திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

722 திருவாசக ஆராய்ச்சியுரை மாயா வரத்த பெருங்குரு கடித்து வெண்சிறை முடித்த செஞ்சடைப் பெருமான்" (67-20-4) எனக் கல்லாடத்து வருதலும் ஈண்டு அறியற்பாலது. இனி, கொக்கிறகு என்பதற்கு வேடுவவடிவங் கொண்டபோது இறைவன் சூடிய கொக் கிறகு எனினுமாம். கொக்கிறகு மந்தாரை மலர் எனினுமமையும். கோல்வளை - திரட்சியையுடைய வளை. கோல் வளையாள் என்றது உமையம்மையை, கொம்பமருங் கொடிமருங்குற் கோல்வளையாள் ஒருபால் (நாவு. 13-2) எனவும் "கொடிகள் பூ நுண்ணிடையாள் கோல் வளையா ளவளோடும்" (சுந். 30-7) எனவும் தேவாரத்து வருவனவுங் காண்க. கோல்வளையாள் நலம் என்றது இறைவனது திரு வருட் சத்தி உயிர்களைப் பக்குவப்படுத்தும் நன்மையை. "கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி" (திருவெம்பாவை 17) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே திருக்கூத்து என்றுமுள தாதல் பற்றி "நாடோறும் தில்லையம்பலத்தே யாடுகின்ற" என்றார். அலம்பு புனல் ஆர் எனக் கூட்டி ஒலிக்கும் நீர் நிறைந்த நீர்நிலைகளையு டைய எனினுமாம். அலம்பார் புனற்றில்லை என்றது தில்லையின் நீர் வளத்தைக் கூறியபடி. ' சிறைவான் புனற்றில்லை'' (திருக்கோவை.20) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. சிலம்பு ஆடல்-கழல் அசைதல். இறைவன் திருவடிக்கண் அணிந்த கழலைச் சிலம்பு என்று கூறுதலை வாதவூரினில் வந்தினிதருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்" (கீர்த்தி 52 - 3) என அடிகள் மற்றோரிடத்து அருளியவாற் றானுமறிக. குலம் பாடிக் கொக்கிறகும் பாடி வளையாள் நலம்பாடி நஞ்சுண் டவாபாடிச் சிலம்பாடல் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என வினைமுடிபுசெய்க. இதன் கண் 'குலம்பாடிக் கொக்கிறகும் பாடி வளையாள் நலம் பாடி நஞ்சுண்டவாபாடிச் சிலம்பாடல்பாடி" என்பவற்றால் சிவனோ டடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க, 20
722 திருவாசக ஆராய்ச்சியுரை மாயா வரத்த பெருங்குரு கடித்து வெண்சிறை முடித்த செஞ்சடைப் பெருமான் ( 67-20-4 ) எனக் கல்லாடத்து வருதலும் ஈண்டு அறியற்பாலது . இனி கொக்கிறகு என்பதற்கு வேடுவவடிவங் கொண்டபோது இறைவன் சூடிய கொக் கிறகு எனினுமாம் . கொக்கிறகு மந்தாரை மலர் எனினுமமையும் . கோல்வளை - திரட்சியையுடைய வளை . கோல் வளையாள் என்றது உமையம்மையை கொம்பமருங் கொடிமருங்குற் கோல்வளையாள் ஒருபால் ( நாவு . 13-2 ) எனவும் கொடிகள் பூ நுண்ணிடையாள் கோல் வளையா ளவளோடும் ( சுந் . 30-7 ) எனவும் தேவாரத்து வருவனவுங் காண்க . கோல்வளையாள் நலம் என்றது இறைவனது திரு வருட் சத்தி உயிர்களைப் பக்குவப்படுத்தும் நன்மையை . கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி ( திருவெம்பாவை 17 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க . தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே திருக்கூத்து என்றுமுள தாதல் பற்றி நாடோறும் தில்லையம்பலத்தே யாடுகின்ற என்றார் . அலம்பு புனல் ஆர் எனக் கூட்டி ஒலிக்கும் நீர் நிறைந்த நீர்நிலைகளையு டைய எனினுமாம் . அலம்பார் புனற்றில்லை என்றது தில்லையின் நீர் வளத்தைக் கூறியபடி . ' சிறைவான் புனற்றில்லை ' ' ( திருக்கோவை .20 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . சிலம்பு ஆடல் - கழல் அசைதல் . இறைவன் திருவடிக்கண் அணிந்த கழலைச் சிலம்பு என்று கூறுதலை வாதவூரினில் வந்தினிதருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் ( கீர்த்தி 52 - 3 ) என அடிகள் மற்றோரிடத்து அருளியவாற் றானுமறிக . குலம் பாடிக் கொக்கிறகும் பாடி வளையாள் நலம்பாடி நஞ்சுண் டவாபாடிச் சிலம்பாடல் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என வினைமுடிபுசெய்க . இதன் கண் ' குலம்பாடிக் கொக்கிறகும் பாடி வளையாள் நலம் பாடி நஞ்சுண்டவாபாடிச் சிலம்பாடல்பாடி என்பவற்றால் சிவனோ டடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க 20