திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் நிற்றல். ஆண்டலும் என்பது ஆண்டருளியவுடன் என்னும் பொருள் தந்து நின்றது. அவனியின் மேல் அயல் மாண்டு என மாறிக் கூட்டுக. "அருவினைச் சுற்றம்" எனப் பின்னர்க் கூறப்படுதலின் அயல் என்ப தற்குப் பக்கச்சார்பாகவுள்ள பொருள்களின் பற்று என உரைக்கப் பட்டது. சுற்றம் - சுற்றத்தவரின் பற்று. மயல் - மனமயக்கம், என் றது பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளை. மற்று- பிறிது என்னும் பொருட்டு. செயல் - உலகியல் பற்றி உடம்பில் நிக ழும் செயல்கள். அயல்மாண்டு சுற்றமும் மாண்டு மயல் மாண்டு என்பவற்றால் பொருட்பற்றும் சுற்றப் பற்றும் மருளுமாகிய மனக் குற்றங்களும், வாசகம் மாண்டு என்பதனால் மனத்தின் கணுண்டாகும் குற்றமுடைய நினைவுகள் பற்றி வாக்கிலுண்டாகும் சொற்குற்றமும், செயல்மாண்ட என்றதனால் மனக்குற்றம் சொற்குற்றங்களால் உடலில் நிகழும் செயற்குற்றங்களும் நீங்கியமை கூறினார். எனவே மனமொழி மெய் கள் தூய்மையடைந்தமை கூறப்பட்டவாறு. மாண்டவாறு என்பது மாண்டவா எனக் கடைக் குறைந்து நின்றது 711 கண்ணிதன் பங்கன் ஆண்டலும் அயல்மாண்டு சுற்றமும் மாண்டு மயல் மாண்டு வாசகம் மாண்டு செயன் மாண்ட வாறுபாடித் தெள் ளேணம் கொட்டுவாம் என வினைமுடிபு செய்க. இதன் கண் கண்ணிதன் பங்கன் கலந்தாண்டலும் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க, 246 முத்திக் குழன்று முனிவர்குழா நனிவாட அத்திக் கருளி யடியேனை யாண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ? . ப - ரை. முனிவர் குழாம் முத்திக்கு உழன்று நனி வாட - முனி வர்கூட்டம் வீடு அடைதற்பொருட்டுக் காட்டிற்சென்று தவஞ்செய்து வருந்தி அது கிடைக்கப்பெறாமையால் மிகவும் வாட்டமடையவும், அத்திக்கு அருளி-யானைக்கு அருள் செய்து, அடியேனை ஆண்டுகொண்டு அடியேனையும் ஆட்கொண்டருளி, பத்தி கடலுள் பதித்த பரஞ் சோதி -அன்புக்கடலுள் முழுகும்படி செய்த மேலான பேரொளியுரு வினனாகிய இறைவனது, தித்திக்கும் ஆபாடி - இனிமை செய்யும் அருட்டிறத்தினைப் பாடிக்கொண்டு, தெள்ளேணம் கொட்டாமோ- நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. முனிவர் குழாம் முத்தியடைதற் பொருட்டுத் தவஞ் செய்து உழன்று மிகவும் வாடவும், அவர்க்குப் பக்குவ முதிர்ச்சியின்மை
திருத்தெள்ளேணம் நிற்றல் . ஆண்டலும் என்பது ஆண்டருளியவுடன் என்னும் பொருள் தந்து நின்றது . அவனியின் மேல் அயல் மாண்டு என மாறிக் கூட்டுக . அருவினைச் சுற்றம் எனப் பின்னர்க் கூறப்படுதலின் அயல் என்ப தற்குப் பக்கச்சார்பாகவுள்ள பொருள்களின் பற்று என உரைக்கப் பட்டது . சுற்றம் - சுற்றத்தவரின் பற்று . மயல் - மனமயக்கம் என் றது பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளை . மற்று பிறிது என்னும் பொருட்டு . செயல் - உலகியல் பற்றி உடம்பில் நிக ழும் செயல்கள் . அயல்மாண்டு சுற்றமும் மாண்டு மயல் மாண்டு என்பவற்றால் பொருட்பற்றும் சுற்றப் பற்றும் மருளுமாகிய மனக் குற்றங்களும் வாசகம் மாண்டு என்பதனால் மனத்தின் கணுண்டாகும் குற்றமுடைய நினைவுகள் பற்றி வாக்கிலுண்டாகும் சொற்குற்றமும் செயல்மாண்ட என்றதனால் மனக்குற்றம் சொற்குற்றங்களால் உடலில் நிகழும் செயற்குற்றங்களும் நீங்கியமை கூறினார் . எனவே மனமொழி மெய் கள் தூய்மையடைந்தமை கூறப்பட்டவாறு . மாண்டவாறு என்பது மாண்டவா எனக் கடைக் குறைந்து நின்றது 711 கண்ணிதன் பங்கன் ஆண்டலும் அயல்மாண்டு சுற்றமும் மாண்டு மயல் மாண்டு வாசகம் மாண்டு செயன் மாண்ட வாறுபாடித் தெள் ளேணம் கொட்டுவாம் என வினைமுடிபு செய்க . இதன் கண் கண்ணிதன் பங்கன் கலந்தாண்டலும் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க 246 முத்திக் குழன்று முனிவர்குழா நனிவாட அத்திக் கருளி யடியேனை யாண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ ? . - ரை . முனிவர் குழாம் முத்திக்கு உழன்று நனி வாட - முனி வர்கூட்டம் வீடு அடைதற்பொருட்டுக் காட்டிற்சென்று தவஞ்செய்து வருந்தி அது கிடைக்கப்பெறாமையால் மிகவும் வாட்டமடையவும் அத்திக்கு அருளி - யானைக்கு அருள் செய்து அடியேனை ஆண்டுகொண்டு அடியேனையும் ஆட்கொண்டருளி பத்தி கடலுள் பதித்த பரஞ் சோதி -அன்புக்கடலுள் முழுகும்படி செய்த மேலான பேரொளியுரு வினனாகிய இறைவனது தித்திக்கும் ஆபாடி - இனிமை செய்யும் அருட்டிறத்தினைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டாமோ நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . முனிவர் குழாம் முத்தியடைதற் பொருட்டுத் தவஞ் செய்து உழன்று மிகவும் வாடவும் அவர்க்குப் பக்குவ முதிர்ச்சியின்மை