திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் ப - ரை. ஆவா - இஃதென்ன வியப்பு. அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் - திருமாலுக்கும் பிரமனுக்கும் இந்திரனுக் கும் மற்றைத் தேவர்களுக்கும் அறிதற்கரிய சிவபெருமான், பூத லத்தே என்னையும் வா வா என்று வலித்து ஆண்டுகொண்டான் - நில வுலகத்தின் கண்ணே ஞானாசாரியனாக வலிய எழுந்தருளிவந்து ஒன்றும் போதா நாயேனையும் இங்கே வா வா என்று அழைத்து இழுத்து ஆட் கொண்டருளினன்; பூ ஆர் அடி சுவடு என் தலைமேல் பொறித்தலும் அவ்விறைவன் தாமரை மலர்போன்ற தன் திருவடி அடையாளத்தை என் தலையின் கண்ணே பதியச்செய்த அளவில், தே ஆன ஆறு பாடி- யான் அவ்விறைவன் இயல்பினை அடைந்த தன்மையினைப் பாடிக் கொண்டு, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் என்னும் பறையினை அடிப்போமாக. தி. செவ்வன் திருமாலும் பிரமனும் இந்திரனும் ஏனையதேவர்களும் அறிதற்கரிய சிவபெருமான் நிலவுலகின் கண்ணே ஞானாசாரியனாக வலிய எழுத் தருளி வந்து என்னையும் இங்கு வா வா என்று அழைத்து இழுத்து ஆட் கொண்டருளினன். அவ்விறைவன் தன் திருவடிச் சுவட்டை என் தலை யிற் பதியச்செய்த அளவில் யான் அவ்விறைவன் இயல்பினை அடைந்த தன்மையைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் என்னும் பறை யினைக் கொட்டுவோமாக என்பதாம். 705 ஆவா என்பது இவன் அருள்திறம் இருந்தவாறென்னே என வியப்புக் குறிப்பின் கண் வந்தது. என்னையும் என்பதில் உம்மை, ஒன் றும் போதா நாயேனையும் என இழிவு சிறப்பு. வலித்தாண்டு கொண் டான் - இழுத்து ஆட்கொண்டருளினன்.இருந்தேனுய வந்திணை மலர்க்கண்ணினின் னோக்கருளிப், பெருந் தேனென நெஞ்சு கப்பிடித் தாண்ட" எனத் திருக்கோவையாரில் (394) வருதலுங் காண்க பூவார் அடிச்சுவடு என்றது தாமரை மலர் போன்ற தன் திருவடி அடையாளத்தை. 'பூவா ரடிச்சுவ டென்றலை மேற்பொறித்து வை' " எனத் தேவாரத்தும் (நாவு. 66-1) வருதல் காண்க. அடிச்சுவடு பொறித்தல் என்றது திருவடித் தீக்கை செய்தலை. அடிகளுக்கு இறை வன் திருவடித் தீக்கை செய்தருளினமையை, 'இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலுமே' 'சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான்" (பூவல்லி 1;10) "நடக்கும் திருவடி யென்றலைமேல் நட்டமையால்" (குலாப் 8) என அடிகள் அருளினமையானுமறிக. 'பரவி மென்பதம் பணிபவர் படிமேற் படிய வீழ்ந்தனர் வாழ்ந்தனர் பரிவான் மருவு மிங்கினர் சென்னியி லிருதாண் மகிழ வைத்தனர் மதிநதி முடிப்பார்" எனத் திருவாதவூரடிகள் புராணத்தும் வருதல் காண்க. திருப்பெருந்.57 75
திருத்தெள்ளேணம் - ரை . ஆவா - இஃதென்ன வியப்பு . அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் - திருமாலுக்கும் பிரமனுக்கும் இந்திரனுக் கும் மற்றைத் தேவர்களுக்கும் அறிதற்கரிய சிவபெருமான் பூத லத்தே என்னையும் வா வா என்று வலித்து ஆண்டுகொண்டான் - நில வுலகத்தின் கண்ணே ஞானாசாரியனாக வலிய எழுந்தருளிவந்து ஒன்றும் போதா நாயேனையும் இங்கே வா வா என்று அழைத்து இழுத்து ஆட் கொண்டருளினன் ; பூ ஆர் அடி சுவடு என் தலைமேல் பொறித்தலும் அவ்விறைவன் தாமரை மலர்போன்ற தன் திருவடி அடையாளத்தை என் தலையின் கண்ணே பதியச்செய்த அளவில் தே ஆன ஆறு பாடி யான் அவ்விறைவன் இயல்பினை அடைந்த தன்மையினைப் பாடிக் கொண்டு தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் என்னும் பறையினை அடிப்போமாக . தி . செவ்வன் திருமாலும் பிரமனும் இந்திரனும் ஏனையதேவர்களும் அறிதற்கரிய சிவபெருமான் நிலவுலகின் கண்ணே ஞானாசாரியனாக வலிய எழுத் தருளி வந்து என்னையும் இங்கு வா வா என்று அழைத்து இழுத்து ஆட் கொண்டருளினன் . அவ்விறைவன் தன் திருவடிச் சுவட்டை என் தலை யிற் பதியச்செய்த அளவில் யான் அவ்விறைவன் இயல்பினை அடைந்த தன்மையைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் என்னும் பறை யினைக் கொட்டுவோமாக என்பதாம் . 705 ஆவா என்பது இவன் அருள்திறம் இருந்தவாறென்னே என வியப்புக் குறிப்பின் கண் வந்தது . என்னையும் என்பதில் உம்மை ஒன் றும் போதா நாயேனையும் என இழிவு சிறப்பு . வலித்தாண்டு கொண் டான் - இழுத்து ஆட்கொண்டருளினன்.இருந்தேனுய வந்திணை மலர்க்கண்ணினின் னோக்கருளிப் பெருந் தேனென நெஞ்சு கப்பிடித் தாண்ட எனத் திருக்கோவையாரில் ( 394 ) வருதலுங் காண்க பூவார் அடிச்சுவடு என்றது தாமரை மலர் போன்ற தன் திருவடி அடையாளத்தை . ' பூவா ரடிச்சுவ டென்றலை மேற்பொறித்து வை ' எனத் தேவாரத்தும் ( நாவு . 66-1 ) வருதல் காண்க . அடிச்சுவடு பொறித்தல் என்றது திருவடித் தீக்கை செய்தலை . அடிகளுக்கு இறை வன் திருவடித் தீக்கை செய்தருளினமையை ' இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலுமே ' ' சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான் ( பூவல்லி 1 ; 10 ) நடக்கும் திருவடி யென்றலைமேல் நட்டமையால் ( குலாப் 8 ) என அடிகள் அருளினமையானுமறிக . ' பரவி மென்பதம் பணிபவர் படிமேற் படிய வீழ்ந்தனர் வாழ்ந்தனர் பரிவான் மருவு மிங்கினர் சென்னியி லிருதாண் மகிழ வைத்தனர் மதிநதி முடிப்பார் எனத் திருவாதவூரடிகள் புராணத்தும் வருதல் காண்க . திருப்பெருந் .57 75