திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளே ணம் அருமருந்தன்ன என்பது அருமந்த என மருவியது. அருமருந்து - கிடைத்தற்கரிய அமுதம். அருமந்த தேவர் அயன் திருமால் என்க. உருவந்து - திருவுருக்கொண்டு வந்து. உகப்பு - உயர்தல். "உகப்பே யுயர்தலுவப்பே யுவகை" என்பது தொல்காப்பியம் (உரி.9).உகப் பெய்த என்றது இறைவன் ஞானாசாரியனாக எழுந்தருளிவந்து அடி களை ஆட்கொண்டமையை அறிதலால் உயர்வடைய என்றவாறு. கொண்டருளி - ஆட்கொண்டருளி கரு - பிறவி. ஈண்டு, பிறவிக்கு மூலமாகிய யான் எனது என்னும் செருக்குக்களை. "வெந்து" என்ற வினையினால் ஞானத்தீயால் வெந்து எனவுரைக்க. கடைக்கணித்து- திருக்கடைக் கண்ணால் பார்த்து; என்றது, நயன தீக்கை செய்து என்றவாறு. புகுந்த என்னும் பெயரெச்சம் ஏதுப்பொருளில் வந்தது. புகுந்த திரு உள்ளத்திற் புகுந்தமையாலுண்டாகிய மேலாகிய சீவன் முத்தநிலை. வந்தவாறு என்பது வந்தவா என ஈறுகெட்டது. சிவம் உருவந்து கொண்டருளிக் கடைக்கணித்து உளம்புகுந்த திருவந்தவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என வினைமுடியு செய்க. இதன்கண், உளம்புகுந்த திருவந்த வாபாடி என்பவற்றால் சிவனோ டடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 5 240 703 அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின் மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும் வந் தாண்டதிறம் உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களினீர்த் திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. ப-ரை. ஆடு நாகம் அரை அசைத்த பிரான் - ஆடுகின்ற பாம் பினை திருவரையின் கண்ணே கச்சாகக்கட்டிய சிவபெருமான், அவனி யின்மேல் வரை அடு மங்கைதன் பங்கொடும் வந்து - இந் நிலவுலகில் இமயமலையில் விளையாடிய உமையம்மையார் பொருந்திய இடப் பாகத்தினோடும் வலிய எழுந்தருளிவந்து, ஆண்ட திறம் - எம்மை ஆட் கொண்டருளிய திறத்தினை, உரை ஆட - உரை தடுமாறவும், உள் ஒளி ஆட - உள்ளத்தின் கண்ணே அறிவொளி உண்டாகவும், ஒள் மா மலர் கண்களில் நீர் திரை ஆடும் ஆறு பாடி - ஒளிபொருந்திய கருங் குவளை மலர்போன்ற கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரையிட்டாற் போல மூடித் ததும்புமாறும் பாடிக்கொண்டு, தெள்ளேணம் கொட் டாமோ - தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. Fran சிவபெருமான் இந்நிலவுலகில் உமையம்மையாரொடும் எழுந்தருளிவந்து எம்மை ஆட்கொண்டருளிய திறத்தினை, உரையாட வலிய
திருத்தெள்ளே ணம் அருமருந்தன்ன என்பது அருமந்த என மருவியது . அருமருந்து - கிடைத்தற்கரிய அமுதம் . அருமந்த தேவர் அயன் திருமால் என்க . உருவந்து - திருவுருக்கொண்டு வந்து . உகப்பு - உயர்தல் . உகப்பே யுயர்தலுவப்பே யுவகை என்பது தொல்காப்பியம் ( உரி .9 ) .உகப் பெய்த என்றது இறைவன் ஞானாசாரியனாக எழுந்தருளிவந்து அடி களை ஆட்கொண்டமையை அறிதலால் உயர்வடைய என்றவாறு . கொண்டருளி - ஆட்கொண்டருளி கரு - பிறவி . ஈண்டு பிறவிக்கு மூலமாகிய யான் எனது என்னும் செருக்குக்களை . வெந்து என்ற வினையினால் ஞானத்தீயால் வெந்து எனவுரைக்க . கடைக்கணித்து திருக்கடைக் கண்ணால் பார்த்து ; என்றது நயன தீக்கை செய்து என்றவாறு . புகுந்த என்னும் பெயரெச்சம் ஏதுப்பொருளில் வந்தது . புகுந்த திரு உள்ளத்திற் புகுந்தமையாலுண்டாகிய மேலாகிய சீவன் முத்தநிலை . வந்தவாறு என்பது வந்தவா என ஈறுகெட்டது . சிவம் உருவந்து கொண்டருளிக் கடைக்கணித்து உளம்புகுந்த திருவந்தவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என வினைமுடியு செய்க . இதன்கண் உளம்புகுந்த திருவந்த வாபாடி என்பவற்றால் சிவனோ டடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 5 240 703 அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின் மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும் வந் தாண்டதிறம் உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களினீர்த் திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . ஆடு நாகம் அரை அசைத்த பிரான் - ஆடுகின்ற பாம் பினை திருவரையின் கண்ணே கச்சாகக்கட்டிய சிவபெருமான் அவனி யின்மேல் வரை அடு மங்கைதன் பங்கொடும் வந்து - இந் நிலவுலகில் இமயமலையில் விளையாடிய உமையம்மையார் பொருந்திய இடப் பாகத்தினோடும் வலிய எழுந்தருளிவந்து ஆண்ட திறம் - எம்மை ஆட் கொண்டருளிய திறத்தினை உரை ஆட - உரை தடுமாறவும் உள் ஒளி ஆட - உள்ளத்தின் கண்ணே அறிவொளி உண்டாகவும் ஒள் மா மலர் கண்களில் நீர் திரை ஆடும் ஆறு பாடி - ஒளிபொருந்திய கருங் குவளை மலர்போன்ற கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரையிட்டாற் போல மூடித் ததும்புமாறும் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட் டாமோ - தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . Fran சிவபெருமான் இந்நிலவுலகில் உமையம்மையாரொடும் எழுந்தருளிவந்து எம்மை ஆட்கொண்டருளிய திறத்தினை உரையாட வலிய