திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

712 திருவாசக ஆராய்ச்சியுரை யால் அருள் புரியாது, யானைக்கு அருள்செய்து, அடியேனை ஆட்கொண் டருளிப் பத்திக்கடலுள் மூழ்கும் வண்ணம் செய்த பரஞ்சோதியது இனிமை செய்யும் அருட்டிறங்களைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம். முனிவர் குழாம் -முனிவர் கூட்டம், "முனிவர்குழாம் பன்னூறு கோடி யிமையோர்கள்தாம் நிற்ப" (பொன்னூசல் 3) என்பது காண்க உழலுதல் - மலைகளிலும் காடுகளிலும் தவஞ்செய்து வருந்துதல். முனிவர்குழாம் முத்திக்குழன்று வாடியமை அப்போது அவர்களுக்குப் பரிபக்குவ நிலையுண்டாகாமை யாலாகும். அத்தி - யானை.பதி OTUR அத்திக்கருளிய வரலாறு; முன்னொரு காலத்தில் திருக்கைலாயத் தின் கண் சிவ பெருமான் உமாதேவியாருடன் தனித் திருக்கையில், சிவ கணங்களுக்குத் தலைவனாகிய அத்தி என்பவன் அப்பெருமானைத் தரி சிக்க விரும்பி, வாயில்காப்போர் இப்போது செல்லல் தகாது என்று தடுக்கவும் கேளானாய் உட்செல்ல, அவனைக் கண்ட உமாதேவியார் கடுங்கோபங் கொண்டு அத்தி என்னும் பெயரையுடைய நீ அத்தி யாகக் கடவை எனச் சபித்தனர். உடனே அத்தியென்பவன் இறை வனையும் உமாதேவியாரையும் வணங்கி அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று துதிக்க இறைவன், 'அத்தியாகப் பிறந்து தென் கயிலாயமாகிய திருக்காளத்தியில் சிவலிங்கப் பெரு மானை அருச்சித்து பிறப்பு நீக்கி முத்தியடைவாய்' என வரமளித்தனர் என்பதாம். இனி, துருவாச முனிவராற் சாபம்பெற்ற ஐராவத யானைக்கு அருள்செய்த வரலாறு திருவிளையாடற் புராணத்துள் கூறப்படுதலின் அதனைக் கொள்ளினுமமையும், ரலிய முனிவர் குழாம் உழன்று வாட அருளி ஆண்டு கொண்டு பதித்த பரஞ்சோதி (யது) தித்திக்கு மாற்றினைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவாம் என வினை முடிபுசெய்க. இதன்கண் அடியேனை ஆண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பரஞ்சோதி என்பதனால் பொருள் போதருதல் காண்க. 12 247 பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர் தம்பாடும் ஆர்பாடுஞ் சாரா வடையருளி மாண்டுகொண்ட நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. ப - ரை. பார் பாடும் - நிலவுலகத்தார் பக்கமும், பாதாளர் பாடும் - கீழ் உலகத்தார் பக்கமும், விண்ணோர் தம்பாடும் - விண்ணுல
712 திருவாசக ஆராய்ச்சியுரை யால் அருள் புரியாது யானைக்கு அருள்செய்து அடியேனை ஆட்கொண் டருளிப் பத்திக்கடலுள் மூழ்கும் வண்ணம் செய்த பரஞ்சோதியது இனிமை செய்யும் அருட்டிறங்களைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம் . முனிவர் குழாம் -முனிவர் கூட்டம் முனிவர்குழாம் பன்னூறு கோடி யிமையோர்கள்தாம் நிற்ப ( பொன்னூசல் 3 ) என்பது காண்க உழலுதல் - மலைகளிலும் காடுகளிலும் தவஞ்செய்து வருந்துதல் . முனிவர்குழாம் முத்திக்குழன்று வாடியமை அப்போது அவர்களுக்குப் பரிபக்குவ நிலையுண்டாகாமை யாலாகும் . அத்தி - யானை.பதி OTUR அத்திக்கருளிய வரலாறு ; முன்னொரு காலத்தில் திருக்கைலாயத் தின் கண் சிவ பெருமான் உமாதேவியாருடன் தனித் திருக்கையில் சிவ கணங்களுக்குத் தலைவனாகிய அத்தி என்பவன் அப்பெருமானைத் தரி சிக்க விரும்பி வாயில்காப்போர் இப்போது செல்லல் தகாது என்று தடுக்கவும் கேளானாய் உட்செல்ல அவனைக் கண்ட உமாதேவியார் கடுங்கோபங் கொண்டு அத்தி என்னும் பெயரையுடைய நீ அத்தி யாகக் கடவை எனச் சபித்தனர் . உடனே அத்தியென்பவன் இறை வனையும் உமாதேவியாரையும் வணங்கி அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று துதிக்க இறைவன் ' அத்தியாகப் பிறந்து தென் கயிலாயமாகிய திருக்காளத்தியில் சிவலிங்கப் பெரு மானை அருச்சித்து பிறப்பு நீக்கி முத்தியடைவாய் ' என வரமளித்தனர் என்பதாம் . இனி துருவாச முனிவராற் சாபம்பெற்ற ஐராவத யானைக்கு அருள்செய்த வரலாறு திருவிளையாடற் புராணத்துள் கூறப்படுதலின் அதனைக் கொள்ளினுமமையும் ரலிய முனிவர் குழாம் உழன்று வாட அருளி ஆண்டு கொண்டு பதித்த பரஞ்சோதி ( யது ) தித்திக்கு மாற்றினைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவாம் என வினை முடிபுசெய்க . இதன்கண் அடியேனை ஆண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பரஞ்சோதி என்பதனால் பொருள் போதருதல் காண்க . 12 247 பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர் தம்பாடும் ஆர்பாடுஞ் சாரா வடையருளி மாண்டுகொண்ட நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . பார் பாடும் - நிலவுலகத்தார் பக்கமும் பாதாளர் பாடும் - கீழ் உலகத்தார் பக்கமும் விண்ணோர் தம்பாடும் - விண்ணுல