திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் ப - ரை : குலம் பாடி - இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக் கோயில்களைப்பாடியும், கொக்கு இறகும் பாடி - அவ்விறைவனது தலை யிலணிந்த கொக்கு இறகினைப் புகழ்ந்து பாடியும், கோல் வளையாள் நலம் பாடி - திரட்சியையுடைய வளையலை அணிந்த உமையம்மையின் நன்மைகளைப் பாடியும், நஞ்சு உண்ட ஆ(று) பாடி-தேவர்களை உய்வித் தற்பொருட்டு நஞ்சுண்ட விதத்தைப் பாடியும், அலம்பு ஆர்புனல் தில்லை அம்பலத்தே நாடோறும் ஆடுகின்ற - ஒலிக்கின்ற நிறைந்த நீர் வளத்தினையுடைய தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே நாடோ றும் திருக்கூத்தினை இயற்றுகின்ற அவ்விறைவனது, சிலம்பு ஆடல் பாடி - கழல் அசைதலைப் பாடியும், நாம் தெள்ளேணம் கொட்டா மோ - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. இறைவனது குலம் பாடியும், அவ்விறைவன் அணிந்த கொக்கிற கினைப் பாடியும், உமையம்மையின் நன்மைகளைப் பாடியும், தேவர் பொருட்டு நஞ்சு உண்ட விதத்தினைப் பாடியும், தில்லைத் திருச்சிற்றம் பலத்தின் கண்ணே நாடோறும் திருக்கூத்தினை இயற்றுகின்ற அவ் விறைவனது சிலம் பாடலைப் பாடியும், நாம் தெள்ளேணம் கொட்டு வோமாக என்பதாம். குலம் - கோயில் ''ஊரானோர் தேவகுலம்'' என்புழியும் இப்பொ ருட்டாதல் காண்க. கொக்கிறகு என்றது கொக்கு வடிவங்கொண்ட குரண்டாசுரனைக் கொன்று அவன் இறகைப் பிடுங்கி இறைவன் தரித் துக் கொண்டமையைக் குறித்தது. "ஏங்கி யமரர் இரிந்தோட வேதுரந்த ஓங்கு குரண்டத் துருக்கொண்ட தானவனைத் தீங்கு பெறத்தடிந்து சின்னமா யோர்சிறையை வாங்கி யணிந்தருள் இங்கென்பால் வைத்திலையே'' 721 (சயந்தன் புலம்.64) எனக் கந்தபுராணத்து வருதல் காண்க, கொக்கிறகைச் சென்னியில் தரித்தமை, 05 ''கொகின்னிறகின்னொடு வன்னிபுக் கசடையார்க்கு" (ஞான. 36-3) "கொக்கிறகு சென்னியுடையான் கண்டாய்' (நாவு. 252-2) "மொய்த்த வெண்டலை கொக்கிறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்'' (சுந்.36-8) எனத் தேவாரத்து வருதலானு மறிக. "பொரியெனத் தாரகைக் கண்ணுடல் குத்தி யடுந்திற லினைய கொடுந்தொழில் பெருக்கிய 76
திருத்தெள்ளேணம் - ரை : குலம் பாடி - இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக் கோயில்களைப்பாடியும் கொக்கு இறகும் பாடி - அவ்விறைவனது தலை யிலணிந்த கொக்கு இறகினைப் புகழ்ந்து பாடியும் கோல் வளையாள் நலம் பாடி - திரட்சியையுடைய வளையலை அணிந்த உமையம்மையின் நன்மைகளைப் பாடியும் நஞ்சு உண்ட ( று ) பாடி - தேவர்களை உய்வித் தற்பொருட்டு நஞ்சுண்ட விதத்தைப் பாடியும் அலம்பு ஆர்புனல் தில்லை அம்பலத்தே நாடோறும் ஆடுகின்ற - ஒலிக்கின்ற நிறைந்த நீர் வளத்தினையுடைய தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே நாடோ றும் திருக்கூத்தினை இயற்றுகின்ற அவ்விறைவனது சிலம்பு ஆடல் பாடி - கழல் அசைதலைப் பாடியும் நாம் தெள்ளேணம் கொட்டா மோ - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . இறைவனது குலம் பாடியும் அவ்விறைவன் அணிந்த கொக்கிற கினைப் பாடியும் உமையம்மையின் நன்மைகளைப் பாடியும் தேவர் பொருட்டு நஞ்சு உண்ட விதத்தினைப் பாடியும் தில்லைத் திருச்சிற்றம் பலத்தின் கண்ணே நாடோறும் திருக்கூத்தினை இயற்றுகின்ற அவ் விறைவனது சிலம் பாடலைப் பாடியும் நாம் தெள்ளேணம் கொட்டு வோமாக என்பதாம் . குலம் - கோயில் ' ' ஊரானோர் தேவகுலம் ' ' என்புழியும் இப்பொ ருட்டாதல் காண்க . கொக்கிறகு என்றது கொக்கு வடிவங்கொண்ட குரண்டாசுரனைக் கொன்று அவன் இறகைப் பிடுங்கி இறைவன் தரித் துக் கொண்டமையைக் குறித்தது . ஏங்கி யமரர் இரிந்தோட வேதுரந்த ஓங்கு குரண்டத் துருக்கொண்ட தானவனைத் தீங்கு பெறத்தடிந்து சின்னமா யோர்சிறையை வாங்கி யணிந்தருள் இங்கென்பால் வைத்திலையே ' ' 721 ( சயந்தன் புலம் .64 ) எனக் கந்தபுராணத்து வருதல் காண்க கொக்கிறகைச் சென்னியில் தரித்தமை 05 ' ' கொகின்னிறகின்னொடு வன்னிபுக் கசடையார்க்கு ( ஞான . 36-3 ) கொக்கிறகு சென்னியுடையான் கண்டாய் ' ( நாவு . 252-2 ) மொய்த்த வெண்டலை கொக்கிறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம் ' ' ( சுந்.36-8 ) எனத் தேவாரத்து வருதலானு மறிக . பொரியெனத் தாரகைக் கண்ணுடல் குத்தி யடுந்திற லினைய கொடுந்தொழில் பெருக்கிய 76