திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் கத்தார் பக்கமும், ஆர் பாடும் சாரா வகை அருளி - வேறு எவ்வுல கத்தார் பக்கமும் சென்று சேராத வகையில் அருள்செய்து, ஆண்டு கொண்ட - என்னை ஆட்கொண்டருளிய, நேர்பு ஆடல்பாடி - நேர்ச்சி யாகிய திருவிளையாடலைப் பாடியும், நினைப்பு அரிய தனி பெரியோன் சீர் பாடல் பாடி- நினைத்தற்கரிய ஒப்பற்ற பெருமையையுடைய இறைவனது சிறந்த புகழைப்பாடியும், நாம் தெள்ளேணம் கொட் டாமோ -நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோ மாசு. 713 வைபப்ஸ் பார்பாடும் பாதாளத்தார் பாடும் விண்ணோர்தம் பாடும் வேறு ஆர்பாடும் சென்று சேராத வகையில் அருள்செய்து ஆட்கொண்டரு ளிய சிவபெருமானது திருவிளையாடல்களைப் பாடியும் அப்பெருமா னது சீர்பாடலைப் பாடியும் தெள்ளேணம் கொட்டுவோமாக என்ப தாம். பார் ஆகுபெயராய் மக்களை உணர்த்தியது. பாரார் பாடும் என் பது பார் பாடும் என நின்றது எனக் கொள்ளினும் அமையும். பாடு- பக்கம். இனி, இடம் எனக்கொள்ளினும் அமையும். நால்வகைக் கதிக ளுள் "பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்தம் பாடும்" என்பத னால் மக்கட்கதி நரக கதி தேவகதி என்னும் முக்கதியும் கூறப்பட் டமையின் "ஆர்பாடும்" என்றது விலங்குகதியைக் குறித்து நின்றது. ஆர் என்பது உயர்திணைக்கணன்றி அஃறிணைக்கண்ணும் வருதலை, "என் னுள்ளமார் ஞானங்களார்" (கோத்தும்பி 2) என அடிகள் மற்றோ ரிடத்து அருளியமையானுமறிக. பிறப்பற அருளி ஆட்கொண்டருளி யமையின் "பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர் தம்பாடும் ஆர் பாடும் சாராவகையருளி ஆண்டுகொண்ட" என்றார். ஆண்டுகொண்ட நேர்பு ஆடல்-ஆட்கொண்டருளிய நேர்ச்சியாகிய திருவிளையாடல் 'ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்" (திருவெம்பா 11) என அடிகள் அருளியதும் காண்க. நேர்பாடல் பாடி எனக்கொண்டு நேர்மையின் புகழினைப் பாடிக்கொண்டு என்பாருமுளர், சீர் பாடல் -- சிறந்தபுகழ், என்றது? இறைவன் பொருள்சேர் புகழினை. பாடல் - புகழ். "பாடல்சால் சிறப்பிற் சினையவுஞ் சுனையவும்'' (கலி. 28) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஆர்பாடும் சாராவகையருளி ஆண்டுகொண்ட நேர்பாடல் பாடி சீர்பாடல் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என வினைமுடிபு செய்க. இதன்கண் ஆர்பாடும் சாராவகையருளி ஆண்டுகொண்ட தனிப் பெரியோன் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க, 13
திருத்தெள்ளேணம் கத்தார் பக்கமும் ஆர் பாடும் சாரா வகை அருளி - வேறு எவ்வுல கத்தார் பக்கமும் சென்று சேராத வகையில் அருள்செய்து ஆண்டு கொண்ட - என்னை ஆட்கொண்டருளிய நேர்பு ஆடல்பாடி - நேர்ச்சி யாகிய திருவிளையாடலைப் பாடியும் நினைப்பு அரிய தனி பெரியோன் சீர் பாடல் பாடி- நினைத்தற்கரிய ஒப்பற்ற பெருமையையுடைய இறைவனது சிறந்த புகழைப்பாடியும் நாம் தெள்ளேணம் கொட் டாமோ -நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோ மாசு . 713 வைபப்ஸ் பார்பாடும் பாதாளத்தார் பாடும் விண்ணோர்தம் பாடும் வேறு ஆர்பாடும் சென்று சேராத வகையில் அருள்செய்து ஆட்கொண்டரு ளிய சிவபெருமானது திருவிளையாடல்களைப் பாடியும் அப்பெருமா னது சீர்பாடலைப் பாடியும் தெள்ளேணம் கொட்டுவோமாக என்ப தாம் . பார் ஆகுபெயராய் மக்களை உணர்த்தியது . பாரார் பாடும் என் பது பார் பாடும் என நின்றது எனக் கொள்ளினும் அமையும் . பாடு பக்கம் . இனி இடம் எனக்கொள்ளினும் அமையும் . நால்வகைக் கதிக ளுள் பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்தம் பாடும் என்பத னால் மக்கட்கதி நரக கதி தேவகதி என்னும் முக்கதியும் கூறப்பட் டமையின் ஆர்பாடும் என்றது விலங்குகதியைக் குறித்து நின்றது . ஆர் என்பது உயர்திணைக்கணன்றி அஃறிணைக்கண்ணும் வருதலை என் னுள்ளமார் ஞானங்களார் ( கோத்தும்பி 2 ) என அடிகள் மற்றோ ரிடத்து அருளியமையானுமறிக . பிறப்பற அருளி ஆட்கொண்டருளி யமையின் பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர் தம்பாடும் ஆர் பாடும் சாராவகையருளி ஆண்டுகொண்ட என்றார் . ஆண்டுகொண்ட நேர்பு ஆடல் - ஆட்கொண்டருளிய நேர்ச்சியாகிய திருவிளையாடல் ' ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் ( திருவெம்பா 11 ) என அடிகள் அருளியதும் காண்க . நேர்பாடல் பாடி எனக்கொண்டு நேர்மையின் புகழினைப் பாடிக்கொண்டு என்பாருமுளர் சீர் பாடல் -- சிறந்தபுகழ் என்றது ? இறைவன் பொருள்சேர் புகழினை . பாடல் - புகழ் . பாடல்சால் சிறப்பிற் சினையவுஞ் சுனையவும் ' ' ( கலி . 28 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஆர்பாடும் சாராவகையருளி ஆண்டுகொண்ட நேர்பாடல் பாடி சீர்பாடல் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என வினைமுடிபு செய்க . இதன்கண் ஆர்பாடும் சாராவகையருளி ஆண்டுகொண்ட தனிப் பெரியோன் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க 13