திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கவலை கெடுத்துத் தந்தருளும் செயலைப் பரவி நாம் தெள்ளே ணம் கொட்டுவோம் என வினைமுடிபு செய்க. 718 இதன்கண் கழலிணைகள் தந்தருளும் செயல் என்பதனால் சிவனோ டடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 17 252 வான்கெட்டு மாருதமாய்ந் தழனீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டெ னுள்ளமும் போய் நான் கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. ப-ரை. வான் கட்டு - பூதாகாயம் அழிந்து, மாருதம் மாய்ந்து - காற்று அழிந்து, அழல் நீர் மண் கெடினும் - தீ நீர் நிலம் என்னும் ஏனைப் பூதங்களும் கெட்டழிந்து போனாலும், தான் கெட் டல் இன்றி - தான் கெட்டுப்போதலின்றி, சலிப்பு அறியா தன்மை யனுக்கு - அசைதலில்லாத தன்மையையுடைய பெருமானை அடையும் பொருட்டு, என் ஊன்கெட்டு - எனது உடம்பு அழிந்து, உயிர்கெட்டு- உயிர்ப்பு ஒழிந்து, உணர்வு கெட்டு - சுட்டறிவு ஒழிந்து, உள்ளமும் போய் - அந்தக்கரணங்களும் அழிந்து, நான்கெட்ட ஆபாடி - தற் போதமும் அழிந்த விதத்தைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ- நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களும் அழிந்த காலத்தும் தான் அழிதலின்றிச் சலிப்பு அறியாத் தன்மையையுடைய பெருமான் பொருட்டு ஊன்கெட்டு உணர்வுகெட்டு உள்ளமும் போய், தற்போத மும் கெட்ட விதத்தைப் பாடி, நாம் தெள்ளேணம் என்னும் பறையி னைக் கொட்டுவோமாக என்பதாம். வான்கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் தான் கெட்டலின்றிச்சலிப்பறியாத் தன்மையன் என்பதனால் தன்வியாபகத் துள் அடங்கிய ஐம் பூதங்களும் கெட்டொழியினும் தான் கெடுதலின் றிச் சஞ்சாரமில்லாதவன் என இறைவன் இயல்பு கூறியவாறு. "பூதங் கள் தோறுநின் றாயெனினல்லாற் போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர், கீதங்கள் பாடுதல் ஆடுதலல்வால்" (திருப்பள்ளி. 5) என வருதல் காண்க. அண்டத்து ஐம்பெரும் பூதங்களின் கேட்டினை உணர்த்தியது போலாகப் பிண்டத்தும் ஊன் உயிர் உணர்வு உள்ளம் நான் என்ற ஐந்தின் ஒடுக்கமும் கூறியமை வியக்கத்தக்கது. கெடலின்றி என்பது எதுகையின்பம் நோக்கி கெட்டலின்றி என வந்தது. சலிப்பறியாமை -அசைவின்மை. துன்பமின்மையுமாம். உணர்வு - சுட்டியுணரும் அறிவு. உள்ளமும் என்ற உம்மையால் மனம்
திருவாசக ஆராய்ச்சியுரை கவலை கெடுத்துத் தந்தருளும் செயலைப் பரவி நாம் தெள்ளே ணம் கொட்டுவோம் என வினைமுடிபு செய்க . 718 இதன்கண் கழலிணைகள் தந்தருளும் செயல் என்பதனால் சிவனோ டடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 17 252 வான்கெட்டு மாருதமாய்ந் தழனீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டெ னுள்ளமும் போய் நான் கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . வான் கட்டு - பூதாகாயம் அழிந்து மாருதம் மாய்ந்து - காற்று அழிந்து அழல் நீர் மண் கெடினும் - தீ நீர் நிலம் என்னும் ஏனைப் பூதங்களும் கெட்டழிந்து போனாலும் தான் கெட் டல் இன்றி - தான் கெட்டுப்போதலின்றி சலிப்பு அறியா தன்மை யனுக்கு - அசைதலில்லாத தன்மையையுடைய பெருமானை அடையும் பொருட்டு என் ஊன்கெட்டு - எனது உடம்பு அழிந்து உயிர்கெட்டு உயிர்ப்பு ஒழிந்து உணர்வு கெட்டு - சுட்டறிவு ஒழிந்து உள்ளமும் போய் - அந்தக்கரணங்களும் அழிந்து நான்கெட்ட ஆபாடி - தற் போதமும் அழிந்த விதத்தைப் பாடி தெள்ளேணம் கொட்டாமோ நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களும் அழிந்த காலத்தும் தான் அழிதலின்றிச் சலிப்பு அறியாத் தன்மையையுடைய பெருமான் பொருட்டு ஊன்கெட்டு உணர்வுகெட்டு உள்ளமும் போய் தற்போத மும் கெட்ட விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் என்னும் பறையி னைக் கொட்டுவோமாக என்பதாம் . வான்கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் தான் கெட்டலின்றிச்சலிப்பறியாத் தன்மையன் என்பதனால் தன்வியாபகத் துள் அடங்கிய ஐம் பூதங்களும் கெட்டொழியினும் தான் கெடுதலின் றிச் சஞ்சாரமில்லாதவன் என இறைவன் இயல்பு கூறியவாறு . பூதங் கள் தோறுநின் றாயெனினல்லாற் போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதலல்வால் ( திருப்பள்ளி . 5 ) என வருதல் காண்க . அண்டத்து ஐம்பெரும் பூதங்களின் கேட்டினை உணர்த்தியது போலாகப் பிண்டத்தும் ஊன் உயிர் உணர்வு உள்ளம் நான் என்ற ஐந்தின் ஒடுக்கமும் கூறியமை வியக்கத்தக்கது . கெடலின்றி என்பது எதுகையின்பம் நோக்கி கெட்டலின்றி என வந்தது . சலிப்பறியாமை -அசைவின்மை . துன்பமின்மையுமாம் . உணர்வு - சுட்டியுணரும் அறிவு . உள்ளமும் என்ற உம்மையால் மனம்