திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் யொடும் புகுந்தருளி - புனத்துள்ள மூங்கில் போன்ற தொடியணிந்த தோளினையுடைய உமையம்மையொடும் நிலவுலகத்தே தானாக எழுந் தருளிவந்து, நனவே எனை பிடித்து ஆட்கொண்ட ஆ(று) - நனவின் கண்ணே என்னை வலிந்து பிடித்து ஆட்கொண்டருளிய விதத்தை நெஞ்சம் நயந்து - மனம் விரும்பி, சின வேல் கண் நீர் மல்க -சினத்தை யுடைய வேல்போன்ற கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகும்படி பாடிக்கோண்டு, தெள்ளேணம் கொட்டாமோ -நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. 709 தேவர்கள் கனவினுங் காணுதல் அரிதாகிய திருவடியையுடைய இறைவன், உமையம்மையாரோடும் நிலவுலகத்தே தானாக எழுந் தருளி வந்து, நனவின்கண்ணே என்னைப் பிடித்து ஆட்கொண்டருளிய விதத்தை, மனம் விரும்பிக் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகும்படி பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டு வோமாக என்பதாம். தேவர்கள் கனவேயும் காண்பரிய கனைகழல் என்க. தேவர்கனவி லுங் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் (திருப்பொற். 16) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. கனைகழலோன் - செறிந்த கழலினையுடையோன் எனினுமாம். கனைகழல் - திருவடிக்கு பெயர். புனவேய் - மலைநிலத்துப் பொருந்திய புனத்திலுள்ள வேய். ஆகு தோளி - தோளையுடையவள் என்றது உமையம்மையை. வளை என்றது தோள்வளையை ''சூடகந் தோள்வளை யார்ப்ப ஆர்ப்ப"(திருப்பொற். 7). எனைப் பிடித்து என்றது மாற்சரிய சம்பந்தமாக என்னை வலிய வந்து பிடித்து என்றவாறு. கனைகழலோன் தோளியொடும் புகுந் தருளி யாட்கொண்டவாறு என இயையும். "மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி அருவசய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட" கோத்தும்பி 14 என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க. அடிகளை வலிந்து பிடித்து ஆட்கொண்டமை "எம்மைப் பிடித்தாண்டு எல்லை தீர் இன்பத் தந்தவன்" "இருந்தேனுய வந்திணைமலர்க் கண்ணி னின்னோக் கருளிப், பெருந்தேனென நெஞ்சுகப் பிடித்தாண்ட” எனத் திருக்கோ வையாரில் (214:394) அருளியவாற்றானுமறிக. ஆட்கொண்ட ஆறு என்பது ஆட்கொண்டவா என ஈறு கெட்டு நின்றது. அது பாடி என வருவிக்கப்பட்ட வினையைக் கொண்டு முடிந்தது. நயந்து - விரும்பி. வேலைச் செலுத்தும் வீரனது சினம் வேலின்கண் ஏற்றிச் சினவேல் எனக் கூறப்பட்டது. மல்க - பெருக. அன்பராயினார்க்குக் கண்ணீர் மல்கல், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்காதுவார்''(ஞான.307-1)
திருத்தெள்ளேணம் யொடும் புகுந்தருளி - புனத்துள்ள மூங்கில் போன்ற தொடியணிந்த தோளினையுடைய உமையம்மையொடும் நிலவுலகத்தே தானாக எழுந் தருளிவந்து நனவே எனை பிடித்து ஆட்கொண்ட ( று ) - நனவின் கண்ணே என்னை வலிந்து பிடித்து ஆட்கொண்டருளிய விதத்தை நெஞ்சம் நயந்து - மனம் விரும்பி சின வேல் கண் நீர் மல்க -சினத்தை யுடைய வேல்போன்ற கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகும்படி பாடிக்கோண்டு தெள்ளேணம் கொட்டாமோ -நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . 709 தேவர்கள் கனவினுங் காணுதல் அரிதாகிய திருவடியையுடைய இறைவன் உமையம்மையாரோடும் நிலவுலகத்தே தானாக எழுந் தருளி வந்து நனவின்கண்ணே என்னைப் பிடித்து ஆட்கொண்டருளிய விதத்தை மனம் விரும்பிக் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகும்படி பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டு வோமாக என்பதாம் . தேவர்கள் கனவேயும் காண்பரிய கனைகழல் என்க . தேவர்கனவி லுங் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் ( திருப்பொற் . 16 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க . கனைகழலோன் - செறிந்த கழலினையுடையோன் எனினுமாம் . கனைகழல் - திருவடிக்கு பெயர் . புனவேய் - மலைநிலத்துப் பொருந்திய புனத்திலுள்ள வேய் . ஆகு தோளி - தோளையுடையவள் என்றது உமையம்மையை . வளை என்றது தோள்வளையை ' ' சூடகந் தோள்வளை யார்ப்ப ஆர்ப்ப ( திருப்பொற் . 7 ) . எனைப் பிடித்து என்றது மாற்சரிய சம்பந்தமாக என்னை வலிய வந்து பிடித்து என்றவாறு . கனைகழலோன் தோளியொடும் புகுந் தருளி யாட்கொண்டவாறு என இயையும் . மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி அருவசய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட கோத்தும்பி 14 என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க . அடிகளை வலிந்து பிடித்து ஆட்கொண்டமை எம்மைப் பிடித்தாண்டு எல்லை தீர் இன்பத் தந்தவன் இருந்தேனுய வந்திணைமலர்க் கண்ணி னின்னோக் கருளிப் பெருந்தேனென நெஞ்சுகப் பிடித்தாண்ட எனத் திருக்கோ வையாரில் ( 214 : 394 ) அருளியவாற்றானுமறிக . ஆட்கொண்ட ஆறு என்பது ஆட்கொண்டவா என ஈறு கெட்டு நின்றது . அது பாடி என வருவிக்கப்பட்ட வினையைக் கொண்டு முடிந்தது . நயந்து - விரும்பி . வேலைச் செலுத்தும் வீரனது சினம் வேலின்கண் ஏற்றிச் சினவேல் எனக் கூறப்பட்டது . மல்க - பெருக . அன்பராயினார்க்குக் கண்ணீர் மல்கல் ' காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்காதுவார் ' ' ( ஞான.307-1 )