது கருத்து. சிவம் என்பது அரசு என்பது போலப் பால்தோன்றாது நின் றமையின் படித்தன்றி நின்ற என்ற அஃறிணை அடைமொழியைக் கொண்டது. உருக்கும் பணிகொள்ளும் என்பன செய்யும் என்னும் முற்றுக்கள் சிவம் என்பதற்கு முடிபாயின. 701 திருமால் பிரமன் முதலிய தேவர்கட்கும் அறிதற்கரிய சிவம் வலிய எழுந்தருளிவந்து நம்மை உருக்குதலும் பணிகொள்ளுதலும் பெருவியப்பிற்குரிய செயல்களாதலின் உலகம் அதனை அறிந்து வியந்து சிரிப்பதாயிற்று. சிரிக்கும் திறம் - சிரித்தற்கேதுவாகிய அருட்டிறம். 238 என இதன் கண், சிவம்வந்து நம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பத னால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. கக்கு அவமாய தேவர் அவகதியி லழுந்தாமே பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 3 ப- ரை. அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தா மே-பயனற்ற தேவர்களுடைய பயனற்ற பதவிகளில் விரும்பி விழாமல், பவ மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி - பிறவியாகிய மயக்கத்தி னின்றும் என்னை ஆட்கொண்டருளிய மேலான ஒளியுருவையுடைய இறைவன், நவம் ஆய செஞ்சுடர் நல்குதலும் - நான் முன் கண்டறி யாத புதிய நல்ல ஞான ஒளியைத் தந்தருளுதலும் உடனே, நாம் ஒழிந்து சிவம் ஆன ஆறு பாடி - எனது தற்போதமாகிய உயிர் அறிவு நீங்கிச் சிவமாந்தன்மை எய்திய விதத்தைப் பாடிக்கொண்டு, தென் ஏணம் கொட்டாமோ - தெள்ளேணம் என்னும் பறையைக் கொட்டு வோமாக. அவமாய தேவர்களது பயனற்ற பதவிகளிற் சென்று வீழா வண் ணம் பிறவியாகிய மயக்கத்தினின்றும் என்னைக் காத்து என்னை ஆண்டு கொண்ட பரஞ்சோதி புதிய நல்ல ஞானஒளியைத் தந்தருளுதலும்
திருத்தெள்ளேணம் அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் என்னும் நான்கனு ருபுகள் அரியினாலும் பிரமனாலும் அல்லாத தேவர்களினாலும் மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தனவாகவும் கொள்ளலாம் . அல்லாத தேவர் என்றது இந்திரன் முதலானோரை . தெரியும் என்பது தெரிக்கும் என எதுகை நோக்கித் திரிந்து நின்றது . தெரிக்கும் படித் தன்றி என்றது அறிவரிதாய் என்றபடி . ' கனவேயுந் தேவர்கள் காண் பரிய கழலோன் ( தெள் .10 ) என வருதலுங் காண்க . படித்து அஃறிணை ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று ; தன்மைத்து என்பது கருத்து . சிவம் என்பது அரசு என்பது போலப் பால்தோன்றாது நின் றமையின் படித்தன்றி நின்ற என்ற அஃறிணை அடைமொழியைக் கொண்டது . உருக்கும் பணிகொள்ளும் என்பன செய்யும் என்னும் முற்றுக்கள் சிவம் என்பதற்கு முடிபாயின . 701 திருமால் பிரமன் முதலிய தேவர்கட்கும் அறிதற்கரிய சிவம் வலிய எழுந்தருளிவந்து நம்மை உருக்குதலும் பணிகொள்ளுதலும் பெருவியப்பிற்குரிய செயல்களாதலின் உலகம் அதனை அறிந்து வியந்து சிரிப்பதாயிற்று . சிரிக்கும் திறம் - சிரித்தற்கேதுவாகிய அருட்டிறம் . 238 என இதன் கண் சிவம்வந்து நம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பத னால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . கக்கு அவமாய தேவர் அவகதியி லழுந்தாமே பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ . 3 ப- ரை . அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தா மே - பயனற்ற தேவர்களுடைய பயனற்ற பதவிகளில் விரும்பி விழாமல் பவ மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி - பிறவியாகிய மயக்கத்தி னின்றும் என்னை ஆட்கொண்டருளிய மேலான ஒளியுருவையுடைய இறைவன் நவம் ஆய செஞ்சுடர் நல்குதலும் - நான் முன் கண்டறி யாத புதிய நல்ல ஞான ஒளியைத் தந்தருளுதலும் உடனே நாம் ஒழிந்து சிவம் ஆன ஆறு பாடி - எனது தற்போதமாகிய உயிர் அறிவு நீங்கிச் சிவமாந்தன்மை எய்திய விதத்தைப் பாடிக்கொண்டு தென் ஏணம் கொட்டாமோ - தெள்ளேணம் என்னும் பறையைக் கொட்டு வோமாக . அவமாய தேவர்களது பயனற்ற பதவிகளிற் சென்று வீழா வண் ணம் பிறவியாகிய மயக்கத்தினின்றும் என்னைக் காத்து என்னை ஆண்டு கொண்ட பரஞ்சோதி புதிய நல்ல ஞானஒளியைத் தந்தருளுதலும்